Wednesday 13 July 2016

நூறு ரூபாயும் பெருந்தலைவரும்

ஒரு முறை சிவகாமி அம்மையார் நூறு ரூபாய் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார். அப்போது காமராஜரும், ஆர்.வி. சாமிநாதனும், சென்னை, தி.நகர், திருமலைப் பிள்ளை வீட்டில் கட்சிக்கு நன்கொடையாக வந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
காமராஜிரின் உதவியாளர் வைரவன் அந்தக் கடிதத்தைப் பற்றிக் கூறினார். உடனே ஆர்.வி. சுவாமி நாதன், ரூபாய் நூறு தானே என்று தான் எண்ணிக்கொண்டிருந்த பணத்திலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். இதைப்பார்த்த காமராஜர் அந்த ரூபாய் நோட்டை அவரிடமிருந்து பிடுங்கி, நன்கொடைப் பணத்தோடு சேர்த்துவிட்டார்.

மற்றொரு முறை முதல் அமைச்சராக இருந்த காமராஜரைப் பார்த்து நண்பர் ”நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.
உடனே காமராஜர்,”தாயாருக்கு செலவுக்கு பணம்அனுப்பி வைக்கிறேன். எனது சாப்பாட்டு செலவுகள் போக, அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லிப் போகிறேன். அதற்கெல்லாம் சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சராகப் போனால் அரசாங்கச் செலவு. கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருவேன்” என்று பதில் அளித்துள்ளார் பெருந்தலைவர்.

அரசையும், கட்சியையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒன்றோடொன்று கலக்காதவர் காமராஜர், மட்டுமே.

1 comment:

illyasmachac said...

The Buffet At El Cajon Casino – Las Vegas - Mapyro
The Buffet at El Cajon Hotel, Las Vegas. 밀양 출장안마 Directions 원주 출장마사지 · (702) 원주 출장안마 770-8000. Call Now · More Info. Hours, Accepts Credit Cards, 서귀포 출장마사지 Accepts 강원도 출장마사지