Friday 11 September 2015

திறன்மிகு தொழிலாளர்கள் (Skilled Labours)

வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வேலை வாய்ப்பினை வழங்குமா? Skilled Labours என அழைக்கப்படும் திறன்மிகு தொழிலாளர்களுக்கு தமிழத்தில் முன்பு பஞ்சமே இருக்காது. ஆனால் தற்பொழுது இவர்களுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு இருப்பது போல் தெரிகிறது. திறன்மிகு தொழிலாளர் என்பர் ஐ.டி.ஐயில் முறைப்படி பட்டயப்படிப்பு கற்ற எலக்ரீசியன், பிளம்பர், லேத் மெக்காணிக், மெக்காணிக், வெல்டர் போன்ற பணியாளர்களாகும். இவற்றுக்கு முன்பு நல்ல மதிப்பு இருந்தது! டி.வி.எஸ் போன்ற சில நிறுவணங்களில் அவர்களே பயிற்சியும் அளித்து, சான்றிதல் குடுத்து, பணியிலும் தமிழர்களை அமர்த்திக் கொண்ட காலம் உண்டு.

ஆனால் சமீபகாலமாக இது போன்ற பணிகளில் தமிழர்கள் அமர்ததப்படுவது இல்லை. இதில் பீகாரிகள், ஒரியர்கள் மட்டுமில்லாமல் நேபாளிகளும் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். நாமோ இங்கே பட்டயக்கல்லூரிகளை மொத்தமாக மூடிக்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் மட்டுமில்லாமல், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் திறன்மிகு பணியாளர்களை அனுப்பிக் கொண்டிருந்த தமிழகத்திற்கு என்னாயிற்று? முன்பெல்லாம் வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழிர்ச்சாலை அதிபர்கள் கூறும் காரணம் குறைந்த கூலி என்பதாக இருக்கும். அது உண்மையும் கூட வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தில் மிக குறைந்த கூலிக்கு (மூனறு வேளையும் சப்பாத்தி உண்டுவிட்டு) வேலை பார்த்த காலம் உண்டு. ஆனால் அவர்கள் இப்போது தமிழக்த்தில் லேபர் காண்ட்ராக்ட் எடுத்து வேலை பார்க்கும் அளவுக்கு தேர்ந்து விட்டார்கள்! அதாவது குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பணியை முடித்து குடு்க்க இவ்வளவு கூலி என நிர்ணயம் செய்தல்!

தற்போது வாங்கும் கூலியை பார்த்தால் நம் தொழிலாளர்களுக்கும் அவர்களுக்கும் பெரிய கூலி வித்தியாசம் கிடையாது. அப்புறம் ஏன் வெளிமாநில தொழிலாளர்கள்? மதல் காரணம் "டாஸ்மாக்"! நம் ஆட்கள் மூன்று நாட்கள் வேலை பார்த்து கூலி வாங்கி காசு பார்த்து விட்டால் மீண்டும் கையில் காசு தீரும் வரை தொழிர்ச்சாலை பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. அதிலும் தறாபொழுது அனைத்து தொழிர்ச்சாலைகளின் அருகிலும் டாஸ்மாக் உள்ளது! சரிங்க நம்ம ஆளுங்க மட்டும்தான் குடிக்கிறார்களா அவர்கள் குடிப்பதில்லையா? இங்கு பல சேட்டைகள் செய்யும் நம் மக்கள் வெளிநாடுகள் சென்றால் கையையும் வாயையும் கட்டி வைததுக் கொண்டு சும்மா இருப்பார்கள். காரணம் ஊருக்கு பணம் அனுப்ப வேண்டும், கடனை அடைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி. அது இங்கே இருக்கும் போது வராது! அது போலவே வெளிமாநிலத்தவரும் இங்கே வேலை பார்க்கும் போது அடக்கி வாசிக்கிறார்கள்.

அடுத்தது கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் நிலவிய மிண்வெட்டு பிரச்சினை பல தமிழக திறன்மிகு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைத்து விட்டது. அதனால் பட்டயப்படிப்புகளும், பட்டயக்கல்லூரிகளும் மதிப்பிழந்தன. உண்மையிலேயே திறனமிகு தொழிலாளரகள் மிகுதியாக இருந்த மாநிலத்தில் அந்த மிண்வெட்டு தட்டுப்பாடை ஏற்ப்படுத்திவிட்டது! அடுத்தது பணிச்சுமை. நம் தொழிலாளர்கள் பதது மணி நேரத்திறகு மேல் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். ஆனால் வெளிமாநிலத்தவர்கள் அங்கேயே தங்கியிருப்பதாலும், பணத்தேவையிருப்பதாலும் பதினாறு மணி நேரம் கூட வேலை பா்க்கின்றனர்! அதிக பணிநேரத்திற்கு அதிக கூலி உண்டு! ஆக திரைகடல் ஓடி திரவியம் தேடிய தமிழன் தமிழகத்திலேயே வேலை வாய்ப்புகளை பறி கொடுத்து விட்டு நிற்கிறான்! இதனால் வெளிமாநிலத்தவரை இங்கு வேலைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என் போராடினால் முட்டாள்த்தனம்! எல்லா தொழிர்ச்சாலைகளும் வேறு மாநிலங்களுக்கு சென்று விடும்! இதற்கு  தீர்வு டாஸ்மாக்குகளை முறைப்படுத்துவதும், பட்டயக்கல்லூரிகளை அரசாங்கம் நல்லபடியாக திறந்து நடத்துவதும், தமிழக்த்தில் திறன்மிகு தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதுமேயாகும்!

இவற்றையெல்லாம் தமிழ்நாட்டு அரசாங்கம் சரி செய்யாமல் என்ன வெளிநாட்டு முதலீடுகளை இங்கு கொண்டு வந்து குவித்தாலும், அது வெளிமாநித்தவருக்குதான் பயணளிக்கப் போகின்றதே ஒழிய நமக்கில்லை! செய்யுமா தமிழக அரசு? செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா??

No comments: