Saturday 21 November 2015

இப்படியும் ஓர் அரசியல்வாதி? கக்கன் அவர்கள்!

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அறிய அவனிடம் அதிகாரத்தை குடுத்துப் பார் என்பர்!

ஆனால் கடைசி வரை பெரியார் அதிகாரத்திற்கே வராமல் விமர்சனங்களை மட்டுமே வைத்து வாழ்க்கையை தள்ளிவிட்டார்! 

துக்ளக் பத்திரிக்கை நடத்தும் சோவுக்கும் அவருக்கும் இடையில் பெரிய வித்தியாசங்களை நான் காணவில்லை!

பதவி, அதிகாரங்கள் கைக்கு வந்த பின்னர் தீரா வியாதி (திராவிட) குஞ்சுகள் சம்பாதித்த சொத்துக்களும் , பண்ணிய, பண்ணிக் கொண்டிருக்கும் அட்டூழிங்களும் நாம் அறிந்ததே!

(விருதுநகரில் கூட்டங்களுக்கு பேச வரும் போதெல்லாம் கா. காளிமுத்துவும், கருணாநிதியும் டீக்கு காசில்லாமல் தெப்பத்து மேட்டை சுற்றி வந்ததாக எங்க ஐயா சொல்வார்!)

ஆனால் பதவியும், அதிகாரமும் கையில் இருந்தும் அனுபவிக்க குடும்பம் இருந்தும் மிகவும் எளிமையாக வாழ்ந்த கக்கன் போன்றோரை தமிழ் சமூகம் எப்படி மறக்கின்றது?

ஒரு வேளை அவரை போல் மறந்தும் யாரும் இருந்து விடக்கூடாது என்று நாம் நினைக்கிறோமா?! அவரை நினைவூட்டினால் நாம் பிழைப்பு நடத்த முடியாது என அதிகார வர்க்கம் நினைக்கிறதோ??!

அவரை எல்லாம் தமிழக காங்கிரசும் மறந்து விட்டதே... அது சரி தமிழே தெரியாத நடிகைகளை வைத்து கூத்து கட்டி பிழைப்பு நடத்தும் நிலைக்கு வந்துவிட்ட தமிழக காங்கிரசுக்கு எங்கே தெரிய போகிறது அவர்கள் வரலாறு!!

பதவி கையை விட்டு போன அடுத்த நொடியே, அரசு குடுத்த காரை அலுவலகத்திலேயே விட்டு விட்டு, சொந்த காசில் நகர பேருந்தில் வீட்டுக்கு சென்றவர் தும்பைபட்டி தூயவன்.

வயதான காலத்தில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த கக்கன் அவர்களை, அடையாளம் தெரியாமல் கீழே படுக்க வைத்தது நிர்வாகம். அப்போது தற்செயலாக வந்த அப்போதைய முதலமைச்சர் எம்ஜியார் அவர்கள் அவரை அடையாளம் கண்டு எது வேன்டுமானாலும் செய்து தர தயாராக இருந்தார். அதுவும் வேண்டாம் என்றாராம் கக்கன். நல்லபடியாக அவரை கவணிக்க சொல்லி மருத்துவமனை நிர்வாகத்தை திட்டி விட்டு சென்றாராம் எம்ஜியார்!

இவரை போன்ற நல்ல, நாணயமான, ஒழுக்க சீலர்களை எல்லாம் பற்றி எல்லாம் படிக்காமல், எட்டு கல்யாணம், பத்து கல்யாணம் பண்ணியவர்கள் பற்றியும், தொண்ணூறு வயதில் இருபது வயது பெண்ணை திருமணம் செய்தவர்கள் பற்றிய வரலாறையும் படித்தால் எப்படி சமூகத்தில் நல்ல சிந்தனை வரும்??!!

No comments: