Monday 29 September 2014

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்

தமிழ் இலக்கியத்தில் அறிவியல்  சிந்தனைகள்
****************************************************
 
ழந்தமிழரின் வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம்வரையிலும் அறிவியல் பரவிக் கிடக்கின்றது. இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டும் இல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றன.  இன்று நம் வாழ்வின் அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேராக பழந்தமிழர் வாழ்க்கை அமைந்தது என்றால் மிகையில்லை. இதனைப் பல தமிழ் இலக்கியங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன.
 
யற்கை அறிவியல் ஔவை திருக்குறளின் பெருமையை உரைக்கும்போது, 
 
அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி
குறுகத் தெறித்த குறள்.
 
என்கிறார். அணு என்பது கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய மூலக்கூறு என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. ஆயினும் பன்னூறு ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த ஔவை அதனை அறிந்திருந்ததும் அணுவைப் பிளப்பது குறித்து பாடலில் கூறியிருப்பதும் வியப்பிற்குரியது. 
 
இடையின்றி அணுக்களெல்லாம் சுற்றுமென இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்
 
என்று பாரதி அணுக்களின் அசைவுகள் குறித்து அழகு தமிழ் படைக்கின்றார். 
 
உலகத்தின் தோற்றம்
 
ம்பூதங்களால் உருவானது இவ்வுலகமெனில் அது எவ்விதம் என்ற கேள்வி அறிவியலுக்கு சவாலாக அமைந்தது ஒரு காலத்தில். ஆனால் பரிபாடலில் ஒரு பாடலில்,
 
கருவளர் வானத்திசை யிற் தோன்றி
உருவறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த உளமுழ் ஊழியும்
சென்தீச் சுடரிய ஊழியும் பணியொடு
தன்பெயல் தலை இய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள முழ்கியார் தருபு
உள்ளிபிகிய இருநிலத் தூழியும் (பரி.2:5- 12)
 
என்று கூறப்பட்டுள்ளது. இதில் வானிலிருந்து காற்றும் காற்றிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலைகளைக் கூறியுள்ளார். இவை மட்டும் இன்றி கதிரவனில் பிரிந்து பூமி நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்தது என்றும் அது  காலப்போக்கில்   சிறிது   சிறிதாக    குளிர்ந்து    பனிப்படலமாக   மாறி,    பின் நெடுநாட்களுக்குப் பிறகு நிலம் தோன்றியது என்றும் உலகத்தின் தோற்றம் குறித்த பல அறிவியல் உண்மைகளை விளக்குகிறது. அறிவியல் தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் தமிழரின் அண்டம் குறித்த அறிவு எண்ண எண்ண வியப்பிலாழ்த்துகிறது. 
 
மழை பெய்யும் முறை

மேகம் கடல் நீரை பெற்று மழையாகப் பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. இது ஒரு நாள் ஆய்வின் முடிவல்ல. பல்லாண்டுகளின் பலன். ஆனால் இதனை விளக்கும்முகமாக,
 
நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்தளும்பும் தன்
பொறை தவிர்பு அசைவிட (பரி. 6:1 - 2)
 
என்று பாரிபாடலில்  முகில்கள் கடலின்கண் நீரை முகந்து கொண்டு வந்து ஊழி முடிவின்கண் முழுகுவிக்க முயன்றது போல் மழை பெய்தது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. இவை ஆய்வின் வெளிப்பாடுகள் அல்ல அன்றைய தமிழரின் அறிவின் வெளிப்பாடுகள்.
 
மருத்துவ அறிவியல்

ன்றைய மருத்துவ உலகம் மனிதனைக் காப்பாற்ற மரணத்தின் வாயில் வரை செல்கிறது. குளோனிங் முறையென்று உயிரின் மாதிரிகளாக புதிய உயிர்களை உருவாக்கும் அளவு வளர்ந்துவிட்டது. ஆனால் மருத்துவ படிப்புகளோ, செயல்முறை பயிற்சிகளோ இல்லாத அந்தக் காலகட்டத்திலும் சித்தர்களும், சிறந்த வைத்தியர்களும் வாழ்ந்துள்ளதை அவர்கள் படைத்த  இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.
 
மாதா உதிரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதிரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதிரத்தில் வைத்த குழவிக்கே  (திருமந்திரம்)
 
என்று திருமூலர் இயற்றிய திருமந்திரப் பாடலைக் கேட்கும்போது தாயின் உதிரத்தில் மலம் மிகுந்தால் பிறக்கும் குழுந்தை மந்தபுத்தி உடையதாகவும் நீர் மிகுந்தால் குழந்தை ஊமையாகவும் மலம், நீர் இரண்டும் மிகுதியாக இருந்தால் குழந்தை குருடாகப் பிறக்கும் என்ற கருத்துக்கள் இப்பாடலில் பயின்று வருகின்றன. இக்கருத்துக்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளிலும் அமைந்திருப்பதை அறிய முடிகிறது.
 
மாற்றுருப்பு பொருத்துதல்

ழுதுபட்ட ஒரு உறுப்பை எடுத்துவிட்டு வேறொரு உறுப்பைப் பொருத்துதல் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை,  இதனைப் பற்றிய குறிப்பொன்று சிலப்பில் காணப்படுகின்றது.
 
நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்
ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் (சிலப்பு)
 
 
 
கீரந்தையின் இலக்கக் கதவைத் தான் தட்டியதற்குத் தண்டனையாக, தன் கையைத் தானே துண்டித்துக் கொள்கிறான் பாண்டியன். அதன்பின் பொன்னாலாகிய கையைச் செய்து வைத்துக் கொண்டான். அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என அழைக்கப்பட்டான். என்கிறது அச்செய்தி, உறுப்பினை இழந்த ஒருவன் செயற்கை உறுப்பினைப் பொருத்திக்கொண்டு பயன்படுத்தியதை இப்பாடலில் உணரலாம். 
 
பெரியபுராணத்திலும் இதைப் போன்றே ஒரு நிகழ்வினைக் காண முடிகிறது. சிவன் மீது மிகுந்த பற்று கொண்ட கண்ணப்பர் ஒரு நாள் இறைவன் கண்ணிலிருந்து குருதி வழிவதைக் கண்டார். பதறினார் உடனே மூலிகைகளை பறித்துக் கொண்டு வந்து பிழிந்து அதைக் அக்கண்ணில் விடுகிறார். குருதி நிற்கவில்லை. எனவே சற்றும் தாமதிக்காது தனது கண்ணைத் தோண்டி அவ்விடத்தில் அப்புகின்றார்.  அங்கு குருதி வழிவது நிற்கிறது.  இதனை,
 
இதற்கினி என்கண் அம்பால் இடந்தப்பின் எந்தையார்கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று
மதர்த்தெழும் உள்ளத்தோடு மகிழ்ந்துமுன் இருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணில் அப்ப (பெ.பு.2)
 
என்ற அடிகளில் கூறுகின்றார்.  இன்று கண்பார்வையற்றவர்க்கு பிறருடைய கண்ணினை வைத்து அறுவை சிகிச்சை செய்து பார்வை பெற வைக்கும் மருத்துவ அறிவினை மிக எளிமையாக கண்ணப்பர் கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சேக்கிழார். மேலும், 
அறிவியல் உலகின் அறிய சாதனையான அறுவைச் சிகிச்சையினை பதிற்றுப்பத்தில்,
 
மீன்றேர்கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி
நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்
அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி (பதிற்றுப்பத்து 42: 2 - 6)
 
என்று ஐந்தாம் பத்தின் இரண்டாம் பாடலடியில் போரில் வெட்டுண்ட உடலை வெள்ளுசி கொண்டு தைத்த மருத்துவன் செயலை விளக்குகின்றன. மேலும், இத்தகைய நிகழ்வு ஒன்று புறப்பாடலிலும் காணப்படுகிறது.
 
செருவா யுழக்கிக் குருதி யோட்டிக்
கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியுங் களையாப் புண்ணர் (புறம். 353)
 
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனாரின் பாடல் வரிகளில் வெட்டுண்டு கிழிந்த உடல் தசையினைத் தைத்து மருந்தூட்டி அப்புண்ணின் மேல் பஞ்சினை வைத்து சிகிச்சை அளித்தமையை உணர்த்துகின்றன.  இவை அனைத்தையும் பார்க்கும் போது இன்றைய மருத்துவ முறையின் நவீனமான சிகிக்சைகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழரால் கையாளப்பட்டு வந்துள்ளன என்பது பெருமை கொள்ளச் செய்கின்றன.
 
இயற்பியல் அறிவு

  மிழரின் மருத்துவம் குறித்த அறிவு மட்டுமன்றி அவர்களின் இயற்பியல் அறிவும் நம்மை வியக்க வைக்கிறது. அமுதாம்பிகை பிள்ளைத் தமிழில் ஊசற் பருவத்தில், அமுதாம்பிகை ஊசலாடும் நிகழ்வினைக் குறிக்கும்போது சிவஞான முனிவர்,
 
மகரக் குழைகளும் ஊசலாட
பங்கய மடமாதர் நோக்கி இருவேம்
ஆட்ட - அவ்வூசலில் பாய்ந்திலது
இவ்வூசல் என - நனி ஆட்டுதோறும்
நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத் 
திங்கள் சாய (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் - ஊசல் பருவம்)
 
என்ற அடிகளில் அமுதாம்பிகை ஆடும் ஊசலின் கயிறு  நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகிறது என்றும் ஆனால் அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில் தொங்குவதால் விரைவாக ஆடுகிறது என்றும் கூறியுள்ளார். இதனையே கலிலியோ ஊசலின் நீளம் குறித்த தம் ஆய்வில் ‘‘ஊசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும்’’ என்றும் கூறியுள்ளார்.  இவ்வாறு ஆய்வுகளின் மூலமாக அறியப்பட்ட பல அறிவியல் உண்மைகள் வெறும் அனுபவத்தின் மூலமாகவும்,  பண்டைய தமிழர்களின் அறிவுத் தேடலின் விளைவுகளாகவும் பெறப்பட்டதை உணரலாம். 
 
அன்றைய மனிதன் கண்ட கனவை  இன்றைய அறிவியல் முன்னேற்றம்  நிஜமாக்கியது.   தேடல் இருக்கும் இடத்தில்தான் வெற்றி  கிடைக்கிறது.  பறவையைக் கண்ட மனிதன் தானும் பறக்க நினைத்தான். இறக்கைகள் இல்லாதபோதும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. விளைவு விமானத்தின் துணையோடு விண்ணில் பறந்தான்.  இவ்விமானங்கள் பற்றிய பல குறிப்புகள்  சங்கப் பாடல்களிலேயே பயின்று வந்துள்ளமையைக் காண முடிகிறது. 
 
வலவன் ஏவ வானவூர்தி (புறம் 27)
 
எனும் பாடல் அடியில் வானவூர்தி என்ற அற்புதமான சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை காணலாம். இதைப்போலவே சிலப்பதிகாரத்தில் கண்ணகி கோவலனோடு ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய விமான ஊர்தியில் ஏறிச் சென்றதாக ஒரு காட்சி இதனை இளங்கோ,
 
வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னோடு
வானவூர்தி ஏறினள் மாதோ
கானமலர் புரிகுழல் கண்ணகி தானென் (3:196 - 200 )  
 
என்ற வரிகளில் வாடாத பெரிய மலர்களை மழையாகப் சொரிந்து அமரர்களின் அரசனான இந்திரனும் வானோரும் வந்து வாழ்த்த தன் கணவன் கோவலனோடு கண்ணகி தேவ விமானத்தில் ஏறிச் சென்றாள் என்று கூறப்பட்டுள்ளது.
 
 
சீவக சிந்தாமணியில் ஒரு காட்சி, கட்டியங்காரன் போருக்கு வந்ததால் சச்சந்தன் தன் மனைவியை காப்பாற்ற அவளை மயிற்பொறியில் ஏற்றி அனுப்பினான் என்பது செய்தி.  கட்டியங்காரனின் வெற்றி முழக்கத்தை வான் வழியே கேட்டு விசயை மயங்கி வீழ்ந்தாள். மயிற்பொறி இடப்புறமாகத் திரும்பி ஒரு சுடுகாட்டில் இறங்கி கால் ஊன்றி நின்றது என்பதாக அமைந்துள்ளது. இதனை,
 
எஃகு என விளங்கி வான்கண் எறுகடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால் ஆய்மயில் ஊடும் ஆங்கண்
வெஃகிய புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து சோர்ந்தாள் (நா.இ., பா. 299)
 
என்றும்,
 
பல் பொறி நெற்றிக்
குஞ்சிமா மஞ்சை வீழ்ந்து கால்குவித்து இருந்து (நா.இ., பா,30)
 
போன்ற வரிகளிலும் வானவூர்தி பற்றிய செய்திகளைக் காண முடிகிறது.  மேலும் இதன் தொழில் நுட்பம் குறித்து கூறும்போதும், அதன் பொறியினை வலஞ்சுழி, இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அவ்வூர்தி வான் மேகங்களிடையே பறக்கவோ, தரையில் இறங்கவோ செய்ய முடியும் என்ற கற்பனை வியப்பிலாழ்த்துவதாக உள்ளது.  இதனை,
 
பண்தவழ் விரலில் பாவை
பொறிவலந் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் போழ்ந்து
விசும்பிடைப் பிறக்கும்: வெய்ய
புண்தவழ் வேல்கண் பாவை
பொறி இடந் திரிப்பத் தோகை
கண்டவர் மருள் வீழ்ந்து
கால் குவித் திருக்கும் அன்றே (நா.பா.239)
 
வை மட்டும் அல்லாமல் பல இலக்கியங்களில் இத்தகைய வானவூர்திகளைப் பற்றிப் பல பாடல்கள் காணப்படுகின்றன. பெருங்கதையிலும் இருப்பாலான விமானம் பறக்க பயன்படுத்தப்பட்டமை குறித்த குறிப்பு காணப்படுகின்றது. மனிதனின் பறக்க வேண்டும் என்ற ஆசை கற்பனையாக, இலக்கியமாக, தேடலாக தொடர்ந்து இன்று நிறைவேறியது. 
 
த்தகைய இலக்கியங்களை நோக்கும்போது தொகையும் பாட்டுமாக, சித்தர்களின் அரிய பொக்கிஷமாக, நாட்டுப்புற இலக்கியமாக இன்னும் எண்ணற்ற அறிவியல் உண்மைகள் இவற்றுள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உணர முடிகிறது. இவற்றுள் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் மூலம் மனித இனத்திற்குத் தேவையான பல மகத்தான  அறிவியல் அறிவும் பல மருத்துவத் தீர்வுகளும் கிடைக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
                                                                            -ஆய்வு திரு. S.கணிமொழி அவர்கள்

யதார்த்த சினிமாவும் மெல்லிய உணர்வுள்ள திரைப்படங்களும்

யதார்த்த சினிமாவும் மெல்லிய உணர்வுள்ள திரைப்படங்களும்
**********************************************************************



நேற்று மாலை கே டிவியில் "ரிதம்" படம் ஓடிக்கொண்டிருந்தது! "பூவே உனக்காக", "ரிதம்" போன்ற மெல்லிய உணர்வுகள் கொண்ட படங்களை பார்த்து வெகு நாட்களாகிவிட்டது! வண்முறை, சாதி, சதி, வில்லன், விரசம் ஆபாசம் என எதுவும் இல்லாம் உணர்வுகளை மட்டுமே காட்டும் படங்களை இப்பொழுதெல்லாம் பார்க்கமுடிவதில்லை! நான் ஒன்றும் டாகுமென்ட்ரி படங்களோ இல்லை குறும்படங்களோ பார்க்கும் அறிவு ஜீவி இல்லைதான். காஞ்சனா விரும்பி பார்க்கும் சராசரிதான். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்சை ரசிக்கும் விசிலடிச்சான் குஞ்சுதான்!! ஆனால் பூவே உனக்காக ரிதம் போன்ற படங்களுக்காக மனம் ஏங்கவே செய்கிறது. இந்த படங்கள் ஒளிபரப்பப் படும்போது பார்க்க துடிக்கிறேன். வெகு நாள் கழித்து மொழி மற்றும் அபியும் நானும் படங்களை பார்த்த பொழுது அந்த உணர்வு தெரிந்தது ஆனால் அதற்கு பிறகு அப்படி ஒரு படம் பார்த்ததாக நினைவே இல்லை!! வசந்த், விக்ரமன், சேரன். ராதா மோகன் போன்ற இயக்குனர்களால் கண்டிப்பாக மறுபடி அப்படி படங்களை மீண்டும் குடுக்க முடியும்.

ல்லோரையும் போல் புலம்புகிறேன் என்று நினைக்காதீர்கள். மூன்று குழந்தைகளின் தகப்பனாக சத்தியமாக சொல்கிறேன் தொலைகாட்சியை கூட உயிர்ப்பிக்க முடியவில்லை. ஏதோ பெரிதாக சீரயலில் மட்டும்தான் அழுகை என்றில்லை விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் யாரையாவது அழ வைக்கிறார்கள் இல்லையென்றால் அவர்களே அழுகிறார்கள்! அதை விட கொடுமை டான்ஸ் ஷோக்கள் அந்த காலத்து ரிக்கார்ட் டான்ஸ் பரவாயில்லை என்றாகிவிட்டது! மற்ற நிகழ்ச்சிகளை பார்க்கும் போது குழந்தைகளின் "சோட்டா பீம்" பர்ர்க்கலாம் போல. "டாம் & ஜெர்ரி"யும் வயது பாராமல் அனைவரையும் எக்காலமும் ரசிக்கவைக்கும் நல்ல கார்ட்டூன்!! திரைப்படங்களை பொறுத்த வரையில் இப்போதெல்லாம் குழந்தைகள் படத்தில் கூட ஒரு குத்து டான்ஸ் வருகிறது. சமீபத்தில் நாம் நல்ல படங்கள் என்று தேர்வு செய்து பார்க்கும் படங்களை கூட குழந்தைகளுடன் பார்க்கமுடியவில்லை! அவ்வளவு வண்முறை, விரசம்.

பியும் நானும் படத்தை பார்க்கும் போது நானும் பிரகாஷ்ராஜ் கேரக்டராக மாறிவிடுவதை தவிர்க்க முடியவில்லை! அந்த படம் பார்க்கும் போது இறுதி காட்சிகளில் என்னையும் அறியாமல் கண் கலங்கி விடுகிறது, இத்தனைக்கும் அது சோகப் ப்டம் இல்லை. அதுதான் மெல்லிய உணர்வுள்ள கதைகள் ஏற்படுத்தும் பாதிப்பு! இயக்குனர் திரு.ம்கேந்திரன் அவர்கள் படங்களில் சோகம் இழையோடினாலும் வன்முறை இருக்காது. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, என எந்த படங்களிலும் வன்முறையோ இல்லை விரசமோ பார்க்க முடியாது. இயக்குனர் K.பாலசந்தர் அவர்கள்தான் யதார்த்த சினிமா என்ற பெயரில் ஆபாசத்தையும் விரசத்தையும் முதலில் சினிமாவில் தெளித்தவர்!! அதற்கு பிறகு வந்த பாலுமகேந்திரா அவர்களும், பாரதிராஜா அவர்களும் இந்த காரியங்களை யதார்த்த சினிமா என்ற பெயரில் செவ்வனே தொடர்ந்தனர். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஜாதி மாறி, மதம் மாறி காதலித்தால் புரட்சி என்று கூறி பெரும் புரட்சியை "அலைகள் ஓய்வதில்லை"யில் ஏற்படுத்தியவர் பாரதிராஜா அவர்கள்."எனக்கு பிடித்தது உன்னை அல்ல உன் 16வயது" என்பது போன்ற சிறப்பான வசனங்களை 16 வயதினிலேவில் வெளிப்படுத்தியவர்!!

மூகத்தை யதார்த்த சினிமா என்ற பெயரில் சீரழித்த பங்கு இந்த மூவரையுமே சாரும். மதுரை "சிடி சினிமா": தியேட்டரில் போடும் ஆபாச படங்களை விட மோசமாக படம் எடுத்தவர் பாலசந்தர். இவரின் "அரங்கேற்றம்" படம் எனது பள்ளி மற்றும் கல்லுரி காலங்கள் வரை விரச சினிமா என்ற பெயரில் புகழ பெற்றது. அப்புறம் "மன்மத லீலை" என பல படங்களை சொல்லலாம்!! இவர்கள் ஏற்படுத்திய புரட்சியும் யதார்த்தமும் பெண்களை இழிவு ப்டுத்தியதே ஒழிய சமூகத்தில் ஒன்றையும் புரட்டி போடவில்லை என்பதே யதார்த்தம். அப்புறம் மெதுவாக வந்து அதே யதார்த்த சினிமா என்ற பெயரில் சீரழிவுகளை தொடர்ந்தவர் இயக்குனர் மணிரத்திணம். இப்போது இவர்கள் அனைவருமே காலாவதி ஆகிவிட்டாலும் சினிமா உலகில் ஒரு கேவலமான புரட்சியை தொடக்கி வைத்த பெருமை இவர்களை சாரும்!! இப்போதும் யதார்த்தம் மற்றும் ஹாலிவுட் பாணி என்ற பெயரில் வன்முறை மற்றும் விரசங்களோடு படம் எடுக்கும் இயக்குனர்கள் நிறைய இருக்க்றார்கள். இதில் முக்கிய இடம் கௌதம் மேணன் அவர்களுக்கு உண்டு.

வர்கள் அனைவருமே சமூகத்தை மிக மோசமாக சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரஞ்சையே இல்லாமல் செய்தவர்கள். கல்லா கட்டுவதும் பேர் எடுப்பதும் மட்டுமே இவர்கள் பிரதானம். இன்றைய இயக்குனர்களில் பாண்டியராஜ் அவர்கள், ராதாமோகன் அவர்கள் போன்றவர்கள் தான் தரமான படங்களை தருபவர்கள் என்று கூறுவேன். நேற்றைய சமுதாயத்தையும், இன்றைய சமுதாயத்தையும் நீங்கள் மாற்ற முடியாது இயக்குனர்களே ஆனால் நாளைய தலைமுறை களிமண் போன்றது எப்படி மாற்றினாலும் மாறும். அவர்களை சரியான வழியில் கொண்டு செல்லும் கடமை நமக்கு இருக்கிறது. அவர்களை கருத்தில் வைத்து படம் எடுங்கள்!

Saturday 27 September 2014

ஜெயலலிதா தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு பாடமா?

ஜெயலலிதா தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு பாடமா?
********************************************************



கிட்டதட்ட 18 வருடங்களுக்கு பிறகு நாடகத்தின் முதல் கட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது! ஆமாம் முதல் கட்டம்தான் அதை பிறகு பார்ப்போம். கிட்ட தட்ட 18 வருட போராட்டத்திற்கு பிறகு சட்டம் வென்றிருப்பதாக தெரியலாம். 66.5 கோடி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்டு 4 வருட சிறை தண்டனை பெற்றுள்ளார் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. 100 கோடி ரூபாய் அஅராதமும் விதிக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றுள்ளதால் பிரதிநிதித்துவ சட்டப்படி தானாகவே முதல்வர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்கிறார் ஜெயலலிதா. இது தான் முடிவா? இது அரசியல்வாதிகளுக்கு கூறும் படிப்பினை என்ன?

ழல் வழக்கில் முதல் முறையாக சிறை செல்லும் முதல்வரா இவர் என்றால் இல்லை! ஏற்கனவே இவரே ஒரு முறை சென்றிருக்கிறார்! மாட்டு தீவன ஊழல் வழக்கில் 17 வருடங்களுக்கு முன் லல்லு பிரசாத் யாதவ் நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டார். மீண்டும் 2013ல் 37 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறை சென்றுள்ளார். இதற்கு இடையில் மத்திய ரயில்வே கேபிணட் அமைச்சராக இருந்து அதை லாபகரமாக இயக்கி சாதனை படைத்தார்.  14 வருடங்களுக்கு முன் தில்லி நீதிமன்றத்தால் தீர்ப்பு கூறப்பட்டு சிறை சென்றார் முன்னாள் பிரதமராக இருந்த நரசிம்மராவ் அவர்கள். அவரது அந்திம காலம் மிக மோசமாக இருந்தது. அவருடன் துணைக்கு சென்றது அவரது கேபிணட் அமைச்சராக இருந்த பூட்டா சிங். 2006ல் ஜார்க்கன்ட் முதல்வராக இருந்த சிபு சோரன். அவரது வாரிசாக அடுத்து வந்த முதல்வர் மது கோடா அவர்களும் 2009ல் ஊழல் வழக்கில் சிறை சென்றார்.

வையெல்லாம் இந்திய அரசியலிலும் மாநில அரசியலிலும் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன? சத்தியமாக எந்தவிதமான நல்ல பாதிப்புகளையும் ஏற்படுத்த்வில்லை என்றே என்ணுகிறேன். இதற்கு அப்புறம் சவப்பெட்டி ஊழல், மஹாராஷ்டிராவில் ராணுவ வீரர்களின் வீடு கட்டுவதில் ஊழல், கர்நாடக ரெட்டி சகோதர்களின் ஊழலும், எடியூரப்பா ஊழல்களும் பிரசித்தி. ஒலிம்பிக் மெகா ஊழல்கள், 3ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என்று அடுத்தடுத்து வருபவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று எந்த குறையும் இல்லாமல் நிறைவாகவே வருகின்றன! அப்போ இந்த் தண்டனைகளும் தீர்ப்புகளும் குடுக்கும் படிப்பினை என்று ஏதும் இல்லையா?? இல்லை கோடிகளை செய்திகளில் பார்த்து மண்டை காயும் நம் போன்ற சாமானியர்களுக்கு அவர்கள் தரும் குச்சி ஐஸ்சா?? தமிழ்நாட்டிலுமெ அடுத்து வந்தவை எல்லாம் ஒன்றும் குறை இல்லாதவைதான். மேம்பால ஊழல், தலைமைச் செயலக் ஊழல் என்று எதுவும் குறையில்லை!

ஜெயலலிதாவுக்கு இது முடிவா என்றால் இல்லை!! இப்போது தீர்ப்பு கூறி இருப்பது சிறப்பு நீதிமன்றம்தான். அடுத்து உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் என்று நாடகங்களின் பாகங்கள் தொடரும். அவர் இனி தேர்தலில் நிற்க முடியாதா?? இது அவரது அரசியல் அந்திமமா? இல்லை என்று கூறலாம்! மேல் முறையீடு செய்யும் போது உயர் நீதிமன்றத்தால் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க (Stay) முடியும்! ஆனால் அதற்கான் வாய்ப்புகள் அரிதே என்றாலும் வாய்ப்பு இருக்கிறது என்றே கூறவேண்டும். அப்படி தீர்ப்பு நிறுத்திவைக்கப் பட்டால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியும்!! எல்லா அரசியல்வாதிகளுக்கும் வரும் தீர்ப்பினோஃபோபியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் (முன்னாள்) முதல்வர்! நாடகத்தின் இரண்டாம் பாகம் தொடங்கிவிட்டது. நான் நாடகம் பார்க்க கிளம்பிவிட்டேன்!!! நீங்கள்???

Friday 26 September 2014

மனிதம் அற்றுப் போன மனிதர்கள்!!

மனிதம் அற்றுப் போன மனிதர்கள்!!
***************************************



முகநூலில் அடிக்கடி ஒரு நகைச்சுவை படம் வருவதுண்டு. அதாவது ஒரு மனிதன் மூழ்குவது போலவும் அதை பலர் கைபேசியில் புகைப்படம் எதுப்பது போலவும். அதை பார்க்கும் போதெல்லாம் நகைச்சுவையாக தெரிந்தது (24-9-2014) அன்று வேதனையாக தெரிகிறது!!! டில்லி மிருகக்காட்சி சாலையில் புலியின் இருப்பிடத்துக்குள் தவறியோ அல்லது தெரிந்தோ விழுந்த 19 வயது சிறுவனின் பரிதாபமாக புலியிடம் இரைஞ்சுகிறான். ஆனால் சுற்றி இருந்தவர்களின் முட்டாள்தனத்தாலும், பணியாளர்களின் கவனக்குறைவாலும் அவன் புலியிடம் பலியாகிறான். கிட்டதட்ட 15 நிமிடத்திற்கு மேல் நடக்கும் இந்த கொடுமையான காட்சியை எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி ஒரு பண்ணாடை படம் பிடித்திருக்கிறது. அதை விட பெரிய கொடுமை அந்த காணொளியில் மேலும் சில கேமராக்கள் தெரிகின்றன!!


புலி ஒரு கொன்று தின்னி (Predator). ஆக்ரோசம் அதன் இயற்குணம். ஆனால் அந்த சிறுவனை காப்பாற்ற ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல் வேடிக்கை பார்த்தது மட்டுமன்றி அதை படமும் எடுத்தவர்களின் கொடூரம் எத்தகையது என்று எண்ணும் போது எனக்கு புல்லரிக்கின்றது! இதுதான் நாம் பள்ளியிலும் வீட்டிலும் கற்றுக் குடுக்கும் மனிதமா?? அல்லது நாம் மனிதமே கற்றுக் குடுப்பதில்லையா?? சமஸ்கிருதத்தை  கட்டாய பாடமாக்க்கலாமா என்று யோசிக்கும் அரசு ஏன் மனிதம் கற்றுக் குடுப்பதை பற்றி சிந்திக்க கூடாது? நடனம், பாட்டு கற்றுக் குடுக்கலாமா என யோசிக்கும் பெற்றோர்களும் ஏன் பிள்ளைகளுக்கு மனிதம் கற்றுக் குடுக்க கூடாது? ஏனென்றால் நாளை நீங்கள் புலியின் பிடியில் இருந்தாலும் உங்கள் பிள்ளைகள் படம் எடுக்கக் கூடும்!!! மதத்தலைவர்களே நீங்கள் மதம் பரப்பியது போதும் மனிதம் பரப்புங்கள். உங்கள் கடவுள் சக்தி வாய்ந்தவர் அவர் அவரை காப்பாற்றிக் கொள்வார், ஆனால் இந்த அப்பாவியை போன்றவர்களை காப்பாற்ற (மனிதம் கொண்ட) மனிதர்கள் வேண்டும்!! எந்திரததனமாக காலை எழுந்தவுடன் படிப்பு, பள்ளியில் படிப்பு, வந்தவுடன் படிப்பு, சாப்பிட்டுவிட்டு படிப்பு, பின்னர் படித்துக்கொண்டிருக்கும் போதே வளாக தேர்வில் வேலை என எந்திர வாழ்க்கையின் இடையில் கொஞ்சம் மனிதம் வேண்டும். இல்லையேல் பெற்றோர்களே நீங்கள் புலிக்குழிக்கு பதிலாக முதியோர் இல்லத்தில் தஞ்சம் புக நேரிடும்!!

நேஷனல் ஜியாக்ரஃபி சேணலிலும், அனிமல் பிளானட்டிலும் புலியோ சிங்கமோ இன்னொரு சைவபட்சினியை கொன்று தின்பதையே காண சகிக்காது. ஆனால் இந்த் பண்ணாடை முண்டங்கள் புலி ஒரு சிறுவனை துன்புறுத்துவதை படம் பிடித்திருக்கின்றன. இதை பற்றி எந்த மீடியாவும் கவலைப் படவில்லை. அந்த மீடியா முன்டங்களும் இந்த காட்சியை மீண்டும் மீண்டும் ஒளி பரப்பு டிஆர்பி ரேட்டை உயர்த்துவதிலேயே இருந்தன!! நீங்க் புகை பிடிக்கிறவன பத்தி வருத்தப்பட்டதெல்லாம் போதும். கொஞ்சம் மனிதம் இல்லாத மனித சமூகத்தை மாற்ற முடியுமா என யோசிங்கள் மீடியா பண்டாரங்களா!! நானும் யாராவது இதை பற்றி பேசுவார்கள்ஏன்று பார்த்தேன்... ஊம்ஹூம் யாரும் கவலைப் பட்டதாகவெ தெரியவில்லை!! மனிதம் இல்லாவிட்டால் நாமெல்லாம் வெறும் பிண்டங்கள்தான்!!

புனிதமும் மனிதமும்

புனிதமும் மனிதமும்
***********************




ந்து, இசுலாம், கிருத்துவம், பௌத்தம், சமனம் என மதங்கள் பல மனிதனுக்கு! கீதை, குர்ரான், பைபிள், டிபிடகா, கல்ப சூத்ரா என பல புனித நூல்கள். இவைகளால் மனிதன் அடைந்த நன்மைகள் என்ன?? கடவுளை பூஜிக்கும் மனிதர்கள் அனைவரும் இறைவனுக்கு பயந்தா? இல்லை மரியாதையாலா?? சிறு வயதிலேயே சாமி கண்ண குத்திவிடும் என்று பயம் ஏற்படுத்தி தானே பக்தியே உண்டாக்கினோம்!! சாமி கண்ண குத்திவிடும் என்று பயந்தவனாவது தவறு செய்யாமல் இருக்கிறானா?? மனிதனுக்கு நன்மை செய்யத்தான் கடவுள் என்றால் இன்று நடக்கும் அத்தனை தீமைகளும் எதனால் நடக்கின்றன? தீமைகள் நடக்க காரணம் விதியோ அல்லது கர்மாவோ அல்லது முன்விணையோ என்றால், ஒருவன் செய்த முன்விணைக்கும், விதிக்கும், கர்மாவுக்கும் யார் பொறுப்பாவது? ஒருவன் முன் செய்த வினை எவ்வாறு நேர்ந்தது? அந்த வினைக்கும் அதற்கு முன் செய்த வினைதான் காரணமா?? அப்போ அந்த வினைக்கு யார் பொறுப்பேற்பது? இப்படியே எத்தனை ஜென்மங்கள் ரீவைண்ட் செய்வது? சாத்தானே தீமைக்கு பொறுப்பு என்றால் அந்த் சாத்தானை படைத்தது யார்? இன்று நடக்கும் அக்கிரமங்களை பார்க்கும் போது கடவுளை விட சாத்தான் சக்திவாய்ந்ததா?? இந்த உலகில் சாத்தானின் ரோல் என்ன?? சாத்தானை கட்டுப்படுத்த கடவுள் ஏன் தவறுகிறார்??

டவுள்-சாத்தான், நன்மை-தீமை, புனிதம்-தீங்கு, புண்ணியம்-பாவம் இதெல்லாம் எங்கும் இல்லை. மனிதனுக்குள்ளேயே உள்ளது. இதை வெளியே தேடி நாசமாகிறான் மனிதன். சக மனிதனோ ஜீவராசியோ அல்லல் படுவதை பார்த்து உதவத் துடிக்கும்போது  மனிதனுள் இருக்கும் கடவுள் வெளிப்படுகிறார். இலங்கையில் படுகொலை நடந்த போதும், ஆப்பிரிகாவில் தினம் தினம் ப்சியாலும், இனப்படுகொலையாலும், வல்லரசுகளின் வல்லூறு ஆசைகளினாலும் கொத்து கொத்தாக சாகும் போதும் கடவுள் போய் சாத்தான் வந்தது. பெட்ரோலுக்கும், எண்ணைக்கும், நிலத்துக்கும், அதிகாரத்துக்கும் நடக்கும் அக்கப் போர்களை கடவுள் பெயரை சொல்லி புனிதப் போராக்கும் போது நம் உள்ளே இருக்கும் கடவுள் மறைந்து சாத்தான் வெறியாட்டம் போடுகிறான். கங்கையில்  முங்கினால் பாவ விமோசனம் என்றால் கங்கை கரையில் ஒரு மிகப் பெரிய டோல் கேட் போட்டிருக்கும் நம் அரசு! பாவத்தை கழுவுவதும் ஒரு பித்தலாட்டம் என்று அவர்களுக்கே தெரியும். அப்படி இல்லாவிட்டால் அதற்கும் ஒரு அறநிலையத்துறை முளைத்திருக்க வேண்டாமா இந்நேரம்?! அதே போல் பாதிரியாரால் பாவ விமோசனம் குடுக்கமுடியும் என்றால் ஆப்கானிஸ்தானில் எண்ணைக்காக வெறியாட்டம் போட்ட கிருத்துவ ரஷ்யனும், வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் கிருத்துவ அமெரிக்கனும் பாவ மண்ணிப்பு வாங்கி சொர்க்கத்துக்கு சென்று விடுவானா?!  வெறித்தன்மாக புத்த மதத்தை பின் பற்றும் புத்த பிக்குகள் இலங்கையில் செய்ததைத்தான் கௌதமர் போதித்தாரா?

டவுளும், புனிதமும் மதமும் என்னதான் சொல்கின்றன? மனிதனை தன்னுள் இருக்கும் சாத்தானை விரட்டி விட்டு கடவுளை வெளிக்கொண்ர சொல்கின்றன. மனிதன் என்ன செய்கிறான்? கடவுள், மதம், புனிதம், பெயரை சொல்லி கடவுளை விரட்டிவிட்டு சாத்தானோடு வெறியாட்டம் போடுகின்றான்!! குஜராத் கலவரத்தின் போது ஒவ்வொருவர் மனதிலும் இருந்த கடவுள் மறைந்து சாத்தான் தலைதூக்கி விட்டான்!! தவறு செய்பவனை விட தவறுக்கு உடந்தையாய் இருப்பவனும், அதை வேடிக்கை பார்ர்ப்பவனும்தான் பெருங்குற்றவாளி. அந்த வகையில் நாம் அனைவரும் குற்றவாளியே. முகநூலில் இசுரேலையும், பாலஸ்தீனத்தையும் மாறி மாறி ஆதரிக்கும் அனைவரும் குற்றவாளிகளே. அங்கு நடக்கும் போர் மண்ணுக்காக நடக்கும் போர் அதை புனிதப் போராக மாற்றிய புன்ணியம் நம்மையே வந்துசாரும். கடவுளையும் மதத்தையும் மனிதன் என்று வளைக்க தொடங்கினானோ அன்றே புனிதம் மட்டுமல்ல மனிதமும் மறைந்துவிட்டது!  தொழில் தர்மம், வாழ்வில் நேர்மை. சத்தியம், சக உயிர் பால் கருனை என எல்லாவற்றையும் மறந்து விட்டு மதம் போதித்து  என்ன பிரயோசனம்? கடவுளையும், தன் புனித நூலையும் மதிக்காத மனிதன் தன் மதத்தை தூக்கி ப்டித்து சாதித்தது என்ன?

ழிப் பேரலையோ, புயலோ, பூகம்பமோ, ஒரு மத்த்தானை மற்றும் காப்பாற்றிவிட்டு இன்னொரு மத்த்தானையா காவு வாங்கியது?? இல்லை பாவம் செய்தவை கொன்று விட்டு புண்ணியஸ்த்தனை காப்பாற்றியதா?? இயற்க்கைக்கு அதெல்லாம் தெரியாது! ஆக கடவுள் மதம் என்று இயற்க்கைக்கு புறம்பான காரியத்தை செய்து கொண்டிருக்கிறான் மனிதன்!! இயற்கைக்கு மதமும் கடவுலும் தெரியவில்லை அதற்கு தெரிந்ததெல்லாம் தன்னை பாலன்ஸ் செய்து கொள்வதே. இயற்கையின் நிலையை மனிதன் மீறும்போது இயற்கை கோர தாண்டவம் ஆடி விடுகிறது!! கடவுளும், புனிதமும் குடுக்க முடியாத படிப்பினையையும் தண்டனையையும் இயற்கை குடுத்து விடுகிறது!! மனித்ம் கடந்த புனிதம் இல்லை!! அதையும் தான்டி புனிதமானது என்று ஒன்று இல்லவே இல்லை!! சக மனித, சக உயிர் பற்றிய சிந்தனை மட்டுமே மனிதம் காக்கும். கண்ணுக்கு தெரியாத கடவுளை பற்றி சிந்திக்கவோ வருந்தவோ தெரிந்த மனிதனுக்கு கண் முன்னே பரிதாபமாய்  நிற்கும் மனிதனை தெரிவதில்லை!! கண்ணுக்கு தெரியாத கடவுள் காப்பாற்றுவார் என்றாலோ இல்லை அவரே வந்து தண்டிப்பார் என்றால் இங்கே உள்ள நாமெல்லாம் என்னாத்தை புடுங்க வாழ்கிறோம்!!!!

Thursday 25 September 2014

தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்

தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்
************************************************

தஞ்சை மருத்துவக் கல்லூரி தொடங்க 89 ஏக்கர் இடத்தையும் வைப்பு நிதியும் அளித்த இந்த வள்ளலை தஞ்சை மக்களே நினவைில் வைத்திருந்தால் அதிசயம்தான்!!

ஒரு ஊரின் பெயரைச் சொன்னவுடன் சிலரது பெயர்கள் நினைவுக்கு வரும்; அதுபோல தஞ்சாவூர் என்றதும் நினைவுக்கு வரும் பெயர் A.Y.S. பரிசுத்த நாடார். தேசியப் பாரம்பரியமிக்க குடும்பப் பின்னணியில் 1909ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி A.யாகப்ப நாடார் - ஞானம்மாள் தம்பதியருக்குப் பிறந்த அருந்தவச் செல்வங்கள் மூவரில் இளைய மகன் இவர். இவரது மூத்த சகோதரர் A.Y.அருளானந்தசாமி நாடார், இவரது சகோதரி இதயமேரி அம்மாள்.
இவர் தஞ்சாவூர் நகராட்சியின் சேர்மனாக நீண்ட காலம் பதவி வகித்து மக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றவர். தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தஞ்சாவூர் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நின்று தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியவர். மூன்று முறை தேர்தலில் வென்று பதினைந்து ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றிய இவர் தி.மு.க.வின் தலைவர் தஞ்சையில் போட்டியிட்டபோது மட்டும், ஒரே ஒரு முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர். நாட்டுப் பற்றோடும், மக்கள் நலனில் அக்கறை உணர்வோடும் இவர் சமூகப் பணிகளில் செயலாற்றியவர். இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் Air Raid Warden பொறுப்பில் வான்வழித் தாக்குதல் பாதுகாப்பாளராகப் பணியாற்றியவர் இவர். அவரது உயரிய செயல்பாடு காரணமாக அன்றைய அரசாங்கம் இவருக்கு "ராவ் சாஹேப்" விருதை வழங்கி கெளரவித்தது. தேசப்பற்று காரணமாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கட்சிப் பணியாற்றினார். தஞ்சை நகர காங்கிரஸ் தலைவராக 21 ஆண்டுகள் இருந்திருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் காரியக்கமிட்டி உறுப்பினராக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இப்படி பல நிலைகளில் இவர் கட்சிப்பணியாற்றியிருக்கிறார். பெருந்தலைவர் காமராஜ் அவர்களும் ஏனைய காங்கிரஸ் தலைவர்களும் இவரது நேர்மையையும், நிர்வாகத் திறமையையும், கடுமையான உழைப்பையும், தொண்டுள்ளத்தையும் கண்டு இவரிடம் அதிக மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர்.
சிறுபான்மை இன ரோமன் கத்தோலிக்க நாடார் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவரான இவருக்கு எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல மதிப்பும், நல்லெண்ணமும், மரியாதையும் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இவரும் இவரது மூதாதையர்களும் இந்தப் பகுதி மக்களுக்கு, அவர்கள் எந்த சாதி, இனத்தைச் சேர்ந்தவராயினும் பாகுபாடின்றி நான்கு தலைமுறைகளாகப் பெரும் பணியாற்றி வந்திருக்கிறார்கள். குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டி, அவர்களை உயர்த்துவதற்காக இடைவிடாது பாடுபட்டிருக்கிறார்கள். அந்த நன்றியுணர்வை இன்றளவும் சுற்றுப்புற கிராம மக்களிடம் பார்த்து உணர முடிகிறது. தர்ம காரியங்களுக்கும், உதவிகள் தேவைப்படும் தகுதி வாய்ந்த இளைய தலைமுறையினருக்கும் இந்தக் குடும்பம் விளம்பரமின்றி செய்து வரும் பெரும் பணிகளை மக்கள் மனதார பாராட்டி மகிழ்கிறார்கள்.
A.Y.S. பரிசுத்த நாடார், தஞ்சை தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியிலும், திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜோசப் பள்ளி மற்றும் கல்லூரி இவற்றில் கல்வி பயின்றார். விளையாட்டுகளில் ஆர்வமுடையவர் இவர்; குறிப்பாக கால்பந்தில் அதிக ஆர்வம் கொண்டு சென்னை மாகாண கால்பந்துக் குழுவில் விளையாடியிருக்கிறார். மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் ஆட்டத்தில் இரண்டாமிடம் பெற்றிருக்கிறார். டென்னிஸ் ஆட்டத்திலும் இவர் வல்லவராக விளங்கியிருக்கிறார். இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்த நிகழ்ச்சி, இவர் தனது 61ம் வயதில் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்று அதற்கான உரிமம் பெற்றுத் தன்னந்தனியராக விமானம் ஓட்டி பாராட்டுதல்களைப் பெற்றவர் என்பதுதான்.
அரசியல், வணிகம், விளையாட்டு போன்ற துறைகளைத் தவிர இவர் ஈடுபட்டு பெருமை சேர்த்த வேறு பல துறைகளும் உண்டு. பாரத சாரண இயக்கத்தில் உதவி இயக்குனராக இருந்தவர்; தஞ்சை மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவராக இருந்தவர்; தஞ்சாவூர் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக இருந்தவர்; தஞ்சாவூரில் இருக்கும் யூனியன் கிளப்பின் தலைவர்; காஸ்மாபாலிடன் கிளப்பின் தலைவர்; தோல்பொருள் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இப்படிப் பலப்பல. இவர் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அங்கு இவரது அயராத உழைப்பாலும், நேர்மை நெறிகளாலும் சிறப்பிடம் பெற்று விளங்கியிருக்கிறார்.
1949ம் ஆண்டில் முதன்முதலாக தஞ்சாவூரில் ROTARY CLUB OF THANJAVUR என்ற பெயரில் முதல் ரோட்டரி சங்கத்தைத் தோற்றுவித்து அதன் சாசனச் செயலாளராக இருந்திருகிறார். தஞ்சாவூரில் ரோட்டரி இயக்கத்தின் முன்னோடியாக இவர் திகழ்ந்திருக்கிறார். 1946ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் சிறுபான்மையினரான கிறிஸ்தவ மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான புதுச்சேரி தொடங்கி கன்னியாகுமரி வரையிலான தென்மாநில தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
சுதந்திர இந்தியாவில் அரசியல் நிர்ணய சபை, அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்குவதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் குழு அமைத்தபோது, சிறுபான்மையினரின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் அரசியல் அமைப்பு உருவாக வேண்டும் என்ற நோக்கில் Rev.Fr. Jerome D'Souza அவர்களின் தலைமையில் அமைந்த சிறுபான்மையோர் குழுவில் இவரும் அங்கம் வகித்து அரிய பணியாற்றியிருக்கிறார். இந்தப் பெருமகனார் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் திரைப்படம் அறிமுகமான காலத்திலேயே திரைப்படக் கொட்டகைகளை அமைத்து மக்கள் பார்க்க வசதி செய்து கொடுத்திருக்கிறார்.
அரசியல், சமூகத்தொண்டு, கல்விப்பணி, தொழில்துறை என்று பல்முனை வித்தகராக விளங்கிய பெருந்தகையாளர் A.Y.S.பரிசுத்த நாடார் திருமதி பிலோமினா சூசையம்மாள் தம்பதியருக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் குலவிளக்குகளாகத் திகழ்கின்றனர். அவர்கள் S.P.ஜெரோம், S.P.ஜேம்ஸ், S.P.ஜார்ஜ், S.P.பெஞ்சமின், S.P.பெலிக்ஸ், S.P.செல்வராஜ், S.P.அந்தோணிசாமி, S.P.அருள்தாஸ் ஆகியோராவர். இவர்களுக்கு ஒரு சகோதரி; அவர் பெயர் S.P.மேரி ஞானம் அருள்.
"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு"
என்பது வள்ளுவர் வாக்கு. “உலகத்தில் பேரறிவாளரிடம் இருக்கும் செல்வமானது, ஊருக்கு நடுவில் இருக்கும் குளத்து நீர் எல்லோருக்கும் பயன்படுவதைப் போன்றது” என்பது இதன் பொருள். அப்படிப்பட்ட பேரருளாளர்கள் புகழ் ஓங்கட்டும்!

பனை நம் செல்வம் (கற்பகதரு)





பனை நம் செல்வம் (கற்பகதரு)
************************************************
பனை மரம் தமிழ் நாட்டின் தேசிய மரமாகும். புல் வகையை சார்ந்த இம்மரம் தமிழ் நாட்டின் கடலோர பகுதிகளில் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஏராளமாக காணப்படுகிறது. இலங்கையில், தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இம்மரம் ஏராளமாக காணப்படுகிறது. அடி முதல் முடிவரை இதன் எல்லா பாகங்களும் மனிதனுக்கு உதவுவதால், இதனை “கற்பகத்தரு” என அழைப்பர். இந்தியாவில் சுமார் 8 கோடி பனை மரங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 5 கோடி மரங்கள் தமிழ் நாட்டில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்கள் பெறப்படுகின்றன. பனையிலிருந்து பூம்பாளையைச் சீவி பெறப்படும் பதனீர் குளிர்பானமாக பயன்படுத்தப்படுகிறது. பதனீரை நுரைக்க வைத்தால் அது போதை தரும் கள்ளாக மாறுகிறது. பதனீரை காய்த்து கூழ்பதனீராக்கி அதிலிருந்து கருப்பட்டி தயாரிக்கப் படுகிறது. இளமையான பனங்காய் நொங்கு எனப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் நொங்கு, பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது. பனங்காய் முதிர்ந்து பனம்பழம் உண்டாகிறது. இனிப்பு சுவையுடைய பனம்பழம் தனியாகவும், சமைக்கப்பட்டும் உண்ணப்படுகிறது. பனங்கொட்டையை முழைக்கப் போட்டு அதிலிருந்து பனங்கிழங்கு மற்றும் தவுன் பெறப்படுகிறது. மேலும் பனையின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
பனையின் தண்டு வீடு கட்ட உத்தரமாகவும், தூணாகவும் பயன்படுகிறது. பனையோலை வீட்டிற்கு கூரை வேய பயன்படுகிறது. இது தவிர பனையோலை பாய் முடையவும், ஓலைப்பெட்டிகள் செய்யவும், வேலிகள் அமைக்கவும் பயன்படுகிறது. பனை மட்டைகள் நார் தயாரிக்க பயன்படுகிறது. பனந்தும்பு கயிறு தயாரிக்க பயன் படுகிறது. இவை தவிர பனை மரங்கள் மழை தருவிக்கும் குடைகளாகவும் இருக்கின்றன.
முற்காலத்தில் பனையோலைகளே எழுதப் பயன்பட்டு வந்தன. இன்றும் பல பழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். அச்சுத்துறை இல்லாத காலத்தில் உருவான உலகம் போற்றும் திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக்கியங்களும் பத்திரமாக புதிய தலைமுறைகளுக்குக் கிடைக்கக் காரணம் பனை ஓலைகள்தான். பனை ஓலைகள் இல்லாவிடில் தமிழுக்கு இவ்வளவு எண்ணிக்கையிலான பழந்தமிழ் இலக்கியங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
இந்து மற்றும் புத்த மதத்தில் பனைமரம் புனித மரமாக போற்றப்படுகிறது. திருப்பனந்தாள், திருப்பனங்காடு, திருப்பனையூர், திருமழபாடி, திருவோத்தூர் முதலிய சிவ தலங்களில் பனை மரம் தலமரமாக விழங்குகிறது.
பண்டைய தமிழ் இலக்கியத்தில் பனை மரங்களைப்பற்றி ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன. காதலில் தோல்வியுற்ற காளையர் மடலேறுதல் நிகழ்ச்சியில் பனை மட்டைகளை வைத்து குதிரை செய்து ஏறியதாக இலக்கியங்கள் கூறுகின்றன. பழந்தமிழ் நூலான தலவிலாசம் பனைமரத்தின் 801 பயன்களை கூறுகிறது.
தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக பனைமரம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விழங்கியது. நாயக்க மன்னர்கள் மதுரையை ஆக்கிரமித்தபோது அங்கிருந்து வெளியேறி தென் மாவட்டங்களில், தேரிக்காட்டில் வாழ்ந்த சான்றோர் (நாடார்) சமூக மக்கள் இம்மரத்தையே ஆதாரமாக கொண்டு வாழ்ந்தனர். இவ்வாறு பழந்தமிழரின் வாழ்வோடு கலந்து, ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய பனைமரம் இன்று முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டுள்ளது.
கள் இறக்கத் தடை, பனை பொருட்களை முறையாக சந்தை படுத்தாமை, பனையேற நவீன எளிய கருவிகள் இன்மை இவையே பனைமரங்கள் இன்று முற்றிலுமாக புறக்கணிக்கப்பட காரணங்களாகும். பனைமரத்தை வைத்து குலம் சார்ந்த தொழிலாக பனைத் தொழில் செய்து வந்த சான்றோர் (நாடார்) சமூக மக்கள் இன்று அந்த தொழிலை தொடர்ந்து செய்து வர இயலாத நிலையில் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். இதனால் குலவழியாக பனைகளை காத்துவருவது முற்றிலும் குறைந்துவிட்டது. பால் சுரந்து குடும்பத்தை காப்பாற்றும் பசுக்கள், பயன்பாடற்றவுடன் அடிமாடாக்கப்படுவதுபோல, வளாதார மரமான பனை மரங்கள் இன்று களை மரமாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கிய பனை மரங்கள் இன்று அருகிவரும் மரவகைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1 கோடி பனை மரங்கள் தமிழகத்தில் அழிக்கப்பட்டுள்ளன. இதே நிலை தொடருமானால் இன்னும் 40 வருடங்களில் பனைமரங்கள் முற்றிலுமாக தமிழகத்திலிருந்து அழிக்கப்பட்டுவிடும். தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை அடுத்த தலைமுறைகள் படங்களில் மட்டுமே பார்க்க வேண்டிய அவலம் நேரும்.
தமிழர் அடையாளங்களில் ஒன்றான பனை மரத்தை அழிவிலிருந்து காப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். தமிழக அரசு பனைமரம் வெட்டுவதை உடனடியாக தடை செய்து புதிதாக ஏராளமாக பனை மரங்களை நடவு செய்ய வேண்டும். பனைமரத்திற்கு அதீத பராமரிப்போ, நீராதாரமோ தேவையில்லை. எனவே நடவு செய்தாலே போதும் அவை தானாகவே வளர்ந்து பெருகும். இம்முயற்சியில் நாடார் சமூகம் தீவிர பங்காற்ற வேண்டும். மழைக்காலத்திற்கு முன் பனங்கொட்டைகளை சேகரித்து மழைக்காலத்தில் அவற்றை காடு, மேடுகளில் விதைக்க வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களை இம் முயற்சியில் ஈடுபடுத்தினால் பெருமளவு பனை நடவு ஏற்படுவதோடு அவர்களுக்கு சுற்று சூழலை பற்றிய விழிப்புணர்சியும் ஏற்படும்.

சாத்தூர் நயம் காராச்சேவு

சாத்தூர் நயம் காராச்சேவு
****************************************
சாத்தூர் காரசேவு பிரபலம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? 20 வருடத்திற்கு முன்பு சாத்தூர்ன்னு ஊர் பேரைச் சொன்னாலே அடுத்த வார்த்தை ‘சேவு’ன்னு ருசியோட வந்துடும்.அவ்வளவு ஃபேமஸ் சாத்தூர் நயம் காராச்சேவு. அதிலும்,‪#‎மு_செ_சண்முகநாடார்_கடை‬ காராச்சேவுன்னா பெருந்தலைவர் காமராஜர் முதல், கலைஞர் வரை ருசித்த பேர் பெற்ற கடை. சாத்தூர் நகராட்சி பஸ் ஸ்டாண்டுக்கு அருகே ரயில்வே பீடர் ரோட்டில் உள்ளது நூறு வருட பழமையான சண்முக நாடார்மிட்டாய் கடை. மூன்று தலைமுறை கண்ட இவர்கள் இன்றைக்கும் தங்களது நயம் சேவு தயாரிப்பில் துளிஅளவு கூட ருசி மாறாமல்,கண்ணும் கருத்துமாக பக்குவமாக தயாரிக்கிறார்கள்.
அதனால்தான் சாத்தூரிலிருந்து சென்னைக்கு இன்றும் பல அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கும், சினிமா கலைஞர்கள், நடிகர்கள் என பலருக்கும் இங்கிருந்து பார்சலாகப் போகிறது. குற்றாலம், நாகர்கோவில், கன்னியாகுமரின்னு இந்தப் பக்கம் செல்பவர்கள் சேவு பார்சல் வாங்கிக்கொண்டு செல்வார்கள். இந்தப் பக்கம் ஷூட்டிங் வரும் நடிகர்கள் கடைக்கே வந்து வாங்கிவிட்டுப் செல்வார்கள்.அவ்வளவு ருசி சாத்தூர் சேவுக்கு.
இந்த சேவில் சேர்க்கும் பூண்டு, பெருங்காயம் நன்கு செரிமானம் ஆகும். அதிகம் எண்ணெய் இல்லாமல் நாக்குக்கு ருசியோடு உடம்புக்கு நல்லதாகவும் இருப்பதால் நாலா பக்கமும் தேடி வருகிறார்கள். மாசி மாதம் தென் மாவட்டங்களில் உள்ள குலதெய்வக் கோயில்களுக்கு வர்றவங்க, சாத்தூர் சேவு வாங்கி

பிரசாதம் மாதிரி கொண்டு போவாங்க. இவ்வளவு ருசிக்கு கொடைக்கானல் பூண்டு ஒரு காரணம்.அதோட தரமான கைப்பக்குவமும், சுத்தமான கடலை எண்ணெய், கடலைமாவு போன்ற தரமான சேர்க்கை.
காரசேவுக்கு இந்த ஊர் பிரபலம் என்பதெல்லாம் ஒரு காலம். 1990களில் கூட இந்த ஊர்களில் காரசேவுக்கு என்று ஒரு கூட்டம் உண்டு, வெளியூர்களில் இருந்து எல்லாம் மக்கள் வரும்போது வாங்கி செல்வார்கள். மு.செ.சண்முகநாடார் அவர்கள் கடையில் இந்த காராசேவு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் செய்வார்கள், மீதமிருந்தால் அதை அடுத்த நாள் விற்பனைக்கு உபயோகிப்பதில்லை. பின்னர் எல்லோரும் காரசேவு செய்ய ஆரம்பித்தார்கள், ஆனால் பேராசையால் நிறைய செய்துவிட்டு, அதை விற்க முடியாதபோது அடுத்த நாள் போடுவதில் கலந்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்போது இந்த காரச்சேவு பற்றி அவர்களுக்கு தப்பான அபிப்பிராயம் வந்து இதன் பெயர் கேட்டு போனது. மீதமிருந்தால் அதை அடுத்த நாள் விற்பனைக்கு உபயோகிப்பதில்லை என்பதால் மு.செ.சண்முகநாடார் கடை இன்றளவும் பிரபலம்.
ஒரு ஊர், சில மனிதர்களின் பேராசையால் அதன் தனித்துவத்தை இழந்துவிட்டது என்றே தோன்றியது. இன்று அந்த ஊருக்குள் எங்கு திரும்பினாலும் பாஸ்ட் புட் கடைகள், ஆனால் காராச்சேவு என்பதை தேடி கண்டு பிடிக்க வேண்டி உள்ளது. சாத்தூரிலும் நிறைய மக்கள் காராசேவுக்கு பிரபலம் என்பதல்லாம் ஒரு காலம் என்றே சொல்கின்றனர். ஆனாலும், இன்று இந்த சண்முக நாடார் கடை உள்ளது, அதுவும் பாஸ்ட் புட் கடையாக மாறும் முன் சென்று அந்த சுவையை அனுபவிதிடுங்கள் !
சாத்தூர் சேவுக்கு மட்டுமல்ல, சீனிமிட்டாய், கருப்பட்டி மிட்டாய்க்கும் பேமஸ்..

கோவில்பட்டி கடலை மிட்டாய்

கோவில்பட்டி கடலை மிட்டாய்
*************************************************




யாரிடமாவது நம் சொந்த ஊரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, ‘உங்க ஊரில் எந்தத் தின்பண்டம் ஃபேமஸ்?’ என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டிவரும். ஒரு ஃபேமஸும் இல்லாத ஊர்க்காரர்கள் பாடு திண்டாட்டம்தான். கோயில் இல்லாத ஊரில்கூட குடியிருந்துவிடலாம். ஆனால் சொல்லிக்கொள்ள ஏதேனும் ஒரு ஃபேமஸ் இல்லாத ஊரில் குடியிருக்க முடியாது. இந்த விஷயத்தில் கோவில்பட்டிக்காரர்கள் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். திருநெல்வேலிக்கு அல்வாபோல கோவில்பட்டியையும் கடலை மிட்டாயையும் பிரித்துவிட முடியாது.

கோவில்பட்டிக்குப் பெருமை சேர்க்கும் கடலை மிட்டாய்க் கடைகள் அங்குள்ள மார்க்கெட் சாலையில் உள்ளன. நெரிசலான அந்தச் சாலையில் எம்.என்.ஆர்., வி.வி.ஆர்., கே.என்.ஆர்., ஆஞ்சநேயர் விலாஸ் கடலை மிட்டாய் என வரிசையாக மிட்டாய்க் கடைகள். எல்லாக் கடைகளிலும் மக்கள் கூட்டம் எப்போதும் அலை மோதிக்கொண்டிருக்கும். கடைகளுக்குப் பின்னால் உள்ள பட்டறைகளிலேயே மிட்டாய்கள் தயாரிக்கப்பட்டுச் சுடச் சுடப் பொட்டலங்களில் இட்டுத் தருவது இங்குள்ள சிறப்பம்சமாகும். கடலை மிட்டாய் என்றால் ஒன்று, இரண்டு அல்ல. இங்கு நாள் ஒன்றுக்கு டன் கணக்காக கடலை மிட்டாய்கள் விற்பனை ஆகின்றன. நிலக் கடலை, வேர்க் கடலை என அழைக்கப்படும் இந்தக் கடலை மணிலாக் கொட்டை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் இந்தக் கடலைக்கு இந்தப் பெயர் வந்தது. ஆனால் அது எந்த நூற்றாண்டில் என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை. ஆனால் அதன் வருகை கோவில்பட்டிக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது.
கடலை மிட்டாய் தயாரிக்க முதலில் முழு நிலக் கடலையாக வாங்கப்பட்ட பருப்பை இரும்பு சட்டியில் மிதமான வெப்பத்தில் பொன் நிறத்திற்கு வரும் வரை நன்கு வறுக்கின்றனர். பின்பு அந்தக் கடலை பருப்பைப் பாதியாக உடைத்து வைத்துக்கொள்கின்றனர். வெல்லத்தைக் குறிப்பிட்ட வெப்பத்தில் பாகாகக் காய்ச்சுகின்றனர். பாகை ஆற வைத்துப் பின்பு சிறிது நேரம் கழித்து மீண்டும் காய்ச்சி இறக்குகிறார்கள். இரண்டாவது முறை பாகை நன்கு கொதிக்கவிடுகிறார்கள். நன்கு கொதித்த பின்னர் பாதியாக உடைக்கப்பட்ட நிலக் கடலை பருப்புடன் சிறிது உப்பு சேர்த்துப் பாகுடன் கலக்கிறார்கள். குறிப்பிட்ட சில நிமிடங்களில் கடலைப் பருப்பும், வெல்லப் பாகுவும் சேர்ந்து மிதமான திடநிலைக்கு வந்துவிடுகிறது.
பின்பு அந்த வெப்ப நிலையிலே அடுப்பிலிருந்து வெளியே எடுத்து மற்றொரு இரும்புப் பாத்திரத்தில் போட்டுக் கரண்டியால் கிளறு கிறார்கள். அப்போது பாகும் பருப்பும் மிக திடமான நிலைக்கு மாறிவிடுகிறது. பின்னர் அதனை சட்டியில் இருந்து வெளியே எடுத்து பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மர அச்சில் கொட்டுகின்றனர். தேங்காய் துருவலில் சேர்த்துவிட்டால் கடலை மிட்டாய் தயார்.
இங்கு செய்யப்படும் கடலை மிட்டாயின் தனி ருசிக்குக் காரணம் 60 ஆண்டுக் கால அனுபவமும் அதில் கலக்கப்படும் சுவையான பொருட்களும்தான். வெல்லம், தேனி வெல்லம் என இரு விதமான வெல்லத்தைத் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். அதுபோல கடலை மிட்டாய்த் தயாரிப்பை ஒரு ஆன்மிக வழிபாடு போல செய்கிறார்கள்.
அதெல்லாம் சரி… கடலை மிட்டாயில் எண்ணெய் இருக்கிறதே என்பர் கொலஸ்ட்ரால் பயத்தில் உள்ளவர். அவர்களுக்கு ஒரு செய்தி… முதலில் கடலை எண்ணெயிலேயே கெட்ட கொலஸ்ட்ரால் கிடையாது.நிறைய பாலி அன்சேச்சுரேட்டும் மோனோ அன்சேச்சுரேட்டும் உள்ள கொழுப்பு அமிலங்கள்தான் அதிகம் உள்ளன. கடலையே இப்படி என்றால், கடலை மிட்டாய் இன்னும் ஒரு படி மேல்.
கடலை மிட்டாய் அதன் புரதத்தால் உடம்பை வளர்க்கும்; அதன் துத்தநாகச் சத்தால் நோய் எதிர்ப்பாற்றல் தரும்; அதில் சேர்க்கப்படும் வெல்லம் பிற மிட்டாய்களில் சேர்க்கப்படும் வெள்ளை சீனியைக் காட்டிலும் இனிப்பானதும் சிறந்த தும்கூட. இனிப்புடன் இரும்பு முதலான கனிமங்கள் நிறைந்தது. மிட்டாயுடன் மிக நுண்ணிய அளவில் சில நேரங்களில் சேர்க் கப்படும் சுக்குத் தூள் கடலையின் பித்தத்தையும் இனிப்பின் கபத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. காலை அவசரத்தில் அரைகுறையாய்ச் சாப்பிட்டுப் போகும் குழந்தைக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் நூடுல்ஸோ, ஒரு பாக்கெட் மில்க் பிஸ்கட்டோ, மில்க் சாக்லேட்டுகளோ கொடுக்காத ஊட்டச் சத்தை மூன்று கடலை மிட்டாய்கள் தந்துவிடும் (பார்க்க அட்டவணை).
கடலை மிட்டாய் என்றதும் நினைவுக்கு வரும் கரிசல்காட்டுப் பூமியான கோவில்பட்டியில் மொத்த ஊரும் கோகோ, பால்பவுடர் சாக்லேட்டுகளுக்குப் போன பின்பும் இன்றும் 50 குடும்பங்கள் கடலை மிட்டாய் தயாரித்து கோலாலம்பூர் வரைக்கும் அனுப்பிக் கொண்டு இருக்கின்றன.
அப்படிக் கடலை மிட்டாய் தயாரிக்கும் ஒரு நண்பரிடம் பேசியபோது அவர் சொன்னது… ‘ரெண்டு மாசமானாலும் இது கெட்டுப்போகாது அண்ணாச்சி. அதோட இயல்பு அப்படி. நாளாச்சுன்னா மொறுமொறுப்பு குறையும். இந்த மொறுமொறுப்பும்கூட போகாம இருக்க கெமிக்கல் சேர்க்கச் சொன்னாங்க அண்ணாச்சி. ஆனா, நாங்க செய்ய மாட்டோம். புள்ளைங்க சாப்பிடுறது. நம்ம புள்ளைங்களா இருந்தா, தப்பானதைக் கொடுப்போமா அண்ணாச்சி?” என்று அடுத்த தலைமுறை மீது அக்கறையோடு கேட்டார் அழுக்கு வேட்டி கட்டியிருந்த அந்த மிட்டாய்க்காரர்!

Wednesday 24 September 2014

மண்ணின் வில்லன் - ‘சீமைக் கருவேலமரம்’

மண்ணின் வில்லன் - ‘சீமைக் கருவேலமரம்’
**********************************************************************

அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் ‘சீமைக் கருவேலமரம் ’ தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ‘ யாம் அறியேன் பராபரமே’

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல…., இப்போதைய பிரச்சனை….!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்
*******************************************
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல…! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது…!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது….. ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது

உடம்பு முழுதும் விஷம்
*********************************
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்….?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.

அறியாமை
****************
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு
**************************************
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்…..!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்….??! என்ன முரண்பாடு…?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்
**********************************
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்….
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்…..! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

நாடார் உறவின்முறை கற்றுத் தரும் பாடங்கள் - பாலமேடு நாடார் உறவின் முறை



நாடார் உறவின்முறை கற்றுத் தரும் பாடங்கள்
****************************************************.
நாடார் உறவின்முறை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அது ஒரு ஜாதிச் சங்கம். பத்து பதினைந்து நாடார்கள் ஒரு ஊரில் குடியிருந்தாலே நாடார்கள் ஒரு உறவின் முறை ஏற்படுத்திக் கொள்வார்கள். பின் மெதுவாக அவ்வூரில் உறவின் முறைக்கு பொதுச்சொத்துக்கள் உருவாகும். அது ஒரு சின்ன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாகவோ, ஒரு ஆரம்பப் பள்ளியாகவோ கூட இருக்கலாம். ஏதோ நாடார்கள்தான் ஜாதி அடிப்படையில் ஒன்றுகூடுவதாகவும், அங்கிருக்கும் மற்றவர்களுக்கெல்லாம் ஜாதிய உணர்வே இல்லாதது மாதிரியும் “நாடானுக நாலு பேர் இருந்தாக் கூட, அவங்களுக்குள்ளே எப்படி கட்டுப்பாடா, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு ஒரு வழியாக எந்திரிச்சிராணுங்க” என்று அந்த ஊரில் இருக்கும் பெரும்பான்மை சமூகம் ஒரு மாதிரி புழுக்கமடையும். ஆனால் கூர்ந்து கவனித்தால், அந்த ஊரைச் சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினரில் பலர், அந்த வட்டாரத்திலே மிகவும் செல்வந்தர்களாகவும், பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவ்வளவு செல்வமில்லாத, பிரபலமில்லாத ஒரு சிறிய நாடார் குழு சாதிப்பதை, மற்ற சமூகத்தினர் எண்ணிக்கையையும், செல்வத்தையும், பிரபலத்தையும் வைத்து சாதிக்கமுடியாது. “காமராஜர் இல்லாவிட்டால் இவர்களெல்லாம் இப்படி வந்திருக்கமுடியுமா? என்று பேசி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் உண்மை என்னவாக இருக்குமென்றால், அந்த சிறிய உறவின்முறையில் கணிசமானோர் திராவிட இயக்கச் சார்புடையவர்களாக இருப்பார்கள்.
               
பாலமேடு நாடார் உறவின் முறையும் பத்ரகாளியம்மன் பால்பண்ணையும்
********************************************************************************
பாலமேடு மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய பேரூராட்சி. மிகச் சிறிய குடியிருப்பாக இருந்த கடந்த காலத்தில், அங்கு ஐம்பதுக்கும் குறைவான நாடார் தலைக்கட்டுக்களே இருந்திருக்கின்றது. அந்த ஐம்பது தலைக்கட்டுகள் ஒன்றிணைந்து ஒரு உறவின் முறையை ஏற்படுத்திக் கொண்டார்கள். உறவின் முறை வளர, வளர, உறவின்முறைக்கென்று தனியாக கடைத்தெரு, நந்தவனம், ஆரம்பப் பள்ளி, பால்வாடி, மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, சினிமா தியேட்டர், இளைஞர்கள், பெண்களுக்கென்று தனியாக அமைப்புகள், அந்த அமைப்புகளுக்கென்று வருமான வாய்ப்புக்கள், நாள்தோறும் 10000 லிட்டர் பாலை பதப்படுத்தி, சந்தைப்படுத்த வசதிகள், 600க்கும் மேலான பால் உற்பத்தியாளர்களுடன் நேரடித் தொடர்பு, தொழில் கல்வி பயில வாய்ப்புக் கிடைக்கும் நாடார் மாணவர்களுக்கு கணிசமான ஊக்கத் தொகை, மேற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி என்று உறவின் முறையின் செயல்பாடுகள் பிரமிக்க வைத்தன. பாலமேடு உறவின் முறை உருவாக்கிய பொதுச்சொத்துக்களின் மதிப்பே குறைவாக மதிப்பிட்டாலும் 10 -15 கோடிக்கு மேல் தேறும். இத்தனைக்கும் அந்த ஊரில் நாடார்கள் பெரும்பான்மையினரல்ல. எண்ணிக்கையில் அதிகமாயுள்ள, அதிகச் சொத்துவைத்திருக்கின்ற, அதிகம் படித்திருக்கின்ற பிற ஜாதியினர் சாதிக்க முடியாததை ஒரு சிறுபான்மை குழுவால் எப்படிச் சாதிக்க முடிந்தது? தென்மாவட்ட நாடார்கள் எதைத் தொடங்கினாலும், பத்ர காளியம்மன் பெயரில்தான் தொடங்குகின்றார்கள். அவர்களின் சாதனை அம்மனின் ஆசீர்வாதமாக இருக்குமோ? அந்த மாதிரி ஒரு துடியான தெய்வத்தின் அருள் மற்ற ஜாதியினருக்குக் கிடைக்கவில்லையோ என்னமோ?
அவர்களின் சாதனைக்கான காரணம் பத்ரகாளியம்மன் பால்பண்ணையில் அப்போது செயலாராக இருந்தவருடன் பேசிக்கொண்டிருந்த போது புரிந்தது. நாங்கள் நான்கைந்து பேர் சென்றிருந்தோம். சங்கச் செயலாளர் எங்களுக்கு தேநீர் வரவழைத்தார். அவருக்கு முன்னாள் தேநீர் டம்ளர் ஏதும் வைக்கப்படவில்லை. தேநீர் குடிக்கும்முன், மரியாதையின் பொருட்டு “அண்ணாச்சி உங்களுக்கு” என்று லேசாக இழுத்தேன். “உங்களுக்கு டீ வாங்கித் தரத்தான் எனக்கு அனுமதி. சங்கச் செலவில் டீ குடிப்பதற்கு எனக்கு அனுமதியில்லை” என்று சிரித்துக்கொண்டே கூறியபோது, பள்ளிவகுப்பே முடித்திருந்த, ஒரு தலைவனுக்குரிய தோற்றப்பொலிவு ஏதுமில்லாதிருந்த, சுருக்கம் விழுந்த பாலியஸ்டர் சட்டையை அணிந்திருந்த அந்த எளிமையான மனிதர், விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றார். அப்பொழுது கிடைத்த ஞானம். “இது பத்ரகாளியம்மன் ஆசி அல்ல. நாடார்களின் சமூக ஒழுக்கம். அந்த ஒழுக்கம் காலப்போக்கில் உருவாக்கிய பரஸ்பர நம்பகத்தன்மை. அதுதான் நாடார் உறவின் முறையின் வலிமை. ஜாதி என்பது ஒரு அடையாளம். அந்த அடையாளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட நிறுவன ஒழுகலாறுகள். பொதுவான விதிமுறைகள், உறுப்பினர்களிடையே சமத்துவம், விதிமுறைகளை அட்சரம் பிசகாமல் பின்பற்றுவது,….நாடார் உறவின் முறையை இன்னும் நன்றாகப் பார். காமராஜர் தான் காரணம் என்று சொல்லித்திரிந்ததாலேதான் பலருடைய கற்றல் நின்றுவிட்டது." என்று பொட்டில் அறைந்த மாதிரி பாலமேடு பலவற்றை புரியவைக்கும்.

உதவுவதிலும் நேர்மை - பெருந்தலைவர்

உதவுுவதிலும் நேர்மை - பெருந்தலைவர்

முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர், சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நிறைய ஊர்களில கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்தார்கள். நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தீவிர தொண்டர், “இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராஜர் இனி என்ன செய்வார்? நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப்போகிறார்” என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்கு வைத்துக்கொண்டார்.

கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்ததும் அந்த தொண்டரைக் காமராஜர் அழைத்து “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றார். அந்தத் தொண்டர் அதிர்ந்து நின்றார். “ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டுவிட்டாரே” என மனம் வருந்தினார்.

“தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்த துண்டை நாம் தொடக்கூடாது. ஏனென்றால்..இதெல்லாம் சென்னையில் உள்ள பாலமந்திர் என்ற ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக் கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு” என்றார் காமராஜர்.

“ஏழைகளுக்கு உதவிடுங்கள்” என்ற கருத்தை அழகாக விளக்கினார் காமராஜர்.

சமூகம் சார்ந்த பொருளாதாரம் - நாடார் மகமை





சமூகம் சார்ந்த பொருளாதாரம் - நாடார் மகமை
****************************************************************
நிதிகளைச் சேர்ப்பதிலும், அவற்றைத் தொழிலுக்காக திரட்டுவதிலும், நமது மக்களின் முறை அலாதியானது. இன்றைக்கு சில்லறை வணிகம் உள்ளிட்ட துறைகளில் முன்னணியிலுள்ள நாடார் சமூகம் ஆரம்ப காலங்களில் தமது தொழில்களுக்கான நிதியை சமூகத்திடமிருந்தே திரட்டியது. அதற்கு அவர்கள் கண்டுபிடித்த முறை தான்  ‘மகமை’ என்பதாகும். அதனால் இன்று ஒட்டுமொத்த சமூகமும் பல துறைகளில் முன்னேறி உள்ளது. இந்த மாதிரி முறைகள் எல்லாம் உயிப்பான சமூகங்கள் தங்களின் கலாச்சார வழிகளை ஒட்டி ஏற்படுத்தியவை.

பொருளாதார முன்னேற்றம் இல்லாமல் தங்களால் சமுதாயத்தில் ஒருநிலையை அடைய முடியாதுபொருளாதார முன்னேற்றமே ஒருசமுதாயத்தின் முன்னேற்றம் என்பதை தெளிவாக அறிந்திருந்தநாடார்கள் தங்களில் பொருளாதார முன்னேற்றத்திற்காக எடுத்து வைத்த முதல் அடிதான்வியாபாரம். மாட்டு வண்டியில் ஊர் ஊராகசென்று கருப்பட்டிகருவாடுபருத்தி போன்ற பொருட்களைவிற்கத்தொடங்கினர்ஒவ்வொரு ஊரிலும் கீழ் ஜாதிக்காரன் இப்படி வந்து வியாபாரம் செய்வதா என பிரச்சனைகள் வந்தன. அவர்களின் வண்டிகள், பொருட்கள் களவு போயின.. அவர்களுக்கு திருப்பி அடிக்கவெல்லாம் நேரம் இல்லை. தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு என்பதை உணர்ந்தஅவர்கள், தங்கள்வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக சிறிய நிலம் ஒன்றை ஒவ்வொரு ஊரிலும் வாங்கி அதற்கு “பேட்டை” என்று பெயரிட்டனர். (சிவகாசியில் இப்போதும் கூட திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார்சங்கத்தின் கருவாட்டுப்பேட்டை இன்றும் உள்ளது). அந்த பேட்டையைநிர்வகிக்க அவர்களுக்குப் பணம் தேவைப்பட்டது.. அப்போது தான்இந்திய வரி வரலாற்றில் புரட்சி ஏற்படுத்திய sales taxற்கு அச்சாரமானஒரு விசயம் நடந்தேறியது..

நாடார்கள் தங்கள் பேட்டையை நிர்வகிக்க “நாடார் மகமை பண்டு” என ஒன்றை ஆரம்பித்தனர்ஒவ்வொரு ஊரிலும் பேட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு வியாபாரியும் தனது வருமானத்தின் ஒருபகுதியை மகமை பண்டிற்கு கொடுத்து விட வேண்டும்அந்தப்பகுதியைகடந்து செல்லும் ஒவ்வொரு மாட்டு வண்டியும் குறிப்பிட்ட அளவு மகமை நிதி கொடுத்தாக வேண்டும் என்னும் விதியும் இருந்ததுஇந்த மகமை நிதியைக் கொண்டு அந்த பேட்டையில் தங்களுக்கும், தங்கள் உடமைகளுக்கும் பாதுகாப்பை உருவாக்கிக்கொண்டனர்.. ஆனால் நாளாக நாளாக அந்த மகமை நிதி அவர்களே கற்பனை செய்யாத அளவிற்கு வளர்ந்தது.. ஒவ்வொரு ஊரிலும் உறவின்முறை மகமை பண்டு சந்திப்புக்களை மாதாமாதாம் நடத்தி அந்த நிதிகளை எப்படி முறையாக செலவிடுவது என யோசித்தனர்.. தான் கொடுக்கும்ஒவ்வொரு பைசாவும் எந்த அளவுக்கு தன் நிலையைஉயர்த்தப்போகிறது என்பது நாடார்களுக்கு அன்றே தெரிந்திருக்குமா என தெரியவில்லை.. 

அந்த மகமைப் பண்டில் ஒவ்வொரு வியாபாரியும், ஒவ்வொரு குடும்பத்தலைவனும் கட்டும் பணமானது அந்த ஊரின்அந்தசமூகத்தின் நன்மைகளுக்காகப் பயன்பட்டனவியாபாரத் திறமைமட்டும் போதாதுஅதை நிர்வகிக்க படிப்புத்திறமையும் வேண்டும் எனஅறிந்து கொண்ட நாடார் சமுதாய மக்களின் கவனம் கல்வி பக்கம் திரும்பியது.. அந்த மகமை நிதியைக் கொண்டு பல ஊர்களிலும்பள்ளிகளைத் திறந்தனர்விருதுநகரில் 1885ம் ஆண்டில் திறக்கப்பட்ட KVS என்று அழைக்கப்படும் ஷத்ரிய வித்யா சாலா பள்ளி தான் அந்தமாதிரியான முதல் பள்ளிபின் மருத்துவமனைகள்கோயில்கள் எனதங்கள் சமூகத்திற்கு தேவையான அனைத்தையும் உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஊரிலும் மகமை பண்டு நிதியின் மூலமாக இவை செயல்படுத்தப்பட்டன.. சமூகத்தில் நல்வுற்றோர்களுக்கு உணவும்,ஆடையும்வலிமையுள்ளோர்களுக்கு வேலையும் தரப்பட்டன.போதுமான நிதியை பயன்படுத்தி வியாபார நஷ்டங்கள் சரிசெய்யப்பட்டனசமூகத்திற்காக கிணறுகளும்பொதுக்கட்டிடங்களும்உருவாக்கப்பட்டனஆனால் அதிகமான நிதி கல்விக்கூடங்களுக்கு தான்ஒதுக்கப்பட்டதுஅனைத்து ஊர்களிலும் பள்ளிகளைத் திறந்தனர்.அதாவது எந்த ஒரு சூழலிலும் பிறரை சார்ந்தோஅரசு உதவிகளைஎதிர்பார்த்தோ அவர்கள் எதற்கும் காத்திருக்கவில்லைதங்களுக்குவேண்டியதை தாங்களே செய்து கொண்டார்கள்.

பொருளாதார முன்னேற்றம் இருந்தாலும்ஆதிக்க சாதியினரான மறவர்,வேளாளர் போன்றோர்களின் எதிர்ப்பு நாடார்களுக்கு சில ஆண்டுகளுக்குமுன்பு வரை கூட இருந்து வந்ததுஆனால் தங்களின் பள்ளி,கல்லூரிகளில் அவர்களின் பிள்ளைகளுக்கும் இடம் கொடுத்துதங்கள்நிறுவனங்களில் பிற சாதியினருக்கும் வேலை கொடுத்துஒருஇணக்கமான சூழலை உருவாக்கிக்கொண்டார்கள்இன்று சிவகாசி,விருதுநகர் போன்ற நகரங்களில் இருக்கும் பள்ளிகல்லூரிஎண்ணெய்நிறுவனங்கள்தீப்பெட்டிஅச்சு நிறுவனங்கள்,பட்டாசுத்தொழிற்சாலைகளில் இதை வெகு சகஜமாக காணலாம்.அதாவது ஜாதியால் தன்னை தாழ்ந்தவன் என்று மட்டமாக நினைத்தஉயர் ஜாதி ஆட்களைக் கூட தங்கள் ஒற்றுமையால் தங்களை சார்ந்துவாழ வைத்தது தான் நாடார்களின் வெற்றி..