Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Sunday, 23 August 2015

வாழ சூத்திரம் Formula to Live

ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ
ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம்
சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம்
சிவ‌ ச‌ம்போ!

நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம்
நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம்
சிவ‌ ச‌ம்போ!

ம‌னிதா உன் ஜென்ம‌த்தில் என்னாளும் ந‌ன்னாளாம்
ம‌றுநாளை எண்ணாதே இன்னாளே பொன்னாளாம்
ப‌ல்லாக்கைத் தூக்காதே ப‌ல்லாக்கில் நீ ஏறு

உன்னாயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு 

அப்பாவும் தாத்தாவும் வ‌ந்தார்க‌ள் போனார்க‌ள்
த‌ப்பென்ன‌ ச‌ரியென்ன‌ எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்க‌ள் த‌ப்பாக‌ நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்ப‌த்தைத் த‌ள்ளாதே!

க‌ல்லை நீ தின்றாலும் செறிக்கின்ற‌ நாளின்று
கால‌ங்க‌ள் போனாலே தின்னாதே என்பார்க‌ள்.

இதை விட சிறப்பாக மனிதன் வாழ வழி சொல்ல முடியாது! கவியரசரின் வைர வரிகள்!!