Friday 15 July 2016

பெருந்தலைவரது 114வது பிறந்தநாள் விழா பதிவு

முன்னால் முதல்வர் குமாரசாமிராசாவின் திருவுருவப்படத்தை திறப்பதற்காக பாரத பிரதமர் நேரு ராஜபாளைய்த்திற்கு வந்திறுந்தார். முதல்வர் காமராசரும் உடன் வந்திருந்தார். நேருவுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பு தரபட்டது. யார் யார் நேருவுக்கு மாலை அணிவிப்பது என பட்டியளிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரால் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
விடுதலை போராட்ட வீரர் ஏ.கே.பெருமாள்ராஜா என்ற பேச்சி ராஜா அவர்கள் வீட்டின் வழியாகவும் பிரதமர் நேரு போவதாக பயணத்தில் இருந்தது.

எனவே, தன் தெருவிற்கு வருகின்ற நேருவுக்கு மாலை அணிவித்து வரவேற்பு கொடுக்க தியாகி ஏ.கே.பெருமாள் ராஜா விரும்பினார். ஆனால் அதற்கான முன் அனுமதியை அவர் பெற்றிருக்கவில்லை. எனவே, தியாகியாக இருந்தாலும் , பிரதம்ர் நேருவுக்கு மாலை அணிவிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்து கொண்டிருந்தது.
அவருடன் இருந்தவர்களும், "அனுமதி இல்லை, எனவே மாலை அணிவித்து மாட்டிக்கொள்ள வேண்டாம்" என அவரை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர். விடுதலைக்காக பாடுபட்ட அந்த தியாகி கட்டாயம் மாலை அணிவித்தே ஆகவேண்டுமென உறுதி கொண்டிருந்தார்.

அதற்க்கான எச்சரிக்கைகளையும் அவர் பொருட்படுத்தவில்லை.
பாரத பிரதமர் நேரு, முதல்வர் காமராசர் இருவரும் ஊர்வலமாக் வந்து கொண்டிருந்தனர். தொலைவிலிருந்தே தியாகி பெருமாள்ராஜா தனது வீட்டில் மாலையுடன் காத்திருப்பதை காமராசர் பார்த்துவிட்டார். உடனடியாக தாங்கள் வந்த வாகனத்தை தியாகி பெருமாள் ராஜா வீட்டருகே கொண்டு செல்ல கட்டளையிட்டார். பெருமாள்ராஜாவை கூப்பிட்டு பிரதமர் நேருவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். பெருமாள் ராஜாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு நேருவிற்க்கு மாலை அணிவித்தார். இதன் வழியாக நாட்டிற்க்கு பாடுபட்ட ஒரு தியாகிக்கு நேர்ந்திருக்க கூடிய கசப்பான உணர்வுகளை தவிர்த்து விட்டார்.

இதற்க்கு அடிப்படை காரணம், மாட மாளிகையில் இருந்து ஆட்சி செய்யாமல் மக்களோடு மக்களாக இருந்த காரணத்தால் அவர்களுடைய உண்ர்வுகளை புரிந்துகொண்டு செயல்படக்கூடிய தன்மையை பெருந்தலைவர் பெற்றிருந்தார்.

No comments: