Monday 9 February 2015

பெருந்தலைவரும் அண்ணாவும்

தி.மு.க.  பெரிய வெற்றியடையும் செய்தி மகிழ்ச்சியுடன் வந்து கொண்டுள்ளது. பெருந் தலைவர் காமராசர் தோற்று விட்டார் என்று தி.மு.கவினர் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். அண்ணா அனைவரையும் அமைதி காக்கச் சொல்லி மிகவும் வருத்தப் பட்டாராம். காமராசர் வெற்றி பெற்று புது டில்லி சென்றால் தமிழ்நாட்டிற்கு  எவ்வளவோ செய்வார்.நம்மால் அவ்வளவு செய்ய முடியுமா என்றாராம்.

விருதுநகரில் பெருந்தலைவர் வெற்றி வாய்ப்பை இழந்தபோது, கோபம் கொண்டார் அண்ணா; வெற்றி ஆரவாரத்தில் ஈடுபட்ட கழகத் தோழர்களிடம் அதனை நிறுத்தச் சொன்னார்.
“காமராசர் தோற்கக்கூடாத நேரத்தில் தோற்றிருக்கிறார். இன்னொரு தமிழர்
அவர் இருந்த இடத்திற்கு வருவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும்” எனக் கோபமாகவும், வருத்தமாகவும் கூறினார் அண்ணா.

அண்ணா அவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டுச் சென்னை அரசு மருத்துவமனையிலே இருக்கின்றார். பார்க்க வந்த காம ராசர் மருத்துவர்களிடம் கேட்கின்றார். சரியான பதிலை அளிக்காமல் திணறுகின்றனர். உடனே காமராசர்  அமெரிக்கா கொண்டு சென்று மருத்துவம் பார்க்க உடனே ஆவன செய்யுங்கள் ஆம்!  என்று ஆணையிடுகின்றார் !

அண்ணாவை அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு வழி அனுப்ப மும்பை விமான நிலையத்திலே நள்ளிரவு நேரத்திலே மாநில ஆளுநர் வந்திருக்கின்றார். அண்ணா அவர்கள் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அவர் பெருந்தலைவர் காமராசரின் ஆணை! உங்களை இங்கு பார்த்து அனுப்பிவைக்கச் சொன்னார் என்றாராம்.

No comments: