Friday 6 February 2015

வாய்ல சனி

விபத்தில் சிக்கிய கணவன் மருத்துவமனையில் இருந்து தன் மனைவிக்கு போன் செய்து தன் நிலையை விளக்குகிறார்...
அதற்கு மனைவியின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறதென்று பாருங்கள்...




#கணவன்: டியர் நான் ஒன்னு சொன்னா பதற மாட்டியே??

#மனைவி: என்னன்னு சொல்லுங்க??

கணவன்: இன்னிக்கு காலைல சினேகா வீட்டுக்கு போகும் போது எனக்கு பயங்கரமான ஆக்சிடன்ட்!!

மனைவி: அப்படியா??!!

கணவன்: என் காருக்கு குறுக்கால் ஒரு நாய் பாய்ஞ்சு... ஸ்டியரிங்க் கண்ட்ரோல் போய் நிலை தடுமாறி ஃபுல் ஸ்பீடுல ரோட்டோர பரத்துல மோதிருச்சு....

மனைவி: ஹூம்...

கணவன்: நான் தலைல அடிபட்டு ரத்தம் கொட்டி மயங்கிட்டேன். சில நல்ல மனுசங்க 108க்கு போன் பண்ணி என்னை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

மனைவி: ஓஹோ...

கணவன்: டாக்டர் தலையில் ஸ்கல் டேமேஜ் இருக்கான்னு பாக்கனும்னு சொல்றார். இடது கால் ஃப்ராக்ச்சர் ஆகிடுச்சு... நடக்க இரண்டு மாசமாவது ஆகும் என்கிறார்...

மனைவி: ம்ம்ம்ம்......

கணவன்: (கொஞ்சம் கோபமாக!) என்னாச்சு உனக்கு...? நான் எவ்வளவு தூரம் உயிர் போய் உயிர் வந்து, அறைகுறையா பிழைச்சு... செத்து பொழச்சு பேசிக்கிட்டு இருக்கேன்... நீ பாட்டுக்கு ஊம் கொட்டிகிட்டு இருக்க...??

மனைவி: இல்லை... நான் வேற ஒரு முக்கியமான விசயத்தை யோசிச்சிகிட்டு இருந்தேன்....

கணவன்: அப்படி என்ன முக்கியமான் விசயம் என் உயிர விட????

மனைவி: சினேகா வீட்டுக்கு போகும் போதுன்னு சொன்னீங்களே... யார் அந்த சினேகா?

கணவன்: ....# # # #????

No comments: