Wednesday 16 September 2015

சான்றோர்களும்... உழைப்பும்....

பல சரக்கு கடை தொழிலில் அதிகம் சான்றோர் மக்கள் இருப்பதன் ரகசியம் என்ன? காலை நான்கு மணிக்கு ஆரம்பித்து இரவு பண்ணிரண்டு மணி வரை வாரத்தில் ஏழு நாட்களும் உழைக்கும் பெருமை பெற்ற சமூகம் சான்றோர் சமூகம் மட்டுமே! வி.ஜி.பி, வசந்த்&கோ, சரவனா ஸ்டோர் என பலரி்ன் தொழில் ரகசியம் உண்மையான  உழைப்பே!

உண்மை, உழைப்பு, உயர்வு இதுவே சான்றோர்களின் தாரக மந்திரம். உழைப்பை மட்டும் நம்புபவர்கள் அல்ல சான்றோர்கள், உழைப்பவர்களையும் மட்டுமே நம்புபவர்கள் சான்றோர்கள். முன்பெல்லாம் விருதுநகர் கடைவீதிகளில் தங்கள் கடைகளில் தங்கள் பிள்ளைகளை நேரடியாக முதலாளி ஸ்தானத்தில் உட்கார வைக்க மாட்டார்கள்! பிறர் கடைகளுக்கு ஒரு வருடமோ இரண்டு வருடமோ தங்கள் பிள்ளைகளை பிறர் கடைக்கு தொழில் பழக அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் தங்கள் கடைகளிலும் நேரடியாக கல்லாவில் உட்கார வைக்கமாட்டார்கள். பெட்டி தூக்குவது, மூடைகளை அடுக்குவது, லைணுக்கு போவது (வெளியூர் வசூல்),  திட்டம் பார்ப்பது (கணக்கு பார்ப்பது) என வரிசைப்படி பொறுப்புக்கள் ஒப்படைத்து சரி பார்க்கப்பட்ட பின்னரே சொந்த பிள்ளைகளையே கல்லாவின் அருகில் அனுமதிபபர்! இரு நாள் பள்ளி விடுமுறை என்றால் ஒரு நாள் கண்டிப்பாக கடைக்கு வேலைக்கு வந்தாக வேண்டும்.

சான்றோர் பெரு மக்கள் நான் முன்பு சொன்னது போல் உழைப்பை மட்டுமல்ல உழைப்பவர்களையும் மட்டுமே நம்புபவரகள். உழைக்காமல் ஊதாரித்தனமாக சுற்றுவது அண்ணனோ, தம்பியோ, தகப்பனோ இல்லை பெற்ற மகனாகவே இருந்தாலும் உழைக்காமல் ஊதாரித்தனமாக சுற்றுபவர்கள் சொந்தங்களால் நிராகரிக்கப்படுவார்கள். இது இன்று வரை நிலவுகிறது! நாடார் கடைவீதிகளில் மிக சாதாரனமாக 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கடைகளுக்கு வருவதை இன்றும் பார்க்கலாம். வீட்டில் அவர்களால் சும்மா உட்கார முடியாதென்பர்! கடை வீதிகளில் மட்டுமல்ல மிதி வணடிகளில், தள்ளு வண்டியில் வியாபாரம் செய்த சான்றோர் பெருமக்கள் தங்கள் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்த பின்னரும் தங்கள் தொழிலை தொடருவதை இன்றும் காணலாம். பணம் பொருட்டல்ல உழைக்காமல் உண்பதை விரும்பாத சமூகம் சான்றோர் சமூகம். தன் சமூகத்தவர் என்றில்லை உழைப்பை நம்பும் எந்த சமூகத்தவர்க்கும் தங்கள் நிறுவணங்களில் பொறுப்பை குடுத்து அழகு பார்க்கும் சமூகம் சான்றோர் சமூகம் மட்டுமே!

உண்மையான உழைப்னை நம்பி கெட்டவர்கள் என எவருமில்லை. ஆகவே சான்றோர் மக்களே உண்மையாய் உழைப்போம், நேர்மையாய் முன்னேறுவோம்!!

No comments: