Friday 27 February 2015

கடந்த தலைமுறையின் உணர்வுகளை எடுத்துச்சென்ற தபால் பெட்டிகள்

தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியினால் தபால் பெட்டிகளின் பயன்பாடுகள் வெகுவாய் குறைந்து விட்டது. இதனால் பயன்பாடின்றி தொங்கி கொண்டிருக்கும் பெட்டிகளை அகற்ற அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது. கடந்த தலைமுறையின் தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் பிரதான இடம்பிடித்தது தபால். கல்வி, மகிழ்ச்சி, சோகம், பிரச்னை, வேலை, திருமணம் என்று பலரது வாழ்வின் நிகழ்வுகளையும் நாட்டின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு கொண்டு சென்றதில் அஞ்சல்துறை பெரும் பங்கு வகித்தது.

இதனால் தபால்காரர்களும், தபால்பெட்டியும் வாழ்வில் நீங்காத நினைவுகளாக பலருக்கும் நிலைத்திருந்தது. தபால் அனுப்புவதில் பலரும் முனைப்பு காட்டியதால் அவர்களுக்கு வசதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தபால் பெட்டிகள் வைக்கப்பட்டன. புதிய நகர் உருவாக்கத்தின் போது பொதுமக்களே தங்கள் பகுதிக்கு தபால்பெட்டி வேண்டும் என்று விரும்பி விண்ணப்பித்த காலமும் உண்டு.

இதனால் ஒரு தெருவிற்கு ஒரு சிவப்பு பெட்டி காட்சியளித்தது. இதெல்லாம் 15ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. மொபைல் பொதுமக்கள் புழக்கத்தில் எப்போது வந்ததோ, அப்போதே தபால் எழுதும் வழக்கமும் வெகுவாய் குறைய தொடங்கியது. நினைத்த நொடியில் ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தில் இருப்பவர்களிடமும் பேசவாய்ப்பு வந்தது. கேமரா மூலம் முகம்பார்த்து பேசும் வசதியால், இத்தொடர்பு சாதனங்கள் மீது பொதுமக்களுக்கு ஈர்ப்பு ஏற்படத் துவங்கியது.

மேலும் இணையம் மூலம் விண்ணப்பித்தல், படங்களை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வசதிகளும் கிடைத்ததால் தபால் தொடர்புகள் சரிய தொடங்கின. இதனால் கடந்த 5ஆண்டுகளாக தபால் பெட்டிகளின் தேவைகளும், பயன்பாடும் குறைய துவங்கி உள்ளன. முன்பு மாவட்டம் முழுவதும் 2ஆயிரத்திற்கு மேற்பட்ட பெட்டிகள் இருந்தன. தற்போது கிராமப்புரங்களில் மிகச்சிறிய பெட்டிகள் 377ம், அதற்கு அடுத்த உருளை வடிவ சிறிய பெட்டிகள் 520, உருளைவடிவ பெரிய பெட்டிகள் 540ம் பயன்பாட்டில் உள்ளன.

அதேபோல் தொலைக்காட்சி முகப்பு பெட்டிகள் 18ம், 4 அடி உயரம் உள்ள பில்லர்பாக்ஸ் 14ம் என மொத்தம் 1469பெட்டிகளே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதில் பல பெட்டிகளில் தபால்கள் போடப்படுவதே இல்லை. வெறுமனே தபால் ஊழியர்கள் இவற்றை திறந்து பார்த்து விட்டு வருகின்றனர். நேர விரயம், ஊழியர்களின் பணிகளை இன்னமும் முறைப்படுத்த மாவட்ட அளவிலான தபால் பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தபால் இல்லாத பெட்டிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில மாதங்களில் பல பெட்டிகள் அஞ்சல் துறையினரால் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இருப்பினும் சில இடங்களில் பெட்டிகள் சிதிலமடைந்து திறக்கப்படும் நேரம் குறித்த விபரமும் இல்லாமல் கிடக்கின்றன. தபால் போட வருபவர்களுக்கு இது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து அஞ்சல்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், தபால்பெட்டிகள் மோல்டு மூலம் செய்யப்பட்டு முன்பு மதுரையில் இருந்து அதிகளவில் பெறப்பட்டன. கணினிமயத்தினால் தற்போது இவற்றின் பயன்பாடு வெகுவாய் குறைந்து விட்டது. தபால்கள் போடாத பெட்டிகள் குறித்து ஆய்வு செய்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். பயன்பாடு குறைந்ததால் கடந்த ஆண்டு தந்தி முறை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினகரன்

ஆய கலைகள் அறுபத்து நான்கு

1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

நவீனத்தை புறந்தள்ளிய மாடேர் உழவு!

தமிழர்களின் நுண்ணறிவு பல நூற்றாண்டுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கண்டு பிடிப்புகளுடன் இருப்பது தான். ""சீரைத்தேடின் ஏரைத்தேடு'' என அவ்வை கூறினார்.
மாட்டேர் எளிய தொழில்நுட்பம், பெரிய நீண்ட பயிற்சி தேவை இல்லை. மாடு, மரக்கலப்பை எளிதில் கிடைக்கும். எங்கும் கிடைக்கும். ஒரு ஏக்கர் உழ ரூ.300க்கு ஏர் கிடைக்கிறது. டிராக்டருக்கு ரூ.600 சால் விதை தேவையான ஆழத்தில் விழுந்து முறையாக மண்ணால் மூடப் பட்டு நல்ல முளைப்பு திறன் கூடுது. மண்புழு சாவதில்லை. பறவைகள் கண்ணுக்கு படாமல் தப்புகிறது. சம மற்ற பூமியையும் உழுக உழுக சமம் செய்யலாம்.
உரக்காரணிகள் தானே மக்கி விடுகிறது.குறைந்த மழை ஈரத்திலும் உடனே உழுது விதைத்திடலாம். மழை பெய்த உடனே டிராக்டர் கிடைப்பதில்லை. குடும்பத்தில் 2 பேருக்கு வேலை கிடைக்கிறது. புல், பயிர், மாட்டுக்கு காசு போடாத தீனி கிடைக்கிறது. உழவு மாடு போடும் சாணம், மூத்திரம் காட்டுக்கு உடனடி உரம். இன்னும் பல யுகங்களை சமாளித்து ஜெயித்திடும். தோப்புகளில் மரநாற்றுக்கு பழுதின்றி உழ முடியும்.
சி.பழனிச்சாமி,
திருப்பூர். 99944 94223

நன்றி : தினமலர் 

Thursday 26 February 2015

தமிழரின் மேற்குத் தொடர்ச்சி மலை சில குறிப்புகள்

இமயத்தைவிட மேற்குத்தொடர்ச்சி மலைகள் காலத்தினால் மூத்தது. இந்த மலைத்தொடரில் 126 ஆறுகள், பல சிற்றாறுகள், 29 பெரிய நீர்வீழ்ச்சிகள், சுணைகள், 50க்கும் அதிகமான அணைக்கட்டுகள் மற்றும் கொடைக்கானல், உதகை, மூனார், நீலகிரி போன்ற பல மலை வாசஸ்தலங்கள், பசுமை நிறைந்த காடுகளை கொண்டடங்கியது. 
தமிழ் பிறந்த தொட்டிலாக தென்கோடியில் அகஸ்தியர் வாழ்ந்த பொதிகை மலையிலிருந்து வரும் தென்றலுக்கு இணையாக எதுவுமில்லை. மாமதுரைப் பாண்டியன் அவையில் நீதிகேட்டு இறுதியில் கற்புக்கரசி கண்ணகி சென்றது மேற்குத்தொடர்ச்சி மலைப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கம்பம் பகுதிக்கே! 
யுனஸ்கோ நிறுவனத்தால் உலகின் பாரம்பரியம் மிக்க சின்னமாக 2011ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலை அறிவிக்கப்பட்டது.
இம்மலைத்தொடரில் எத்தனையோ அற்புதங்கள், மனத்திற்கேற்ற ரம்யமான அமைதி, புதிய உலகம், அரிய காட்சிகள் , கானுயிரிகள், துயரத்தையும் ரணத்தையும் போக்கும் மாமருந்துதான் இம்மலைத்தொடர்.
குஜராத் மாநிலம் துவங்கி மகராஷ்ட்ரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழகம் குமரிமுனை வரை 1200 கீ.மீ மேலாக தொடர் சங்கிலி போல நீண்டு தென்னிந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது மேற்குத் தொடர்ச்சி மலைகள். அரபிக்கடலிலிருந்து வரும் காற்றைத் தடுத்து தீபகற்ப இந்தியாவிற்கு மழைப் பொழிவைத் தருகின்றது. 
இம்மலைத்தொடரில் 7402 பூக்கும் தாவரங்களும், 1814 பூக்காத தாவரங்களும், அருமருந்தாக அமைந்த பல மூலிகைச் செடிகளும் -மரங்கொடிகளும், 6000வகையான பூச்சிகளும், 10 வகையான காட்டுத் தேனீக்களும், 508வகை பறவை இனங்களும், 179 இருவாழ் உயிரினங்களும், 290 வகையான அரியமீன்களும்,அதிக அளவில் யானைகளையும் கொண்ட பகுதியாக இருக்கின்றது. 
14 தேசியப்பூங்காக்கள், 44 வன உயிரின சரணாலயங்கள், 11 புலிகள் காப்பகங்கள் மட்டுமல்லாமல், புலி, சிறுத்தை, வரையாடு போன்ற 139 வகை பாலூட்டி உயிரினங்கள் இந்த மலைக்காடுகளில் வாழ்கின்றன. பலவகையான நீர்வளம், வனவளம், கனிம வளம் 35 சிகரங்கள், கொண்ட இந்த மலைத்தொடர் 150மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்ரிக்க - மடகாஸ்கர் நிலப்பரப்போடு இணைந்த மலைத்தொடராக இருந்து பிரிந்தது என்று ஆய்வுகள் சொல்கின்றன. 
80மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை சீற்றத்தினால், இப்போதுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்தது என்று மற்றொரு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 
கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி போன்ற பல ஆறுகளின் நதிமூலம் மேற்குத் தொடர்ச்சி மலைகள் தான். மணிமுத்தாறு, தென்பெண்ணை, வைகை, பெரியாறு, போன்ற ஆறுகளின் நீர்வரத்தும் இங்கிருந்துதான். எண்ணற்ற பழங்குடிமக்கள் இம்மலைத்தொடர்களில் வாழ்கின்றனர். அவர்களின் கலாச்சாரமும், வாழ்கைமுறையும், அவர்களுடைய தனித்துபம் மிகுந்த தாய்மொழியும் அலாதியானது.
குற்றாலம், அகஸ்தியர், சுருளி, வெள்ளிநீர்வீழ்ச்சி, சுஞ்சனா சுட்டே, சோகக், சாலக்குடி, கல்கட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம் சத்தோடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி என இங்கு நீர்வீழ்ச்சிகள் ஏராளம். ஊட்டி ஏரி, கொடைக்கானல் ஏரி, பேரிஜம் ஏரி, பூக்காடு ஏரி, தேவிக்குளம் ஏரி, லிட்சினி யானை ஏரி, உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் செயற்கை ஏரிகளும் இங்கு அமைந்துள்ளன.
அத்தனை இயற்கை வளங்களும் அமைந்த மலைகளின் வளத்தைப் படிப்படியாக, சில சுயநலவாதிகள் அழிக்க ஆரம்பித்தனர். பேராசை சக்திகளால் இந்த பசுமை நிறைந்த மலைகள் மொட்டையடிக்கப்பட்டு வருகின்றது. 
மரங்களை வெட்டி வனத்தின் பசுமையை அழித்தார்கள். குவாரிகள் என்ற பெயரில் மலையை துண்டாடினார்கள். ராட்சத குழாய்க்களைக் கொண்டு சுவைநீரையும் திருடத் துவங்கினார்கள். பண்ணைவீடுகள், தங்கும் விடுதிகள் என வணிக ரீதியில் மேற்குத் தொடர்ச்சி மலையையே கபளீகரம் செய்து வருகின்றனர். 
மனிதர்கள் காடுகளை நோக்கிப் புறப்பட்டதும், காடுகளிலுள்ள விலங்குகள் நாட்டை நோக்கிப் புறப்படத் துவங்கின. இவர்கள் செய்த சுயநல கூத்துக்களால், புவி வெப்பமயமாகி பருவமழை பொய்த்து , ஓசோன் படலத்தில் வாயு விரிவடைந்தது என இயற்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. கேளிக்கைகும் , மதுஅருந்துவதற்கும் காடுக்குள் சென்று காட்டை நாசப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. புற்காடுகளை அழித்து மனைகளாக மாற்றியதின் விளைவு உதகை மலைப்பகுதியே நிலச்சரிவுக்குள்ளாகியது மறக்கமுடியுமா என்ன?.
ஊட்டி, நீலகிரி, மூணாறு, மேகமலை, கொடைக்கானல் போன்ற மலைநகரங்களில் மாஸ்டர் ப்ளான் மற்றும் வனச்சட்டங்களை மீறி பண்ணைவீடுகளும், தேயிலை எஸ்டேட்டுகளும் பெருகிவிட்டதால், மலையின் அமைப்புக்கே ஆட்டம் கொடுக்குமோ என்ற அச்சம் நமக்கு ஏற்பட்டுள்ளது. 
வைகையாற்றின் கரையில் அமைந்துள்ள வருசநாடு பகுதியில் சில பேராசைக்காரர்களால் கஞ்சா பயிரிடுவதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதும் நடக்கிறது. இங்குதான் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தற்போது ரோந்துப்பணிகள் நடக்கின்றன.
இம்மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக, ஆனைக்கல் காடுகள் • அன்சி தேசிய பூங்கா • ஆரளம் காடுகள் • அகத்தியமலை உயிர்கோள காப்பகம் • அகத்தியவனம் உயிரியல் பூஙகா • பந்திப்பூர் தேசிய பூங்கா • பன்னார்கட்டா தேசிய பூங்கா • பத்திரா காட்டுயிர் உய்விடம் • பிம்காட் காட்டுயிர் உய்விடம் • பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம் • சன்டோலி தேசிய பூங்கா • சின்னார் காட்டுயிர் உய்விடம் • தான்டலி தேசிய பூங்கா • இரவிகுளம் தேசிய பூங்கா • கிராஸ்ஹில்ஸ் தேசிய பூங்கா • இந்திராகாந்தி தேசிய பூங்கா • இந்திராகாந்தி காட்டுயிர் உய்விடம் •
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் • கரியான் சோலை தேசிய பூங்கா • கர்நாலா பறவைகள் உய்விடம் • கோய்னா காட்டுயிர் உய்விடம் • குதிரைமுக் தேசிய பூங்கா • முதுமலை தேசிய பூங்கா • முதுமலை தேசிய பூங்கா • முதுமலை புலிகள் காப்பகம் • முக்கூர்த்தி தேசிய பூங்கா • நாகரகொளை தேசிய பூங்கா • புது அமரம்பலம் காடுகள் • நெய்யார் காட்டுயிர் உய்விடம் • நிலகிரி உயிர்கோள காப்பகம் • பழனிமலைகள் தேசிய பூங்கா • பரம்பிக்குளம் காட்டுயிர் உய்விடம் • பெப்பாரா காட்டுயிர் உய்விடம் • பெரியார் தேசிய பூங்கா • புசுபகிரி காட்டுயிர் உய்விடம் • ரத்தனகிரி காட்டுயிர் உய்விடம் • செந்துரிணி காட்டுயிர் உய்விடம் • அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா • சோமேசுவரா காட்டுயிர் உய்விடம் • திருவில்லிப்புத்தூர் காட்டுயிர் உய்விடம் • தலைகாவிரி காட்டுயிர் உய்விடம் • வயநாடு காட்டுயிர் உய்விடம் ஆகிய இடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 
"வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே... " திரிகூட ராசப்பக் கவிராயர் பாடின குற்றாலக்குறவஞ்சி இம்மலையில் நீராடுதுறையாக அமைந்திருக்கும் குற்றாலத்தின் இயற்கை எழிலைப் பாடுகிறது.
இயற்கையோடு இயைந்து விவசாயம் செய்து அதனை இயற்கைக்கே படைத்துக் களித்த முன்னோர்களை புறநானூற்றுப் பாடலொன்று பாடுகின்றது. பிட்டங் கொற்றன் என்ற குறுநிலமன்ன்னைப் பற்றி முல்லை நிலத்தில் பாடப்பட்டிருக்கும் பாடலின் எளிய உரை அந்தக் காலக்கட்டத்தின் பழங்குடிமக்களின் வாழ்வை நம் கண்முன்னே கொண்டுவருகின்றது. 
''அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்
கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையோடு
கடுங்கட் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழா அது வித்திய பரூஉக் குரற் சிறுதினை
முந்து விளை யாணர்” - புறநானூறு : 168'''
அருவி ஒலித்துப்பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக் கொடி வளரும் மலைச்சாரலில் காந்தள் மலர்கள் மலர்ந்து இவ்விடத்தில் மனத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த காந்தள் மலர்களின் கொழுந்த கிழங்குகளைக் கிளறித் தின்னுவதற்காக காட்டுப் பன்றிகளின் கூட்டம் அங்கு வருகின்றன. தங்களின் கூரிய கொம்புகளால் (பற்கள்) நிலத்தைக் குத்தி,கிளறி,நொண்டி காந்தள் மலர்களின் கிழங்குகளை வெளிய எடுத்து தின்று விட்டு செல்கின்றன.
இப்பொழுது அந்த நிலம் பார்ப்பதற்கு ஏர் கொண்டு உழுந்த வயல்க்காட்டைப் போன்று காட்சியளிக்கின்றது.இதைப் பார்த்த அந்த மலைவாழ் மக்கள் நிலத்தின் மேலிருந்த காந்தள் தழைகளை எடுத்து வீசி விட்டு அதன் மீது தினையை விதைக்கின்றார்கள்.விதைத்த தினை கதிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்குத் அணியமாகின்றன.
தினை கதிர்களை அறுவடை செய்ய அந்த மலைவாழ் மக்கள் ஒரு நல்ல நாளுக்காகக் காத்திருந்தனர்.நல்லநாளும் வந்தது.அறுவடை செய்ய முதல் விளைச்சலை கடவுளுக்குப் படைப்பது அவர்களின் மரபு.சந்தனக் கட்டைகளால் அடுப்பில் தீ மூட்டி அதன் மீது காட்டு ஆமாக்களிடமிருந்து (மாடு) நுரை தளும்ப கறக்கப்பட்ட புதிய பால் உற்றப் பட்ட பானையை வைக்கின்றார்கள்.பால் நன்றாக கொதித்ததும் அதில் தினையை போட்டு பொங்கல் சமைத்து கடவுளுக்குப் படைக்கின்றனர். என்ன இனிமை பாருங்கள். 
இத்தகைய மேற்குத் தொடர்ச்சி மலைகள் போலல்லாமல், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தனித்தனியாக துண்டிக்கப்பட்ட அமைப்பினை உடையது. அதிலும் பசுமையைச் சூரையாடியே விட்டார்கள். திண்டுகல் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலையின் அங்கமாக இருக்கும் சிறுமலைக்காட்டின் ஒரு பகுதியும் அழிக்கப் புறப்பட்டு விட்டார்கள். கொல்லிமலைக்கும் ஜவ்வாது மலைக்கும் அதே நிலைமை. 
மேற்குத் தொடர்ச்சி மலையினைக் கண்காணிக்க உரிய கருவிகளும், போதுமான அளவு அலுவலர்களும் இல்லை என்பது பெரிய குறை. பல்வேறு வெளிநாட்டு கும்பல்களோடு சேர்ந்து இந்தப் பகுதியில் வேட்டையாடி விலங்கினங்களுடைய தோல் மற்றும் உடல்கூறுகளை அயல்நாடுகளுக்குக் கடத்துகின்ற நிலையும் உள்ளது. 
இந்த அவலங்களை எல்லாம் தீர்க்க வேண்டுமென்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தாலும், வணிக நோக்க ஆதிக்கச் சக்திகள் அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று காட்டுக்குள் புகுந்து தங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு காட்டைச் சுரண்டுகின்றார்கள். 
இதற்காகவே, மாதவ காட்கில் தலைமையிலும், கஸ்தூரி ரங்கன் தலைமையிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றக்கூடாது என்று கேரளா போன்ற பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஏனெனில் அவர்களால் மரங்களை வெட்டமுடியாது, குவாரி நடத்த முடியாது, உல்லாச விடுதிகள் கட்ட முடியாது, தங்களுக்கு பணம் கொழிக்காது என்ற சுயநலத்தில் இந்த அறிக்கைகளை நிறைவேற்ற விடாமல் நெருக்கடி கொடுத்தனர்.
அதற்கேற்றார்போல் ,டெல்லி ஆட்சியிலுள்ள பாதுஷாக்களும் மாதவகாட்கில், கஸ்தூரி ரங்கன் அறிக்கைகளைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். கஸ்தூரி ரங்கன் அறிக்கை கடந்த 2013 ஏப்ரல் 15 நாள் மத்திய அரசிடம் கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் சிலபரிந்துரைகள்
*மேற்குத்தொடர்ச்சி மலையின் 37சதவீத வனப்பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கட்டிடங்கள் கட்டுவது, குவாரிகள், அணைகள், மின் உற்பத்தி திட்டங்கள், தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள் அமைக்கத்தடை விதிக்கப்பட வேண்டும். 
*20,000 சதுர கி.மீ காட்டைச் சுற்றி கட்டுமானங்களே இருக்கக்கூடாது. 50,000ஹெக்டேருக்கு மேல் வீடுகள் அமையக்கூடாது. புதிதாக எந்த நிலத்திற்கும் பட்டா வழங்கக் கூடாது. வனநிலங்களை வேறுபணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது ... என குறிப்பிட்டப்பட்டிருந்தது. 
இந்த அறிக்கையில் அமைதிப்பள்ளத்தாக்கு, வருசநாடு போன்ற பல வனப்பகுதிகள் மிகவும் எச்சரிக்கையாகவும், கடுமையாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கஸ்தூரி ரங்கன் அறிக்கையை விட, மாதவ காட்கில் அறிக்கையில் பரிந்துரைகள் இன்னும் கடுமையானவை. 
வளர்ச்சி, பேராசை, சுயநலம் என்ற நோக்கத்திற்காக இயற்கையின் அருட்கொடையான வளங்களை ஒருபோதும் அழிக்கக்கூடாது என்று மாதவ காட்கில் தன்னுடைய அறிக்கையில் தெளிவாக்கியுள்ளார். 
சரி இந்த இரண்டு அறிக்கைகளும் மத்திய அரசு கையில் வாங்கியதே. இவற்றை நடைமுறைப் படுத்தியதா என்ற கேள்வி எழுகிறது. ஏன் நடைமுறைப்படுத்தவில்லை. 
மத்திய அரசுதானே இந்த இரண்டு குழுக்களையும் அமைத்து அறிக்கை தரச்சொன்னது? அதே மத்திய அரசு அந்த அறிக்கையின் பரிந்துரைகளை, பரிசீலித்து நிறைவேற்றுவது தானே நியாயமும் நேர்மையும். அதைக் கிடப்பில் போட அவசியம் என்ன?
இந்த கேள்விகளின் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை அல்லவா. கலாச்சாரத்திலும் ஒன்றோடு ஒன்று இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அழிவுநேர்கிறது என்பதை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. மனித ஜீவனோடும், இந்த சமுதாயத்தோடும் அங்கமாகத்தான் மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கின்றது. இயற்கையை காப்போம் வாரீர்.. 
-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
24-02-2015

சங்ககாலம் முதல் சங்கு ஊதின காலம் வரை பகுதி - 2

ஆதித்த சோழன் பல்லவர்களை தோற்கடித்துத் தொண்டை மண்டலத்தைச் சோழ மண்டலமாக மாற்றினான். இவனுக்குப் பிறகு வந்த (907) முதலாம் பராந்தகச் சோழன் நான்கு புறமும் உள்ள எதிரிகளை வைத்துக் கொண்டு வாழ்ந்தவன். தெற்கில் பாண்டியர், சேரர், வடக்கில் ராஷ்டிகூடர். இத்துடன் மற்றொரு புண்ணியவான் ஈழத்தில் உள்ள சிங்கள மன்னன். 






ஆனால் ஆச்சரியம் இத்தனை இடர்பாடுகளுக்கிடையேயும் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் விஸ்தீரணத்தை அதிகப்படுத்திக் கொண்டுருந்ததை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஆனால் இன்று பெருமையாய் நாம் பேசிக் கொண்டுருக்கும் மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் என்றைழக்கப்படும் ராஜகேசரி அருள்மொழிவர்மன் சோழர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர். ஆனால் இவர் ஆட்சிப் பொறுப்பு (985) வருவதற்குள் இவருக்கு முன்னால் வலிமையற்று இருந்தவர்கள் உருவாக்கிய கரடுமுரடான பாதைகள், குடும்பக் குழப்பங்கள், மர்மமான இறப்பு, குடும்ப அரசியலால் உருவான சூழ்ச்சிகள் போன்றவை அனைத்தும் சரித்திரம் முழுக்க இருக்கிறது. கடந்த ஆறு நூற்றாண்டுகளாக இருட்டு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உறையூர் பகுதியிலிருந்த தங்களது எழுச்சிப் பயணத்தைத் தொடங்கினர். இங்கு ஆதிக்கம் பெற்ற விஜயாலய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றி இந்த நகரை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சாம்ராஜ்யத்தின் விதையை ஊன்றினான்.






 சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் என்றும் பழைய மன்னர்களைப் பற்றியும் நாம் பாடப்புத்தகத்தில் படித்து வந்து இருப்போம். பாண்டிய மன்னர்களைப் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுப் போகலாம், ஆனால் இந்தப் பாண்டிய சாம்ராஜ்யங்களுக்கு உள்ளே போகப் போகப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களே சோர்ந்து போகும் அளவிற்கு வண்டி வண்டியாக விசயங்கள் வந்து கொண்டேயிருக்கிறது. சோழர்களுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாண்டிய மன்னர்கள் (கிபி 1200 முதல் 1300 வரை) வீழ்ச்சியடைய முக்கியக் காரணம் குடும்பச் சண்டைகளே முக்கியமாக உள்ளது. இதுவே தமிழகத்தில் அந்நிய படையெடுப்பாளர்களைப் பாக்கு வெற்றிலை வைத்து வரவேற்காத குறையாக உள்ளே அழைத்து வந்தது. கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் இன்று வரையிலும் தமிழன் என்றால் ஒற்றுமை என்பது காததூரம் என்பது போலத்தான் இருக்கிறது. அப்புறமெங்கே இன உணர்வு, மானம், மரியாதை மற்ற விசயங்கள் எல்லாம்? 

மூலம்: தமிழர் தேசம்
ஆசிரியர்: ஜோதிஜி

Wednesday 25 February 2015

சங்ககாலம் முதல் சங்கு ஊதின காலம் வரை பகுதி - 1

தமிழகத்தை ஆண்டு மூன்று மன்னர்களும் ஒவ்வொரு சமயத்திலும் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளை நோக்கி படையெடுத்தார்கள், வெற்றி கொண்டார்கள். மானம் பெரிதென வாழ்ந்தார்கள். ஆனால் இந்த மூன்று மன்னர்களும் ஒன்று சேர்ந்தார்களா?  தமிழக மன்னர்கள் போர்க்களத்திற்கு வெளியே புரிந்துணர்வோடு ஒன்று சேர்ந்து இருந்தது மிகக்குறைவே. இதன் காரணமாகவே மூவேந்தர்களின் ஆட்சி கிபி இரண்டாம் நூற்றாண்டில் இறுதியில் முடிந்து போய் அடுத்து 300 ஆண்டுகள் களப்பிரர் ஆள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த சோழப் பேரரசுக்குள் உருவான குடும்பச் சண்டைகளும், மூவரும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு சாக அடுத்தவர்கள் உள்ளே வர காரணமாக இருந்தவர்களும் நம் அற்புத தமிழ் மன்னர்களே?


நாம் இன்றும் பெருமையுடன் நினைத்துப் பார்க்கக்கூடிய இராஜராஜ சோழன் ஆட்சியை விட பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தைப் புராதன சிறப்பு மிக்கது என்கிறார்கள். அதிலும் கடைச்சங்க பாண்டியர்கள், இடைச்சங்க பாண்டியர்கள், இது போகப் பிற்காலப் பாண்டியர்கள் என்று வரலாற்றுப் பக்கங்களின் ஒவ்வொரு பகுதியிலும் நீக்கமற நிறைந்துள்ளனர். நாம் மொத்தமாக உள்ளே புகுந்து வெளியே வர வேண்டுமென்றால் நாமே நமக்குச் சங்கூதிக் கொள்வது போல் ஆகிவிடும். 





மானவர்மன் என்னும் பாண்டிய மன்னன் ஆட்சிகாலத்தில் தான் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நிலவரம் முற்றிலும் புதிய பாதையை நோக்கி நகரத் தொடங்கியது. மதுரையை மையமாகக் கொண்டு தங்களின் எழுச்சி அத்தியாயத்தின் தொடக்கப் பக்கங்களை எழுதத் தொடங்கினர். பாண்டிய மன்னர்களின் ஆதிக்கத்தின் ஒரு பகுதியாகப் பல்லவர்களுடனும் மோதி தங்களின் ஆளுமையைப் பெருக்கிக் கொள்ளத் தொடங்கினர். ஆறாம் நூற்றாண்டில் கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிர மன்னனை வெற்றிக் கொண்ட பிறகே பாண்டிய மன்னர்களின் பொற்காலம் தொடங்கியது. ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் அரிகேசரி மற்றும் ராஜசிம்மன் போன்ற பாண்டிய மன்னர்கள் உள்ளேயிருந்த பல குறுநிலமன்னர்களை அடக்கி தாங்களை வலிமையாக்கிக் கொண்டனர். ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் தான் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் (815 முதல் 862) பல்லவ பேரரசுடன் மோதிய போது மற்றொரு ஆச்சரியமும் உருவானது. 


அருகேயிருந்த ஈழத்தில் தமிழ்நாட்டு அரசியல் வேர்விடத் தொடங்கியது. எல்லாவகையிலும் எழுச்சி பெற்ற பாண்டிய பேரரசு முதல் முறையாக ஈழத்தில் படையெடுத்துச் செல்ல அங்கேயிருந்த ஸேன மன்னன் (833 முதல் 853) ஓட்டம் பிடிக்க அநுராதபுரத்தில் கிடைத்த செல்வமும் வெற்றியுமாகத் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தான். இதுவே தான் இராஜராஜ சோழன் காலம் வரைக்கும் நடந்தேறி வந்துள்ளது. செல்லும் இடங்களில் தங்களின் கொடியை பறக்கவிட வேண்டியது. முடிந்தால் சார்பாளர்களை நியமிக்க வேண்டியது. முடிந்தது கதை. மன்னர்களைப் பொறுத்தவரையிலும் இதுவொரு மற்றொரு மணிமகுடம். பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு முடிவுக்கு வர எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியத்துவம் பெற்ற காரணங்களில் ஒன்று உண்டு ? ஈழத்துக்குப் போர் எடுத்து சென்று வென்றது. பாண்டிய மன்னர்களின் போர் உக்கிரத்தை தாங்க முடியாமல் தப்பிச் சென்ற மன்னனை கண்டு காணாமல் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தது. தங்களிடம் தோற்றவன் நெஞ்சம் முழுக்க வஞ்சகத்துடன் இருப்பானே என்பதை மறந்து போக இதுவே இவர்களின் குடும்பத்தில் குளறுபடி உருவாவது வரைக்கும் வந்து நின்றது. முறைப்படியான போரில் வெற்றி கொள்ளமுடியாது என்பதை உணர்ந்த ஈழத்திலிருந்த மன்னன் இரண்டு காரியங்கள் செய்தான்.






 ஒன்று பல்லவ அரசுடன் இணைந்து பாண்டிய பேரரசை எதிர்த்தது. இது முறைப்படியான போர். முதுகுக்குப் பின்னால் இருந்து செய்த மற்றொரு காரியமும் ஒன்று உண்டு. இந்தத் தந்திரக்கார கூட்டணிப் படையினர் பாண்டிய மன்னனின் மகனாகிய வரகுணபாண்டியனை சுதியேத்தி அப்பாவுடன் மோத வைத்தது. அப்பாவுடன் மோதி தோற்ற மகன் ஈழத்துக்குச் சென்றான். இது போதாதா? அடுத்தத் திட்டம் உருவானது. ஈழத்து ஸேன மன்னன் படைகள் (853 முதல் 857) பாண்டிய நாட்டின் தென் பகுதியான மதுரையை நோக்கி முன்னேறின. வடக்கில் வந்த பல்லவர் படைகள் சுற்றி வளைக்க முடிவுக்கு வந்தது. போரில் வீரம் ஜெயிக்குமா? விவேகம் ஜெயிக்குமா? ஜெயித்தது விவேகமே? சிங்கள மன்னன் படை மகன் ஸ்ரீ வரகுண பாண்டியனைப் புதிய பாண்டிய மன்னனாக (862) முடிசூட்டி அழகு பார்த்தது. அப்பா புதைத்த மண் காய்வதற்குள் மகன் அரசாட்சியில் அமர்ந்த காட்சியைக் காணும் போது 21 ஆம் நூற்றாண்டு வரைக்கும் சமகால அரசியலும் இப்படித்தானே இருக்கிறது.


 திருப்புறம்பியத்துப் போர் பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கு நடந்த போர். இந்தப் போரின் மூலம் தான் பல்லவர்களின் ஆட்சியும், பாண்டியர்களும் வலுவிழக்கக் காரணமாக இருந்தது. கொல்லைப்புற வாசல் வழியாக வந்த பாண்டிய மன்னன் வரகுண பாண்டியனை தோற்கடிக்கப்பட்டான். போரில் பல்லவ மன்னன் அபராஜிதன் வெற்றி பெற்றுருந்தாலும் இந்தப் போர் தான் சோழர்கள் தங்களது பாதையை உருவாக்கிக் கொள்ளக் காரணமாகயிருந்தது. இந்தப் போரில் பல்லவர்களுக்கு உதவிய முதலாம் ஆதித்த சோழன் சும்மாயிருப்பாரா? 

அவர் என்ன செய்தார் என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

மூலம்: தமிழர் தேசம்
ஆசிரியர்: ஜோதிஜி

Tuesday 24 February 2015

விருதை தோலாண்டி திரு.தொ.மு.ந.மு.நல்லதம்பி நாடார் வரலாறு - 1

எனது ஐய்யாப்பா (தகப்பனாரின் தகப்பனார்) திரு.தொ.மு.ந.மு.நல்லதம்பி நாடார் அவர்களின் தந்தையார் திரு.தொ.மு.ந.முத்துமாரி நாடார் அவர்கள் 19ம் நூறாண்டிலேயே அதாவது 1865 காலக்கட்டத்திலேயே விருதுநகரை மையமாக கொண்டு ஏலக்காய், காபிக் கொட்டை போன்றவற்றை கொல்கத்தா வழியாக ஏற்றுமதி செய்து வந்துள்ளார். தனது மக்களாகிய தொ.மு.ந.மு.சோமசுந்தரநாடார், சுப்பையா நாடார், தனுழ்ஹ்கோடி நாடார், ரத்தினசாமி நாடார், நல்லதம்பி நாடார் ஆகியோரை சிறு பிள்ளைகளாக இருந்த பொழுது இரட்டை குதிரை பூட்டிய சாரட் வன்டியில்தான் படிக்க அனுப்பியுள்ளார். தனது மகன்களை கோட்டும், அரைக்கால் டவுசரும் போட்டு சரிகை தொப்பி அணிவித்துதான் பள்ளிக்கு அனுப்பியுள்ளார். விருதுநகர் தெற்கு ரத வீதியில் சங்கிலி கருப்பசாமி கோவில் அருகில் உள்ள வீடுதான் சாரட் நிற்குமிடமாக இருந்துள்ளது. இவர்களை அப்பொழுது "லேண்ட் லார்ட்" என்று அழைத்து வந்துள்ளனர்.




1900ல் பிறந்த எனது ஐய்யாப்பா திரு.தொ.மு.ந.மு.நல்லதம்பி நாடார் அவர்கள் ஒரு அரேபிய குதிரையை வளர்த்து வந்தார். தினமும் அதில் சவாரி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். இவர் குதிரையில் சவாரி செய்யும் கம்பீரத்தை அந்த காலத்து அரசர்களே வியந்து ரசித்துள்ளனர். இவர் சேவல் சண்டையிலும், சண்டை சேவல் வளர்ப்பிலும் பிரபலம். அதே போல் ராஜாளி பறவை (FALCON) எனும் கழுகு வகையை சேர்ந்த பறவையையும் வேட்டைக்கு வளர்த்து வந்தாராம். விருதுநகர் பொட்டலில் இவரது விசிலுக்கு அது பறப்பதும் வேட்டையாடுவதும், இன்னொரு விசிலுக்கு இவரிடம் வருவதையெல்லாம் காண ஒரு கூட்டம் இருக்கும். விருதுநகருக்கு முதன் முதலில் மின் நிலையம் அமைக்க இடம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது பாவாலி ரோட்டில் தற்பொழுது மின் நிலையம் அமைந்திருக்கும் இடத்தை தானமாக குடுத்தவர் இவர். அந்த காலத்தில் பிரபலமான இங்கிலாந்து நிறுவனமான ஜி.இ.சி எனப்படும் ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனியின் (General Electric Company) தென் தமிழகத்தின் ஏகபோக ஒரே மொத்த விற்பனையாளராக  இருந்துள்ளார்.




மதுரையில் பிரபல கிருத்துவ மிஷன் மருத்துவமனை எதிரில் கீழ வெளி வீதியிலும் கடை நிறுவி விருதுநகர், மதுரை என இரு ஊரிலும் எலக்ட்ரிக் தொழில் நடத்தி வந்துள்ளார். இவரது குதிரை ஏற்றம், குதிரை வளர்ப்பு ஆகியவற்றை கவனித்த எட்டயபுரம் மன்னர் போன்ற மன்னர்கள் இவரிடம் ஆலோசனை கேட்டே குதிரைகள் வாங்கினார்களாம். இது போல பல மன்னர்களிடம் நெருங்கிய நட்பு வைத்திருந்துள்ளார். இவருக்கு பின்னர் எங்கள் தொ.மு.ந.மு.ந.தனசேகர பெரியய்யாவும், ஜெய்சிங் பெரியய்யாவும் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் வேட்டை என பிரபலமாக இருந்து வந்தனர்.

என் முன்னோர்
முன்னோர் - தோலாண்டி நாடார்
இரண்டாம் தலைமுறை - தொ.முத்து நாடார்
எள்ளுத் தாத்தா - தொ.மு.நல்லதம்பி நாடார்
கொள்ளுத் தாத்தா - தொ.மு.ந.முத்துமாரி நாடார்
ஐய்யாப்பா - தொ.மு.ந.மு.நல்லதம்பி நாடார்
ஐயா - தொ.மு.ந.மு.ந.பாஸ்கரன் நாடார்
நான் - தொ.மு.ந.மு.ந.பா.குமரன் நாடார்

மேலும் தகவல்கள் பரிமாருகிறேன்.

தமிழர் தேசம் - வர்ணாசிரம சூழ்ச்சியில் சான்றோர்கள்

வர்ணாசிரம வர்க்க பேதங்களை உருவாக்கியவர்கள் ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோடு வைத்திருந்தனர். அதைத் தாண்டி வர முடியாத அளவிற்குத் தந்திரமாக அது சார்ந்த பல விசயங்களையும் உருவாக்கி வைத்து இருந்தனர். மீன்களும், மான்களும் கூட வலையில் இருந்து தப்பிவிடக்கூடிய வாய்ப்புண்டு. ஆனால் இந்த மதம், சடங்குகள் போன்ற வலைக்குள் விழுந்தவர்கள் தான் விழுவதோடு தன்னுடைய அடுத்து வரும் தலைமுறைகளையும் சேர்த்து விழ வைத்து விட்டு சென்று விடக்கூடிய சக்தி படைத்தது. இதைத்தான் நம்முடைய மன்னர்களின் வரலாறு மற்றும் அவர்களால் ஆளப்பட்ட மக்களின் சமூக வாழ்க்கையும் இதைத்தான் உணர்த்துகின்றது. மன்னர்களாக வாழ்ந்தவர்கள் இந்தக் கோவில்களுக்குக் கொடுத்த முக்கியவத்தை அடுத்த மன்னர்களுக்குக் கொடுக்காத காரணமும், ஒற்றுமையை விரும்பாத காரணங்களும் தான் பல சாம்ராஜ்யங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்து போகக் காரணமாக இருந்தது. இதன் காரணமாக உருவான பிரச்சனைகள் தான் மக்களின் நல வாழ்வு என்பதை விட அடுத்தவனை ஜெயிப்பது எப்படி? என்று ஆள்பவர்களின் புத்தியும் மாறத் தொடங்கியது. வஞ்சமும் சூழ்ச்சியும் முன்னேறிச் செல்ல கடைநிலை மனிதன் வரைக்கு நாகரிகம் மறைந்து நரிக்குணம் மேலோங்கத் தொடங்கியது.

ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சி அதிகாரத்திலும் வந்தமர்ந்த பிராமணர்கள் மொத்த போக்கையும் மாற்றத் தொடங்கினர். முத்தாய்ப்பாக மன்னர்களுக்குப் புனைப்பெயர் முதல் புழுகுணி கதைகள் வரைக்கும் சூட்டி அழகு பார்த்தனர். அவரவர் வம்சத்தையும் தெய்வ வம்சத்துடன் சேர்த்துக்கூறி அவரவருக்குக் குலப்பெருமை என்றொரு வட்டத்தைக் கொண்டு வந்தனர். இம்மை, மறுமை, புண்ணியம், பாவம், முன் ஜென்ம பலன் என்று ஒவ்வொன்றும் சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. நாடார்களின் தொடக்கப் பாரம்பரிய தொழிலான இந்தப் பனைமரத்திற்கு ஒரு புருடா கதை ஒன்று இந்தச் சரித்திரத்தில் உள்ளது. பனைமரச்சாறு தேவர்களின் தேவாமிர்தமாகப் பூமியில் கொட்டிக் கொண்டிருந்தது. புனித மந்திரங்களைத் தொடர்ந்து ஜெபித்ததால் அப்புனிதச் சாறு அடங்கிய மரத்தின் தலைப்பாகம் பூமிக்கு நேராக விருப்பம்போல வளைந்து கீழே தயாராக வைக்கப்பட்டிருக்கும் பானைகளில் தாரளமாக வடியத் தொடங்கியது. ஆனால் ஷத்திரியன் ஒருவன் தெய்வங்களை அவமதித்து விட்டான். அதாவது பிராமணார்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்களை அவன் உச்சரித்த காரணத்தால் தெய்வ நிந்தனை ஆகிப் போனது. அன்று முதல் பூமிக்கு நேராகத் தலைவணங்கி அமுத்தத்தைத் தந்த வந்த மரங்கள் பிடிவாதகமாகச் செங்குத்தான் நிற்கத் தொடங்கின. எனவே தான் அவைகளில் ஏறிச் சாறு எடுக்க வேண்டிய நிலை உருவானது. கதை, திரைக்கதை வசனம் நல்லாயிருக்கா?


 இது போலத்தான் சூரிய வம்சம், சந்திர வம்சம் என்று ஒரு புதிய மூலக்கூற்றை உருவாக்கி மன்னர்களைச் சுதியேத்தி எப்போது தங்களைச்சுற்றி இருக்கும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்து கொண்டு வர காலப்போக்கில் பிராமணர்கள் உருவாக்கியது தான் சமூகச் சட்டம் என்ற நிலை வரைக்கும் வந்து சேரத் தொடங்கியது. எல்லா மன்னர்களின் சபையிலும், ஆட்சி அதிகாரங்களிலும் இருந்தாலும் இவர்களுக்கென்று தனியான சட்டங்களும் சம்பிரதாயங்களும் இருந்த காரணத்தால் வேண்டும் போது உள்ளே வந்தனர். தேவையில்லாத போது அணைவரையும் விட்டு விலகி இருந்தனர். இவர்களே பல சமயம் மன்னர்களைக்கூட விலக்கி வைத்து இருந்தனர். இதுவே தான் தென்னிந்தியாவிற்குள் ஆங்கிலேயர்கள் உள்ளே வந்து போதும் முக்கியப் பதவிகளில் இவர்களே இருந்தனர். எவரும் எதிரியுமல்ல அதே சமயத்தில் நண்பர்களும் அல்ல. தங்கள் வாழ்க்கை முக்கியம். அதற்காக உருவாகும் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் அதைவிட முக்கியமென்று ஒவ்வொரு காலகட்டத்திலும் இதை அடிப்படையாக வைத்தே செயல்பட்டனர்.




 நாடார்கள் என்பவர்கள் சேர, பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள் என்பதற்கு இன்று வரைக்கும் பல ஆதாரங்களைச் சரித்திரம் வைத்துள்ளது. தென் தமிழ்நாட்டில் நாடார்கள் என்பவர்கள் அசல் குடிகளாக இருந்தவர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவர்கள் இனத்தின் பரம்பரைக் கதைகளும் இதைத்தான் பல்வேறு விதமாகக் சொல்கின்றது. ஆனால் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சியென்பது ஆண்டுக் கொண்டிருந்த மன்னர்களுக்கு மட்டும் பாதிப்பாக அமைந்துவிடவில்லை. ஒரு மிகப் பெரிய சமூக இன மக்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது. பாண்டிய மன்னர்களுக்கு இருந்த உரிமைகள், சலுகைகள், பட்டங்கள், சொத்துக்கள் யாவும் பறிக்கப்பட்டு மீதியிருந்தவர்களை நிர்கதியாக்கப் பட்டனர். மதுரைப் பகுதிகளில் இருந்து நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்டனர். எல்லாவற்றையும் இழந்தவர்கள் நாடோடிகளாகத் தென் தமிழகத்தில் சுற்றி அலைய மொத்தத்தில் சமூகத்தில் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். விவசாயம், பனைஏறுதல் போன்ற தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் விளைவே மக்கள் வாழ முடியாத பகுதியாக இருந்த திருச்செந்தூர் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


 இவர்களால் மீண்டு வரமுடியாதபடி அடுத்து வந்த நாயக்கர்கள் பாண்டியர்களின் பெருமை மற்றும் அவர்கள் குறித்த அத்தனை தகவல்களையும் அழிக்க முற்பட்டனர். இலக்கியங்களில் உள்ள பல விசயங்களை மாற்றித் திரிபு சேர்த்து திக்குமுக்காட வைத்தனர். இதன் தொடர்ச்சியின் காரணமாகத்தான் இவர்கள் சமூகத்தில் தாழ்ந்த நிலைக்கு வர வேண்டிய சூழ்நிலை உருவானது. பிற்காலத்தில் பாண்டியர்களின் வழித்தோன்றல் என்று சொல்ப்படும் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதியில்லை என்பதாகக் கொண்டு வரப்பட்டது. சரித்திர சான்றுகளின்படி நாடார்களின் முன்னோர்களான பாண்டியர்கள் கோவிலின் மேற்கு வாயில் வாயிலாக உள்நுழைந்த தான் தெய்வங்களை வழிபபட்டனர். இன்று வரை தென்மாவட்டங்களிலுள்ள கோவில்களின் மேலைக்கதவுகள் மூடிக் கிடக்கும் நிலையைப் பார்க்கலாம். மேற்கு வாயில் நிரந்தரமாக மூடப்பட்ட காரணத்தால் தங்கள் பெருமைக்கு உண்டான குறைவு என்பதாகக் கருதிக் கொண்ட நாடார்கள் கோயில்களின் ஏனைய வாயில்களின் வாயிலாக உள் நுழைய மறுத்தனர். ஒவ்வொரு தலைமுறையிலும் மனதில் பதிந்த போன இந்தக் கோவில் விவகாரம் தான் பின்னால் விகாரமான சமூக அமைப்பை உருவாக்கத் தொடங்கியது. இந்தக் கோவிலை வைத்து தான் பெரியவன், சிறியவன், தாழ்ந்தவன் போன்ற முரண்பாடுகள் உருவாகத் தொடங்கியது. வெளியே நின்று வணங்க வேண்டும். பாதி அளவிற்கு உள்ளே வந்து வணங்கலாம். குறிப்பிட்ட மக்கள் அருகே வந்து வணங்கலாம். இதற்கு மேலே ஆகம விதிகள் என்ற போர்வையில் குறிப்பிட்ட சிலர் மட்டும் கருவறை வரைக்கும் வரலாம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சட்டதிட்டங்களைச் சங்கடப்படாமல் அள்ளித் தெளிக்க அவரவரும் அடித்துக் கொண்டு சாக ஆரம்பித்தனர்.

பிராமணர்களை நாம் குறைசொல்வதை விட இப்போது இன்னோருவிதயத்தை யோசித்துப் பார்க்கலாம். மறுஜென்மம் எப்படி இருக்கும் என்றே தெரியாத மக்களுக்கு ஏன் அடுத்த ஜென்மத்தில் மேல் ஆசை வந்தது. இதன் காரணமாகத்தானே நாடார்கள் பூணூல் அணியத் தொடங்கினர். இதைச் செய்தால் இது நிவர்த்தியாககும் என்று சொன்னவுடன் இன்று வரைக்கும் அத்தனை பேர்களும் அட்சரம் பிறழாமல் கடைபிடிக்க நினைப்பது ஏன்? இதைத்தான் ஆசை என்றொரு சொல்லும் இறுதியில் அவஸ்த்தை என்றொரு முடிவும் கிடைக்கின்றது. மன்னர்களுக்குப் பிராமணர்கள் உருவாக்கி வைத்த குலப்பெருமை முக்கியம். மக்களுக்குத் தாங்களும் சமூகத்தில் சரியான சம உரிமைகளில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் என்பதை நிலை நாட்ட வேண்டிய அவஸ்யமாக இருக்க ஒவ்வொருவருரின் தேவைகளும் அவரவரை உந்தித் தள்ளத் தொடங்கியது. பிராமணர்கள் புள்ளி மட்டும் தான் வைத்தார்கள். அவரவர்களும் தங்களுக்குப் பிடித்த வகையில் கோலம் போட்டுக்கொள்ளத் தொடங்கினர். சிலர் ஜெயித்துப் பெரும்புள்ளியாகத் தெரிந்தனர். ஜெயித்து வர முடியாதவர்கள் சிறு புள்ளியானதோடு வாழ்வில் கரும்புள்ளியாக மாறி தாழ்த்தப்பட்டோர் என்றொரு வரிசையில் இடம் பிடிக்கத் தொடங்கினர். கடைசிவரைக்கும் இநத மக்களை மேலே வரமுடியாத அளவிற்கு உருவாக்கிய சமூக முரண்பாடுகளின் காரணமாகவே தவிப்பான வாழ்க்கை வாழத் தொடங்கினர்.


குறிப்பிட்ட சாதி மக்களைத் தங்களுக்கு அடிமையாக வைத்திருக்கும் பட்சத்தில் ஆதிக்கச் சாதியினர்களுக்குப் பல விதங்களிலும் நன்மை உருவானது.. இவர்களை வைத்தே தங்களின் பொருளாதாரப் பலத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். அதைக் கொண்டே மேன்மேலும் வளர்ந்து வருபவர்களை உயரவிடாமல் அழுத்தி வைத்திருக்கவும் முடியும். இலவசமாக வேலை வாங்கிக் கொள்ளலாம். எதிர்த்து பேச முடியாது. பேசினால் தெய்வ குற்றம். அதற்கு மேலும் அரசாங்க எதிர்ப்பு என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து ராஜதுரோகியாக மாற்றி விட முடியும். உன்னை விட நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்று சொல்லியே அவனை மழுங்கடித்த சிந்தனைகளுடன் வைத்திருக்கலாம். கடைசி வரைக்கும் போட்டிக்கு ஆள் இல்லாத இடத்தில் வெற்றிக் கோப்பையை வாங்குவது எளிதாகத்தானே அமைந்து விடும். இப்படித்தான் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினர்களைச் சுரண்டல் மனப் பான்மையில் ஒவ்வொருவரும் அமுக்கி வைத்திருந்தனர். ஆனால் இப்போது கோவிலுக்குள் நுழைந்த ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நாடார்களைச் சமாளிப்பது பெரும் பாடாக இருக்க ஆதிக்கச் சாதியினர் எடுத்த ஆயுதம் கலவரம் என்பதாகும்.

மூலக் கரு: தமிழ் தேசம்
ஆசிரியர்: ஜோதிஜி

Monday 23 February 2015

பெருந்தலைவர் - உன்னத மனிதர்

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நாம் இறந்துபோவதற்குள் ஏதேனும் ஒரு சிறப்பை செய்திருக்கவேண்டும் அப்பொழுதுதான் இந்த மனித பிறப்பிற்கு ஒரு சிறப்பு இருக்கிறது என்று படித்த ஞாபகம். அதுபோல் ஒவ்வொரு மனிதனும் சில சிறந்த பண்புகளால் பலரின் இதயங்களில் இடம்பிடித்து விடுகிறார்கள். சிலருக்கு தங்கள் குழந்தை, சிலருக்கு மனைவி, சிலருக்கு ரசிகன், சிலருக்கு தொண்டர்கள் என ஒவ்வொரு துறையைப் பொருத்தும் இந்த சிறப்புகள் மாறிக்கொண்டே செல்கிறது என்றபோதிலும் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரே விஷயம் நல்ல பண்புகள், சிறப்பான செயல்கள் என்பவை மட்டுமே இருக்கக் கூடும். இன்னும் சிலர் எண்ணிக் கொள்வதுண்டு பணம் இருந்தால்தான் ஒரு மனிதன் அனைவருக்கும் தெரிந்த ஒருவனாக மாறுகிறான் என்பது சில நாட்களுக்கு மட்டுமே பொருத்தமான வார்த்தைகள் என்று சொல்லவேண்டும். இன்று நம்மிடம் இருக்கும் பணத்தால் நமக்கு கிடைக்கும் மதிப்புகள் மரியாதைகள் அனைத்தும் பணம் இல்லாத நிலைகளிலும் கிடைக்குமா என்பது ஒரு கேள்விக் குறியே. சரி இப்படி ஒவ்வொரு மனிதனையும் வேறுபடுத்திக் காட்டும் பல சிறப்புகள் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு என்பது நாம் அறிந்ததே. இதில் பலர் மறைந்த பிறகும் எல்லோரின் இதயங்களிலும் மறக்காத பல சிறப்புகளை ஏற்படுத்தி செல்பவர்களும் உண்டு . இது போன்ற சிறப்புகளுக்கு உரிய ஒரு உயரிய எண்ணங்களைக் கொண்ட மனிதரைப் பற்றியப் பதிவுதான் இது. இவரைப் பற்றி அதிக அறிமுகங்கள் தேவை இல்லை. பல யதார்த்தங்களுக்கு சிறப்பு சேர்த்த ஒரு சிறந்த பண்பாளர் என்று சொல்லலாம். எளிமையான ஒரு அரசியல்வாதி. நேர்மை தவறாத கறுப்புத் தேகத்திற்கு சொந்தக்காரர். 



னது சிறந்த பண்புகளால் தனது பெயருக்கு ஒரு புது முகவரி தந்தவர். இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!
இவருக்கு காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு காலா காந்தி’, பெரியாருக்கு பச்சைத் தமிழர்’, காங்கிரஸ்காரர்களுக்கு ‘பெரியவர்’ என்று ஒரு காலத்தில் திரும்பும் திசை எங்கும் பல புனைப் பெயர்களுடன் ஒற்றை முகத்தில் பல லட்சம் இதயங்களை கொள்ளைகொண்டவர் என்று சொல்லலாம்.
ன்று எந்த அரசியல் வாதியிடமும் இல்லாத யதார்த்தப் பேச்சு குவிந்து கிடந்த ஒரு களஞ்சியம் என்று சொல்லலாம். இந்த மனிதர் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளை. இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!
பாராட்டுக்களையும், பட்டங்களையும் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளும் அரசியல் வாதிகளின் மத்தியில் தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்! கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்..!
தவி ஏற்ற மறுநொடியே மொத்த நாட்டையும் தனதாக்கிக்கொள்ள துடிக்கும் தலைவர்களின் மத்தியில் தான் முதலமைச்சர் ஆனது. இவரின் தாய் சிவகாமி தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கு காமராசரோ நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் கெட்டப் பெயர்தான் உருவாகும். ஆகவே விருதுநகரிலேயே இருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இது மட்டும் இல்லாது வீட்டையாவது சற்று பெரிதாக்கித் தரும்படி கேட்ட தனது அன்னையிடம் முடியாது என்று மறுத்தவர்.
இப்படி திகழ்ந்த இந்த மனிதரின் உணவுரகசியங்கள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்றுத் தெரியலை. இதோ தெரிந்துகொள்ளுங்கள். மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து.
 நான் இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்வை . உண்மையாக ஒரு மனிதனின் வார்த்தைகளுக்கு இத்தனை சக்தியா என்பதை இவரைப் பற்றி படித்தபொழுதுதான் உணர்ந்து கொண்டேன்.ஆம் நண்பர்களே..! இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார் இந்த மனிதர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


திக கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் பதில் அளிப்பது எப்படி என்று இந்த மனிதரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும். அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு ஊடங்கங்களின் சந்திப்பில் 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். ‘இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று மட்டுமேசொல்லி விட்டு மேடையில் இருந்தி இறங்கிவிட்டார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .
இதுவரை இருந்த முதல் அமைச்சர்களிலே மிகவும் வித்தியாசமான ரசனை கொண்டவர் இவர் என்று சொல்வது சால சிறந்ததே ஆம் நண்பர்களே. மொத்த அரசியல் தலைவர்களில்நாற்காலி விரும்பாத ஒரு தலைவர் இவர்தான் என்று சொல்லவேண்டும். நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
ன்று இருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு பின் வரும் சிறப்புகள் இருக்கும் என்று தெரியவில்லை ஆனால் இந்த சிறந்தப் பண்புகளை முதன் முதலில் அரசியலில் விதைத்து சென்ற ஒரே மனிதர் இவர்தான் என்று சொல்லவேண்டும். ஆம் நண்பர்களே..! தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்..!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர். தனது வலதுகரமாக இருந்தஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!
இப்படிப்பட்ட ஒரு சிறந்த மாமமனிதர் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு1975 அக்டோபர் 2-ம் தேதி இறந்துபோனார். ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் மட்டுமே என்றால் பார்த்துகொள்ளுங்கள் !


திருமங்கலம் பெரிய காத்தவராயன் கோவில்


பெரியக்காத்தவராயன் கோவிலானது திருமங்கலம்-மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 21தெய்வ வழிபாடுத்தளம் ஆகும். மூலதெய்வமாக காமாட்சி அம்மன் வீற்றிருக்குகிறாள். காவல்தெய்வமாக ஸ்ரீகாத்தவராயன் சுவாமிகள்வீற்றிருக்குகிறார் .கல்யாணத்தடைகளை நிவர்த்தி செய்யும் ஏழுகன்னிமார்தெய்வம் இருக்குகிறார்கள். வருடத்தில் ஒரு முறை பாரிவேட்டை நடைபெறும்,முன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும். சிவராத்ரி அன்று சிறப்பாக பூஜை நடைபெறும்.
வழி-மதுரை to திருமங்கலம் பஸ் வசதி  எண் 48,49
             விருதுநகர் to திருமங்கலம் பஸ் வசதி  எண் 13
(திருமங்கலம் ரயில் நிலையம் மிக அருகாமையில் அமைந்துள்ளது)



தள புராணம்
மதுரை மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த தேவதானப்பட்டி பகுதிகளை இராஜ கம்பளத்தார் என்ற தெலுங்கு தேசத்து ஜமீன்தார் ஆட்சி செய்து வந்தார். தேவதானப்பட்டி ஜமீன் குடும்பத்தை சார்ந்த பூசாரி நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயம் தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் ஆலயம் ஆகும்.குழந்தை செல்வம் இல்லாத அரசர் ஒரு நாள் வேட்டைக்காக கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள மஞ்சள் ஆற்றின் கரையில் குதிரையில் சென்று கொன்றிந்தபொது ஆற்றின் கரையில் ஒரு பெட்டி மிதந்து வருவதை கண்டு ஆற்றில் இறங்கி அப்பெட்டியை தொட்டவுடன் ஒரு அசரிரிவாக்கு கேட்டது.






"பெட்டியை தொடதே! பெட்டியில் நான் காமாட்சி மந்திர ரூபமாக இருக்கின்றேன். என்னை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தவ முனிவர் கொடைக்கானல் மலை மீது உள்ள தலையாறு நீர்வீழ்ச்சிக்கு பக்கத்தில் உள்ள "கரியமால்" என்ற வனப்பகுதியில் "அம்மா மச்சு" என்று இன்று அழைக்கப்படும் பகுதியில் என்னை மந்திரரூபமாக அமைத்து வழிபட்டு வந்தார். தான் இறைநிலை அடையும் காலம் வருவதை தன் தவ வலிமையால் உணர்ந்து மூங்கில் கூடை ஒன்றில் மந்திர ரூபமான நான் உள்ள சக்கரத்தை வைத்து மந்திரத்தால் அதை காப்பிடு வைத்தார் . அதை "முத்துராங்கப்பெட்டி " என்று அழைத்தார் .அந்த முத்துராங்கப்பெட்டி பல நூறு ஆண்டுகளுக்குப்பின் இன்று பெருமழையின் காரணமாக ஆற்றில் அடித்து வரப்பட்டது. என்னை வைத்து உன்னால் பாதுக்காக்க முடியாது. என் முறைகளை கடைப்பிடிக்க முடியாது என்னை விட்டுவிடு " என அன்னை காமாட்சி கூறினார் .






உடன் ஜமீன்தார் "அம்மா உன் முறைப்படி நானும் உன்னை வைத்து நானும் எனது வம்சத்தினரும் பூஜை செய்வோம் . முறை பிசகமாட்டோம் "என வாக்குறுதி கொடுத்து அன்னையின் சம்மதத்துடன் முத்தாரங்கப் பெட்டியை எடுத்து வந்து அன்னை காமாட்சிக்கு மஞ்சள் ஆற்றின் கரையில் ஆலயம் அமைத்தார் .






தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சள் ஆற்றின் கரையில் அன்னை காமாட்சியின் அருள்வாக்கின்படி நாணல் புல் கொண்டு கூறை வேய்ந்தது அந்த குச்சிலுக்குள் அன்னை வாசம் செய்யும் முத்தாரங்கப் பெட்டியினை வைத்து அதன்முன் திருவிளக்கு ஏற்றி அன்னையை வணங்கி வந்தார்.






தேவதானப்பட்டி அன்னை காமாட்சி ஆலயம் அனைத்து சாதிமக்களும் வந்து வணங்கும் சக்தி வாய்ந்த ஆலயமாக விளங்கியது . அன்னை காமாட்சியை வணங்கியதால் குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் அடைந்தார்கள் . நோய்கள் குணமாகின . வறுமை தொலைந்து பலர் வளமையான வாழ்வு பெற்றனர் . தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் ஆலயத்தின் புகழ் நாடு எங்கும் பரவியது .


மதுரையை தலைநகராக கொண்டு தென்னாட்டை திருமலை நாயக்கர் ஆட்சி செய்து வந்த காலம். தென்பாண்டிநாட்டில் உள்ள நாடார் குல வணிகர்கள் வணிக பொருட்களை பொதிமாடுகளில் ஏற்றி கொண்டு பல ஊர்களுக்கு சென்று விற்று வந்தனர் .

பாஞ்சாலங்குறிச்சியை சார்ந்த சாமணத்தம் என்ற கிராமத்தில் வாழ்ந்த நாகப்பநாடார் என்பவர் தன் பொதி மாடுகளில் வணிக பொருட்களை ஏற்றி கொண்டு வணிக பொருட்களை மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய குளத்திற்கு விற்பனை செய்வதற்காக வந்திருந்தார் . அவருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. அவரது நண்பர்களும் உறவினர்களும் தேவதானப்பட்டி அன்னை காமாட்சியை வணங்கி அங்கே மூன்று நாள் கோவிலில் தங்கி முறையாக விரதம் இருந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்று சொன்னதை ஏற்று வியாபாரத்திற்கு வந்த நாகப்பநாடார் தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் ஆலயத்தில் மூன்று நாள் கடுமையான விரதம் இருந்தார். அம்மா காமாட்சி எனக்கு வாரிசாக ஓர் ஆண்மகனை கொடு . நான் அவனுக்கு உன் மகன் காத்தவராயன் பெயர் வைக்கின்றேன் என மனமுருகி வேண்டிக்கொண்டார்

அன்னை காமாட்சியின் கருணையில் நாகப்பநாடார் மனைவி கருவுற்று பத்தாவது மாதம் அழகிய ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் .

நாகப்பநாடார் தன் மகனுக்கு காத்தவராயன் பெயர் என பெயர் சூட்டினார்.காத்தவராயன் வளர்ந்து வாலிப வயதை அடைந்தான் . நாகப்பநாடார் முதுமை பருவத்தை அடைந்தார் .தன் தகப்பன் செய்து வந்த வியாபாரத்தை காத்தவராயன் ஏற்று கொண்டான் . வியாபார நிமித்தம் பெரியகுளம் செல்லும் போதெல்லாம் தேவதானப்பட்டி அன்னை காமாட்சி ஆலயம் சென்று அன்னையின் பொற்பாதம் பணிந்து வருவான் . அன்னை காமாட்சியிடம் பயமும் பக்தியும் கொண்டு ஒழுக்கமுள்ளவனாக காத்தவராயன் விளங்கினான் .

தேவதானம்பட்டி மஞ்சள் ஆற்றின் கரையில் அன்னை காமாட்சிக்கு ஆலயம் அமைத்து ஜமீன்தார் பூஜை செய்து வந்தார் .அதற்குப்பின் அவரது மகனும் பேரனும் மட்டுமே பூஜை செய்ய முடிந்தது . அன்னை காமாட்சியின் வாக்குப்படி முறையாக பூஜை செய்யாத காரணத்தால் ஜமீன் குடும்பத்தில் பல தொல்லைகள் ஏற்பட்டன . தன் குடும்பத்தில் ஏற்படும் தொல்லைகளுக்கு அன்னை காமாட்சி சொன்னபடி முறைகள் செலுத்த முடியாமை தான் காரணம் என்று புரிந்து கொண்டு இனி கோவிலில் பூஜையை நிறுத்தி விடுவது, கோவிலை மூடிவிடுவது என்று ஜமீன்தார் முடிவு செய்தார்.

அதை அறிந்த உள்ளூர் தமிழ் மக்களாகிய மன்னடியார் என்ற சாதியினர் அன்னை காமாட்சியின் மீது பக்தி கொண்டு கோவிலை பூட்ட வேண்டாம். நாங்களே கோவில் முறைகளை முழுமையாக கடைப்பிடித்து பூஜை செய்கின்றோம் . பூஜை பொறுப்பை மட்டும் எங்களிடம் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர் . ஜமீன்தார் பூஜை செய்யும் பொறுப்பை மன்னடியர் சாதியிடம் ஒப்படைத்தார் . மன்னடியர் சாதியினர் மூன்று தலைமுறைகள் பூஜை செய்து வந்தனர் . மூன்றாவது தலைமுறையில் அன்னை காமாட்சி தன் இருப்பிடத்தை மாற்றி அமைக்க திருவுள்ளம் கொண்டாள். தனக்கு தொண்டு செய்யும் தொண்டனாக நாடார் குலத்தில் உதித்த காத்தவராயனை காமாட்சி தேர்ந்தெடுத்தாள்.

பொதிமாடுகளில் வாணிபப் பொருட்களை ஏற்றி கொண்டு பெரியகுளம் நோக்கி காத்தவராயன் சென்றான். வாணிபத்தை முடித்து கொண்டு ஊர் திரும்பும் வழியில் தேவதானம்பட்டி சென்று அன்னை காமாட்சியை வணங்க சென்றான். அவனுடன் விருதுபட்டி , சிவகாசி , மதுரை , திருமங்கலம் போன்ற ஊர்களை சேர்ந்த நாடார் குல வணிகர்களும் உடன் சென்றனர் . தங்களுடன் வந்த பொதிமாடுகளை கோவிலுக்கு முன்புறம் உள்ள மஞ்சள் ஆற்றின் கரையில் நிறுத்திவிட்டு அன்று இரவு அங்கு தங்கினார்கள். இரவு மணி பன்னிரெண்டுக்கு மேல் இருக்கும் தூங்கி கொண்டிருந்த காத்தவராயன் தன்னை யாரோ தட்டி எழுப்புவது போன்று அறிந்து விழித்து எழுந்தான். ஆலயத்தின் மூலஸ்தானத்தில் ஒளி ஒன்று அவன் கண்களுக்கு தெரிந்தது. அவன் தன் உணர்வு இல்லாமல் மூலஸ்தானத்தில் முத்துராங்கப்பெட்டி இருப்பதை கண்டு அவனை அறியாமல் அதன் முன் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.தன் உடலில் ஏதோ ஓர் சக்திபுகுந்து தன்னை இயக்குவதை உணர்ந்தான்.

அன்னையின் முன் விழுந்து வணங்கி எழுந்த உடன் அவனை அறியாமல் சுயநினைவின்றி தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து முத்தாரங்கப்பெட்டியை மூடி தன் தோளில் வைத்துக் கொண்டு கோவிலை விடு வெளியேறினான். நேரே தன் பொதிமாடுகள் உள்ள இடத்திற்கு சென்ற பின் தன் மாடுகளில் ஒன்றின் முதுகின் மீது முத்தாரங்கப் பெட்டியை வைத்து அதன் மீது துணி கொண்டு மூடினான், பின்பு கயிறு கொண்டு கீழே விழாமல் கட்டினான். கட்டி முடித்தவுடவுன் முத்தாரங்கப் பெட்டியை தன் முதுகில் சுமந்திருந்த பொதிமாடு மெல்ல நடக்க ஆரம்பித்தது. காத்தவாரயனும் மற்றும் வணிகர்களும் அந்த பொதி மாட்டை பின்பற்றி நடந்தார்கள். அவர்களால் அதை தொட முடியவில்லை. அவர்கள் நடக்க முடியாமல் நின்றால் அந்த மாடும் நிற்கும் . அவர்கள் ஓடி வந்தால் மாடும் ஓடும் . அவர்கள் அனைவரும் அன்னையின் தவபுதல்வர்களாக அன்னையின் பின் நடந்து சென்றார்கள். காத்தாவரயன் காமாட்சி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருந்து முத்தாரங்கப் பெட்டியை எடுத்து வரும் போது தூங்கியவர்கள் போக மீதி பேர்கள் மயக்கநிலை அடைந்தார்கள் .

பொழுது புலர்ந்த உடன் மூலஸ்தானத்தில் இருந்த அன்னை காமாட்சி அருளாட்சி செய்யும் முத்தாரங்கப் பெட்டியை காணவில்லை என்பதை அறிந்தவுடன் பூஜை செய்து வந்த மன்னடியார்கள் பயம் கொண்டார்கள். ஒரு பக்கம் தெய்வ குற்றம் மறுபக்கம் ஜமீந்தாருக்கு என்ன பதில் கூறுவது அவரது தண்டனையிலிருந்து எப்படி தப்புவது என ஆலோசனை செய்தனர். அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். முத்தாரங்க பெட்டி காணமல் போன விபரம் ஜமீனுக்கும் மக்களுக்கும் தெரிவதற்கு முன் கோவில் கதவை மூடினார்கள். கோவில் முன் பக்தர்களை அழைத்து எங்களால் முறையாக பூஜை செய்ய முடியவில்லை. ஆதலால் கோவில் திருக்கதவை நங்கள் மூடுகின்றோம். எவரேனும் இதை திறக்க கூடாது. இது அன்னை காமாட்சியின் மீது சத்தியம் என்று சத்தியம் செய்தனர்.பின் பூசாரியும் அவரது குடும்பத்தினரும் ஜமீன்தாரின் தண்டனைக்கு பயந்து கொடைகானல் மலையில் உள்ள தண்டிக்குடி கிராமத்தில் போய் குடியேறினர். அன்றிலிருந்து இன்று வரை தேவதானப்பட்டி அன்னை காமாட்சி அம்மன் ஆலயக்கதவுகள் திறக்கப்படவே இல்லை. ஆலயக்கதவுகளுக்கு முன் திருவாட்சி அமைத்து அதன்முன் திருவிளக்கு ஏற்றி அன்னை காமாட்சியை மக்கள் வணங்கி வருகின்றார்கள்

காத்தவராய நாடாரும் அவரது நண்பர்களும் தங்கள் ஊர் நோக்கி வரும்போது பல இடங்களில் தங்கி வந்தார்கள். அன்னை காமாட்சி அருளாட்சி செய்யும் முத்தாரங்கப்பெட்டியுடன் மதுரை வந்த நாடார் குல மக்களில் மதுரையை சேர்ந்தவர்கள் மதுரையில் சிம்மக்கல் அருகில் அன்னையின் அருள்வாக்கின்படி காமாட்சி அம்மன் ஆலயம் ஒன்று அமைத்தார்கள். மதுரையில் இருந்து புறப்பட்டு திருமங்கலம் வந்து சேர்ந்தவுடன் அன்னை காமட்சியின் அருள்வாக்கின்படி திருமங்கலத்தில் திருமங்கலத்தை சார்ந்த நாடார் குல மக்கள் அன்னை காமாட்சிக்கு ஆலயம் அமைத்தார்கள். திருமங்கலத்திலிருந்து புறப்பட்ட காத்தவராய நாடரும் மற்றும் வணிகர்களும் விருதுபட்டி வந்து சேர்ந்தார்கள். அன்னையின் அருள்வாக்கின்படி விருதுபட்டியை சார்ந்த நாடார் குல மக்கள் விருதுபட்டியில் அன்னை காமாட்சிக்கு ஓர் ஆலயம் அமைத்தார்கள். விருதுபட்டியிலிருந்து புறப்பட்டு அன்னை காமாட்சி அருளாட்சி செய்யும் முத்தாரங்கப்பெட்டியுடன் காத்தவராய நாடார் தன் சொந்த ஊரான சாமணத்தம் என்ற கிராமத்தை வந்தடைந்தார்.