Friday 4 September 2015

சரிய வைக்குமா தோல்விகள்?!

இன்றைய தொழிலில் லாபத்தை விட செலவினங்கள் அதிகமாகி விட்டன. பரம்பரையாய் தொழில் செய்பவர்களும், அனுபவசாலிகளும் இதை புரிந்து தொழிலின் தன்மைகளை மாற்றி, செலவினங்களை குறைக்க வழி செய்து, குறுகியகாலத்தில் அதிக திருப்பதல்களை (Highest turnover in short period) செய்து தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் புதியவர்கள் திணறித்தான் போகிறார்கள். கடன் வாங்கி தொழில் செய்யலாம் ஆனால் நான் முன்னர் குறிப்பிட்டது போல் குறுகிய காலத்தில் அதிக திருப்புதல்களை செய்தால் தப்பிக்கலாம்!

சிங்கங்கள் (Lions) கூட்டமாய் வேட்டையாடும் போது அவற்றின் வெற்றி வாய்ப்பு 30%. அதாவது 10 வேட்டை முயற்சிகளில் ஒன்றிலேயே அவற்றுக்கு இரை கிட்டுகிறது! தனியாய் வேட்டையாடும் சிங்கத்தின் வெற்றி வாய்ப்பு 17%. புலிகளின் (Tiger) வேட்டை வாய்ப்பு 10% மட்டுமே. அதிவது 10 முயற்சிகளில் ஒன்று மட்டுமே! மரம் ஏறும் சிறுத்தைகளின் (Leopard) வெற்றி வாய்ப்பு 16%. வேங்கை சிறுத்தைகளின் (Cheetah) வெற்றி வாய்ப்பு 50%. ஆனால் அவற்றின் 50% இரையை பெரிய மிருகங்கள் பறித்து சென்று விடுகின்றன! சிங்கங்களும்,வேங்கை சிறுத்தைளும் சமவெளிகளில் (Plains) வாழ்பவை. புலி மழைக்காடுகளில் (Tropical Forests) வாழ்பவை. சிறுத்தைகள் எல்லா வகை காடுகளிலும் வாழ்பவை!

இவற்றை படிக்கும் போது ஒன்று புரியும், இவைகள் ஒவவொன்றும் வாழும் இடம் வேறு வகை, ஒரு வேலை உணவுக்கு இவைகள் சந்திக்கும் தோல்விகள் கடுமையானவை! ஒரு வேளை உணவுக்கு 10 முயற்சிகளில் 9 தோல்வி என்பது கொடுமையே! ஆனால் இவை மீண்டும் முயற்சிக்காமல் இருந்தால் அதன் நல்ல கொழுப்புகளை அவற்றின் உடலே  தின்று அவற்றை சாகடித்துவிடும்! அதனால் மக்களே நமது தொழில் வரும் சறுக்கல்களே நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதன் சான்று! தோல்வி நம்மை தோக்கடிப்பதில்லை. தோல்வியினால் நாம் துவண்டால் மட்டுமே நாம் தோற்கடிக்கப் படுகிறோம்.

நம் வெற்றியை இன்னொருவர் தட்டிப் பறித்து விட்டார்,அவர் அதற்கான தகுதியற்றவர் என கருதி துவல்கிறோம்! ஆனால் வேங்கை சிறுத்ததைகள் அதன் 50% இரைகளை பறி குடுத்த பின்னரும் வேட்டையாடி உண்டு உயிர் வாழத்தான் செய்கிறது! இது இயற்கையின் நியதி! ஆகவே துரோகம் என கூறிக் கொண்டு புலம்பாமல் அடுத்த முயற்சிக்கு தயாராகுங்கள்! இந்த மிருகங்களை போல் நம் களமும், தொழிலும் வேறாய் இருக்கலாம், ஆனால் தொழில் முயற்சியில் நம் மக்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகறேன். நன்றி!

தோலாண்டி.

No comments: