Wednesday 13 July 2016

காமராஜருக்கு நிகரான தலைவரில்லை

காமராஜருக்கு நிகரான தலைவரில்லை அவருக்கு நிகர் அவரே. ஒப்பில்லாத பெருந் தலைவருடைய எளிமையை கடைபிடிப்பதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்.
ராஜ்யசபா முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.டி. ராமச்சந்திரன் பெருந் தலைவரோடு பழகிய நாட்களில் கண்ட காமராஜரின் நற்பண்புகளை நினைவு கூறுகிறார் எஸ்.கே.டி.ராமச்சந்திரன் இருந்தது.

உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். காமராஜரும் விடுதலையானார். விருதுநகருக்கு வந்த அவரை ஊர் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அவர்களிடம் பேசிய காமராஜர்

“உங்களின் அளவற்ற அன்பை பெற்று இருப்பதால் நான் தலைக்கனம் பிடித்தவனாக மாறினாலும் மாறலாம் அல்லவா? அந்த மனநிலை ஏற்படாமல் இருக்க எனக்காக நீங்கள் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்'’

என்றார்.

அவரது அடக்கத்தை கண்டு மக்கள் வியந்து பாராட்டினார்கள். பின்பு, வீட்டுக்குள் சென்று தனது பாட்டியை பார்த்தார்.
பேரனை கண்டு மகிழ்ந்த பார்வதி அம்மையார் 2 நாட்களுக்கு பிறகு மரணம் அடைந்தார். பாட்டியின் மறைவு காமராஜரை பெருந்துயரில் ஆழ்த்தியது.

இதன்பின்னர் காமராஜர் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே காம ராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் முதன் முதலாக ஏற்ற முக்கிய பதவி.

No comments: