Friday 20 February 2015

படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை

உயர்ந்த உள்ளம்
உயர்ந்த உள்ளம் இருப்பவரிடம் மட்டுமே உயர்ந்த செயல்கள் வெளிப்படும். அவர்களால் மட்டுமே உயர்ந்தோரை உருவாக்கவும் முடியும். காமராஜர் ஓர் உயர்ந்த மனிதர். உருவத்தால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்தவர்.
ஜனநாயகத்தின் மீது அளப்பரிய பற்றுடையவர். அதனால்தான் அவரை ஜனயாயக சோசலிச சிற்பி என்று அகிலமே பாராட்டியது.
ஜனநாயகப் பற்றும், சுதந்திர வேகமும் பொதுவாகவே எல்லா காந்தியவாதிகளிடமும் இயல்பாகவே இருந்தது. ஆனால் பெருந்தலைவர் ஜனநாயகத்தை தமது இலட்சியமாகவே கொண்டு வாழ்ந்தார்.
காந்தியிடம் கற்ற சத்தியம், அஹிம்சை, வாய்மை, ஆகிய மூன்றையும் தமது அரசியல் தர்மத்திலும் கையாண்டார் காமராஜர். எனவேதான் அவரது எண்ணத்தில் தூய்மையும் செயலில் நேர்மையும் இருந்தது.
நாட்டுப் பணிக்குத் தன்னை அர்ப்பணிப்பவர்கற் தங்கள் தன்னலத்தை மறக்க வேண்டும். பொழுதெல்லாம் பொதுநலத்துக்காக உழைக்க வேண்டும்.
இன்று இதன் இலக்கணத்தில் வினாக் குறிகள் விழலாம்.
ஆனால் தன்னலமற்று அவர் அன்று வாழ்ந்ததால்தான் இன்று பலரும் படிக்கின்ற பாடமாகத் திகழ்கின்றனர்.
பொதுவாகவே அன்று காந்தியவாதிகள் சிக்கனத்துடன் அதே வேளை நாட்டுச் சிந்தனையுடன் சேவை செய்து வந்தனர்.
மக்களுக்காகத்தான் தாங்களே தவிர தங்களுக்காக மக்கள் இல்லை என்பதில் மாறாத சிந்தனையுடன் இருந்தனர். அதனால்தான் பொதுப்பணத்தைக் கையாளும்போது கவனமாக இருந்தனர். அதுபோல சிக்கனமாகவும் இருந்தனர்.
முழுக்க முழுக்க காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை காங்கிரஸ்கார்ரகள் என்பதைவிட, காந்தியவாதிகள் என்பதே பொருந்தும்.
எளிய வாழ்க்கையை நேர்மையுடன் நடத்தியவர்கள் காந்தியவாதிகள். எனவேதான் அவர்கள் நடத்திய அரசியலும் எளிமை இருந்தது. ஆடம்பரம் அறவே இருந்ததில்லை.
இந்தப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர் என்றால்தான் கர்மவீரர் காமராஜரால் ஒன்பது ஆண்டுகள் ஒரு பைசாவைக்கூட கையில் தொடாமல் ஆட்சி செய்ய முடிந்தது.
கர்ணனது உயிர் கொடையில் இருந்தது போலவே காமராஜரின் உயிர் இலட்சியத்தில் இருந்தது. ஜனநாயக சோசலிசமே காமராஜின் அரசியல் வாழ்வின் அசைக்க முடியாத இலட்சியம்.
எல்லாருக்கும் கல்வி. அதன் மூலம் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு. அதன் மூலம் எல்லோர்க்கும் உணவு. ரதன் மூலம் எல்லோருக்கும் சமத்துவம் காண வேண்டுமென்பதே காமராஜரின் இலட்சியம்.
இந்த இலட்சியத்துக்காகவே இறுதிவரை வாழ்ந்த உயர்ந்த மனிதர் அவர்.
கர்ணன் கொடுப்பதையே குறியாகக் கொண்டவன். அதுவே அவனது உயிராக இருந்தது. அதனால்தான் அம்புபட்டு தேர்ச் சக்கரத்தில் சாயந்தபோதும் உயிர் போகவில்லை. தர்மதேவதை தடுத்தாள்.
கண்ணன் உண்மை நிலைய உடனே உணர்ந்தான். இந்த சூழலில் கர்ணனின் உயிர் போகாது. அவனது உயிர் போகவேண்டுமானால் அவனிடம் எஞ்சியுள்ள தர்ம பலனையும் பெற்றுவிட வேண்டும்.
எனவே கண்ணன் ஓர் அந்தண வடிவம் கொண்டு உயிருக்கு போராடும் கர்ணனிடம் புண்ணியத்தை யாசகமாகப் பெற்றுக்கொண்டதும் அவன் இறந்தான்.
எனவே, இலட்சியத்தில் உயிரை வைத்திருப்பவர்கள் அந்த இலட்சியத்துக்கு இழுக்கு ஏற்படுமானால் உயிரை இழந்துவிடுவர்.
கர்ணனை போன்றவர்தான் காமராஜரும்.
உயிரும் இலட்சியமும் ஒன்றாக இருப்பவர்கள்தான் உயர்ந்தவர்கள். அவர்களின் உள்ளம்தான் இனைவனின் உறைவிடம்.
காமராஜர் எப்போதுமே ஒரு கடவுள் பக்தராக இருந்ததில்லை. ஆனால் அரசியல் பக்தர்கள் லட்சக்கணக்கில் அவரைஏ வணங்கினார்கள்.
என்ன காரணம்?
தொண்டராக வாழ்வை தொடங்கி அரசியலில் தலைவராக உயர்ந்த போதும் தொண்டராகவே வாழ்ந்து தொண்டராகவே மறைந்ததால் இனறவனே இத் தொண்டர் தம் உள்ளத்தில் ஒடுங்கிவிட்டார்.
ஏழைகளுக்காக இரங்கி, அவர்களின் துயர்நீக்க எல்லோருக்கும் கல்வியை இலவசமாக்கிய ஏழைப்பங்களான். உயர்ந்த உள்ளம் உடையவர் அவர்தான்.
எனவே,
உயர்ந்த உள்ளம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் வாழ்வில் உயரவும் புகழில் உயரவும் முடியும் என்பதை பெருந்தலைவரின் வாழ்க்கை உணர்த்துகிறது.
இது படிக்காத மேதையிடம் படிக்க வேண்டிய முதல் பாடமாகும்.


அரசியல் நாகரிகத்தை அவரிடமிருந்து கற்க வேண்டும்.
திட்டமிடுதலும், செயல்படுத்தலும், செய்து முடித்தலும் அவர் செயல் வீரர் என்று காட்டின. ஆனால் அவர் செய்யும் முன்பும் கூறியதில்லை; செய்து முடித்த பின்பும் பேசியதில்லை.
அரசுப் பணிகள் அரசின் பணியே தவிர அரசியல்வாதியின் பணியல்ல என்பதை நன்கே உணர்திருந்தார். அது போல் அரசுப் பணியாளர்களையும் மதிக்கும் பண்புடையவர்.
அரசுப் பணியாளர்களை முக்கிவிடும் பணியைச் செய்யக் கூடாது. இந்த உயர்ந்த அரசியல் நாகிகத்தை கர்மவீரர் காமராஜரிடமிருந்து கற்க வேண்டும்.
அரசு ஒரு இயந்திரம், அது இயக்குபவர்களைப் பொறுத்து இயங்கும் என்பதை நாம் இன்று உணர்வதற்குக் காரடமாயிருந்தது அவரது அரசியல் நாகரிகம்தான்.
நேர்மையும், தூய்மையும் சேர்ந்துவிட்டால் அரசியல் தெளிவாகவே இருக்கும் என்பதை உலகுக்குக் காட்டியவர் அவர். கடமைஆனது பேச்சில் இருந்து எதற்கு? செயலில் வேண்டும். அப்படி கடமையைச் செய்யும் அதிகாரிகளைக் கண்ணியப்படுத்த வேண்டும்.
பெருந்தலைவர் அரசியல் பிரவேசத்தின் பிற்பகுதியை விட்டு விட்டு, அவர் முதலமைச்சராய இருந்த காலத்தை மீள்பார்வை செய்து பார்ப்போமானால் அரசியல் நடத்தும் அரிச்சுவடி தொடங்கி அத்ததனை அந்தரங்களையும் அவரிடம் கற்கலாம்.
அப்போது-பெருந்தலைவர்தான் முதலமைச்சர் பல்வேறு அலுவல்களை முடித்து விட்டு காலதாமதமாக வந்தாலும் காமராஜர் மறுநாள் பணிளை ஒழுங்கு படுத்திவிட்டுத்தான் தூங்குவார்..
இத்தகைய பணிக்காக ஒரு நாள் தனது தனி அலுவலரை அழைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரைத் தொலைபேசியில் அழைக்கச் சொன்னார். காமராஜரின் தனி அலுவலர் உடனே போன் செய்து அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை அழைத்தார். மறுமுனையில் பேசியதோ ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ல; அவரது செயலாளர் (P.A).
உடனே, முதலமைசைசரின் தனி அலுவலர் என்ற தோரணையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியை காமராஜரோடு பேசச் சொன்னார். அந்தச் செயலாரோ ஒரே வரியில் முடித்து விட்டார். ஐ.ஏ.எஸ். அதிகாரி தூங்குகிறார் இப்போதைக்கு எழுப்பமுடியாது.
இவருக்கோ கோபம். ”நான் முதலமைச்சரின் தனி அலுவலர் பேசுகிறேன் என்று கடுகடுத்தார்.மறுமுனையில் அவரும் விடவில்லை. ‘நான் ஐ.ஏ.எஸ்ஸின் செயலாளர் பேசுகிறேன்’ என்றார்.
இருவருக்குள்ளும் வாதம் தொடர்ந்ததே தவிர, ஐ.ஏ.எஸ். அதிகாரி முதலமைச்சரிடம் பேச வரவே இல்லை.
”நான் நாலரை கோடி மக்களின் நாயகனுடைய பி.ஏ. பேசுகிறேன். அவர் அழைக்கிறார் ஐ.ஏ.எஸ்ஸை எழுப்புங்கள். மறுமுனையிலிருந்து பதில் இப்படி வந்தது. – நல்லது. நீங்கள் நாலரை கோடி நாயகரின் பி.எ. பேசலாம்… நான் ஐ.ஏ.எஸ்ஸின் பி.ஏ. பேசுகிறேன்…-அவர் எக்காரணம் கொண்டும் தன்னைத் தூக்த்திலிருந்து எஉப்ப லேண்தாம் என்று கூறிவிட்டுத்தான் தூங்கச் சென்றார். எனவே எனது கடமையைத்தான் செய்கிறேன்”.
முதலமைச்சரின் பி.ஏ. கோபத்தோடு பெருந்தலைவரிடம் சென்று, ”தாங்கள் அழைப்பதாக் கூறியும் தொலைப்பேசிக்கருகே காத்திருப்பதாக கூறியும் அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பி.ஏ. அவரை எழுப்ப மறுத்துவிட்டார். அவர் தூங்கப்போகும்போது யார் அழைத்தாலும் எழுப்ப வேண்டாம் என்று கூறினராம்” என்று கூறினார்.
இது போன்றதொரு சம்பவம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் நடந்தாலும் சரி, என்ன நடக்கும் என்று எண்ணிப்பாருங்கள். மறுநாள் காலையே எங்கோ ஒரு காட்டுக் கிராமத்திற்கு மாற்றப்படுவார். ஐ.ஏ.எஸ். அதிகாகியோ ஏதோ ஒரு சுமாரான ஒரு வாரிஅத்தின் மேலாளராக்கித் தண்டிக்கப்படுவார். ஆனால் மக்கள் தலைவர் காமராஜர் என்ன செய்தார் தெரியுமா? மறு நாள் விடிந்ததும் தானே அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை அழைத்தார். அவரோ காலையில் விஷயத்தை கேள்விப்பட்டு ஆடிக் கொண்டிருந்தார். தனக்கு என்னாகுமோ தனது பி.ஏ.வுக்கு என்னாகுமோ?” என்று வருந்தினார்.
காமராஜரோ, அந்த ஐ.ஏ.எஸ்.ஸிடம் அந்த பி.ஏ.வைப் பற்றிய முழு விபரங்களையும் கேட்டறிந்தார். ஐ.ஏ.எஸ் வருந்தியவாறே என்ன நடக்குமோ என்ற கவலையில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
பெருந்தலைவர் திடீரென ”உங்க பி.ஏ.வை எனக்குப் பி.ஏ வாக அனுப்பித் தாங்க” என்று கூறி அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டார்.
அப்போதும் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குப் புரியவில்லை. தலைவர் விபரமாகவே கூறினார். ‘யார் அழைத்தாலும் எழுப்ப மறுத்த கடமை உணர்ச்சிமிக்கவர்தான் பி.ஏ. வாக இருக்கவேண்டும். அதனால்தான் அவரை எனக்குப் பி.ஏ.வாக அனுப்பி வையுங்கள் என்றார்.
ஒரு சாதாரண அரசுப் பணியாளரின் கடமை உணர்வு முதலமைச்சருக்கு எதிராக நடந்த பின்பும் அதே முதலமைச்சர் பாராட்டினார் என்றால் இதுதான் அரசியல் நாகரிகம். இத்தகைய அரசியல் நாகரிகத்தை நாம் அவரிடம் இருந்துதான்படிக்க வேண்டும்.
இப்படி கடமையை பாராட்ட முற்பட்டால் எல்லோருக்குமே கடமை செய்யும் மனநிலை தானாக ஏற்படும் என்பதை நாம் உணரவேண்டும்.
எதிர்கட்சிக்காரர்களை எதிரிகளாக நினையாமல் அரசுப் பணியாளரை அடிமைகளாகக் கருதாமல் கடமையாற்றும் நாகரிக அரசியலை நாம் படிக்காத மேதையிடமிருந்துதான் படிக்கவேண்டும்.


தோல்வியை ஏற்கும் துணிவு

வெற்றி என்றால் தமது தோளில் வைத்து ஆடுபவர்கள், தோல்வி என்றால் அடுத்தவர்கள் தோளில் தூக்கி வைப்பது இன்றைய அரசியலின் பழக்கம். தேர்தல் என்றால் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. ஒருவர் வெற்றியால் பலர் தோல்வியை தழுவிக் கொள்வர். இது இயற்கை.

இதில் தோற்றவர் ஆளுங்கட்சியாக இருந்தால் ‘ நான் தலைருக்கு எதிர் கோஷ்டியில் இருப்பதால் வேண்டுமென்றே தோற்கும் தொகுதியை எனக்குத் தந்தார்’ – என்பதும், ‘எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் இறுதிக் கட்டத்தில் ஜாதிப் பிரிவினையைத் தூண்டிவிட்டார்கள்’ – என்பதும், ‘பல வாக்குச் சாவடிகளில் நடந்த தில்லுமுல்லுகளே எனது தோல்விக்குக் காரணம்’ – என்பதும் சாதாரணமாக நாம் காண்பதுதான்.

இதில் தோற்றவர்கள் எதிர் கட்சியாக இருந்தாலோ, ‘ அரசு நிர்வாகம் முறைகேடாகப் பயன்படுத்தப்ட்டதே என் தோல்விக்குக் காரணம்’ என்பதும், ‘தவறான வாக்காளர் பட்டியலை வைத்து நடந்த தவறான தேர்தல்’ – என்பதும், ‘கள்ள ஓட்டுக்களே எனது தோல்விக்குக் காரணம்’ – என்பதும், தேர்தல் நேரத்தில் போலியான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். – என்பதும், ‘இந்தத் தேர்தல் செல்லாது, நான் கோர்ட்டுக்கு போவேன்’ – என்பது எல்லா தேர்தல்களிலும் எதர்த்தமாகப் பார்ப்பதுதான்.

எல்லாவற்றையும்விட பேசுபவர்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடுவார்கள். அதுதான் மக்கள்.

முழுமையான ஜனநாயக நாட்டில் வாழுகின்றோம். மக்கள் வேண்டாம் என்று நினைத்தால் வாக்கை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள்.

அரசியலில் தோல்வி என்பது அவ்வப்போது வருவதுதான். ஆனால் அரசியல் ஞானம் உடையவர்கள் மட்டும்தான் தனது தோல்வியை ஏற்றுக்கொள்கின்றனர்.

அந்த வரிசையில் தலைமை தாங்கி நிற்பவர் பெருந்தலைவர்தான். தோல்வியை ஏற்கும் துணிவுடைய தூயவர் அவர்.

1971 அகில இந்திய அளவில் இ. காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்றது. காமராஜின் பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

நாடெங்கும் வெளியாகும் பேர்தல் முடிவுகள் நேர்மாறாகவே வந்து கொண்டிருக்கின்றன. சிந்திக்கத் துவங்கினார். தனது ஆதரவாளர்கள் தோல்வியைத் தாங்கிக்கொள்ளாமல் இருப்பதை தலைவர் அறிகிறார்.

தொடர்ந்து கட்சியின் உறுப்பினர்கள் பலரும் போய், பெருந்தலைவரைப் பார்த்தனர்.”ஐயா, அவர்களின் வெற்றிக்குக் காரணம் ‘ரஷ்ய மை’ ஏமாற்றிவிட்டார்கள். வாக்குச் சீட்டில் தடவிய ரஷ்ய மைதான் காரணம்” என்றனர்.

தலைவர் நிதனமாக சொன்னார், ”ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்களின் பேச்சா இது? நாம் தோற்றதற்கு காரணம் ரஷ்ய மை என்கிறீர்களே… அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை”

இவ்வாறு தன்னை அல்லது தனது தலைமையை அல்லது தனது கட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தன்னடக்கத்தோடு ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த குணம்தான் அவரது உயர்வுக்கு காரணம்.

தோல்வியை சமதானத்தோடு, அமைதியாக நிதானமாக அணுகினால் அதற்குள் அடுத்த வெற்றி அடங்கியிருக்கும்.

ஆம், நிதானமாக தோல்வியை அணுகும்போது தோல்விக்கான உண்மையான காரணங்கள் தெரிந்துவிடும். அப்படியானால் மறுமுறை தோற்பது தவிர்க்கப்படும்.

முழுமையாக ஜனநாயகவாதி என்பதால் தோல்வியை முதலில் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சியுடையவராக இருந்தார் காமராஜர்.

எனவேதான் அவர் வெற்றியில் மகிழ்வதும் இல்லை; தோல்வியில் வருந்துவதும் இல்லை; மனதை எப்போதும் எதார்த்த நிலையிலே வைத்திருந்தார்.

வெற்றியால் துடிக்காமலும், தோல்வியால் துவளாமலும் இருக்கவேண்டும் என்று எண்ணுபர்கள் காமராஜரைப் படிக்கவேண்டும்.
பொது நலத்தில், அதிலும் குறிப்பாக அரசியலில் ஈடுபட்டவர்கள் தோல்வியைச் சந்திக்காமலே இருக்கமாட்டார்கள்.

அவ்வாறு தோல்வியை ஏற்கும் துணிவை படிக்காத மேதையிடம்தான் படிக்க வேண்டும்.

No comments: