Tuesday 10 February 2015

கருப்புக்காந்தியும் நெருப்புக் கவிதையும் -கவிஞர்மு. மேத்தா

ஒருதீர்க்க தரிசியை
நேசிப்பதைப்போல்
உன்னைநேசிக்கிறேன்
உன்னால்தான்முடிந்தது
தாயையும்பார்க்காமல்
தாய்நாட்டைப்பார்ப்பதற்கு!
 
நீநினைத்திருந்தால்
கரன்ஸிநோட்டுகளால்
விருதுநகரில்
இன்னொருஇமயமே
எழுந்திருக்கும்!
 
நீ
லட்சுமியைஅனுப்பி
சரஸ்வதியைவரவழைத்தாய்.
இவர்களோ
சரஸ்வதியையே
லட்சுமியாக்கிக்கொண்டிருக்கிறார்கள்!
 


ஆமாம்… நீ
கல்விக்கண்திறந்தாய்!
இவர்களோ
கல்விக்கடை திறந்தார்கள்!
என்னால்
கள்ளுக்கடை
வைத்திருப்பவர்களைக்கூட
மன்னிக்கமுடிகிறது.
கல்விக்கடை வைத்திருப்பவர்களை
மன்னிக்கமுடியவில்லை.
நிஜத்தைச்சொல்லுகிறேன்
நேருகுடும்பத்தின் மீது நீ
பாசம்வைத்திருத்திருந்தால்
இந்தியாவின்பாரிணாமமே வேறு!
 
கருப்புதான்நீயும்
கருப்புக்காந்தி!
மகாத்மாகாந்தியோ
சிரிக்கும்நெருப்பு.
 
நீ
சிரிக்கத்தெரியாத
நெருப்பு.
அந்தநெருப்பு
திருநீறாகிவிட்டது.
உன்சாம்பலுக்குள்ளும்
தணல்தகிக்கிறது.
 
பெரியாரின்பல்கலைக்கழகத்தில்
பச்சைத்தமிழன்’ எனும்
பட்டம்பெற்றவனே!
 
இன்றுநீ இருந்திருந்தால்
இங்கிருக்கும்
காய்ந்ததமழர்களைக்
கண்டித்திருப்பாய்!
 
இனஉணர்வு
தமிழனுக்குஇருந்திருந்தால்
இந்தியாவின்ஸ்டாலினாய்
இருந்திருக்கவேண்டியவன் நீ!
 
மணிமுடி உன்முன்
வைக்கப்பட்டது.
ஆனால்நீ
காளிக்குத்
தலையைவெட்டித் தந்த
கபாலிகனாகவேகாலத்தை முடித்தாய்!
 

No comments: