Sunday 22 November 2015

பனையும் - சான்றோரும்!

நம்மில் பலர் நினைப்பது போல் பனையேறுவது மட்டுமே சான்றோர் தொழிலாக இருந்ததில்லை! பனையேறுதலும் ஒரு தொழிலாய் இருந்து வந்தது என்று கூறலாம். சான்றோர்களை கடல் வணிகத்திலும், கடல் தாண்டிய வணிகத்திலும் புகழ் பெற்றிருந்த பாண்டியர்களின் வழித்தோன்றல் என்று சான்றுகள் கூறுகின்றன. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழகம் எங்கும் வணிக பேட்டைகளை நிறுவியவர்கள் நிறுவி சிறப்பாக வணிகம் செய்தவர்கள் சான்றோர்கள்.

அது மட்டுமல்ல பனையை வைத்திருந்த சான்றோர்களும் பனை ஏறுவதை கூலிக்காக செய்யவில்லை. பனையை வைத்து விவசாயம் செய்தனர், பனம் பொருட்களை வண்டியில் கொண்டு சென்று வணிகமும் செய்தனர். அதே போல் உப்பு, கருவாடு என பல பொருட்களை கொண்டு வணிகம் செய்தனர் சான்றோர்கள். பனையை கொண்டு கைவினை பொருட்களையும் தயாரித்தவர்கள் சான்றோர்கள். இவ்வாறு தொழிலில் பன்முகத்தன்மை காட்டியவர்கள் சான்றோர்கள்.

 சான்றோர்கள் என்றும் அடுத்தவர் வீட்டு கொல்லையில் பனை ஏறவில்லை. தான் விவசாயம் செய்த மண்ணில், தன் சொந்த பனை மரங்களில் தான் ஏறினார்கள். என்றுமே கூலிக்கு மாரடித்தவர்கள் இல்லை சான்றோர்கள். சொந்த தொழில் செய்தே வாழ்ந்து வந்திருக்கின்றனர். தங்கள் விளை பொருட்களை உள்ளூரில் மட்டுமே சந்தைப் படுத்தி பிற சமுதாயத்தினர் வாழ்ந்து வந்த காலத்தில், தங்கள் விளை பொருட்களை அடுத்த ஊர்களுக்கும் வன்டி கட்டி கொண்டு சென்று சந்தைப் படுத்தியும், வணிகப்படுத்தியும் வாழ்ந்து வந்தனர் சான்றோர்கள்.

தங்களது இந்த வண்டி கட்டி செய்யும் வணிகத்தின் பாதுகாப்புக்காக நாடார்கள் அமைத்துக் கொண்டதே பேட்டைகள். முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் அதிகம் வாழ்ந்து கொண்டிருந்த பகுதியில் எவரும் எங்கும் எளிதில் தொழில் செய்துவிடமுடியாது. வண்டி சென்றால் வண்டி மட்டும் தான் இருக்கும். சில சமயம் அதுவும் அவர்கள் கைவசம் போய்விடும். வண்டியில் உள்ள பொருட்களும் காணாமல் போய்விடும். இதன் காரணமாக அந்தந்த இடங்களில் நாடார்கள் பேட்டைகளை அமைத்தனர்.

வண்டிகளைப் பாதுகாப்பாக நிறுத்த ஒரு இடம் வேண்டும். இதே இடத்தில் தாங்கள் கொண்டு வரும் பொருட்களையும் விற்க இதனைச் சுற்றி அரண் போல் பல கடைகளையும் உருவாக்க புத்தியால் தான் திருநெல்வேலி தொடங்கித் தென்காசி என்று இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் வரைக்கும் பரவலாக உருவாகத் தொடங்கியது. இப்படித் தொடங்கியது தான் நாடார் இன மக்களின் ஆறு நகரங்கள் என்றழைக்கப்படும் சிவகாசி, விருதுநகர், (இது தான் தொடக்கத்தில் விருதுப்பட்டி என்று அழைக்கப்பட்டது) திருமங்கலம், சாத்தங்குடி, பாலைய்ம்பட்டி, அருப்புக்கோட்டை ஆகிய நகரங்களை அடிப்படையாக் கொண்டு குடியேறினர்.

No comments: