Thursday 3 March 2016

அமலா பால் புடிச்சிருக்கு...

காலைல குளிச்சுட்டு வந்து  கூடத்துல சாப்பிட உட்காரந்தேன். டிவிடில வேலையில்லா பட்டதாரி படம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. என் பொண்ணு வேகமா சமையல் கட்டிலிருந்து ஓடி வந்து " ஐயா... அம்மா அமலா பால் புடிச்சிருக்குன்னு சொன்னாங்க!" என்றாள்!

நானும் "ஆமாடா தங்கம்... அமலா பால் சூப்பரா இருக்காங்கல்ல...? பாவம்... சின்ன வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு!! " என்றேன். "அப்படியே உங்க அம்மா நல்ல மூடுல இருக்கும் போதே, இன்னொரு சப்பாத்தி வாங்கிட்டு வாடா செல்லம்!" என்றேன்!

டக்குனு சமையல் கட்டுக்கு ஓடுனா பொண்ணு. நானும் சப்பாத்தி வரும்னு ஆவலா இருந்தேன்... சப்பாத்தி வரல, சப்பாத்தி கட்டையோட வீட்டுக்காரம்மா தான் வந்தாங்க! "விவஸ்தை கெட்ட மனுசா... பிள்ளை கிட்ட என்னத்த பேசனும்னு விவஸ்தையே கிடையாதா?"னு கேட்டா.

ஆகா... எங்கேயோ வில்லங்கம் ஆயிடுச்சுன்னு புரிஞ்சிடுச்சு. "இல்லமா.. நீ சொன்னத தான நானும் கொஞ்சம் எக்ஸ்டராவா திரும்ப சொன்னேன்"னு பவ்யமா சொன்னேன்! "ஏய்... எருமை மாடே! (யாரன்னு தெரியல?!) என்னடி சொல்லி தொலைஞ்ச உங்கையன் கிட்ட?!"னு கேக்க! பயபுள்ள "இல்லம்மா... நான் அடுப்புல பால் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்! ஐயா தான் அமலா பால் சூப்பரா இருக்காங்கன்னு சொன்னாரு"ன்னு சொல்ல...

எனக்கு அப்பதான் புரிஞ்சுது, நேத்து ராத்திரி அடி வாங்குனதுக்கு இன்னிக்கு காலைல சூணியம் வச்சிருக்கு குட்டி சாத்தான்!!

No comments: