பாடலின் முதல் வரியே மணப்பாறை மாட்டுடன் தான் தொடங்குகிறது. தமிழகத்தின் புகழ் பெற்ற மாடு வகைகள் என்ற வகையில் நாம் பெரும்பாலும் கேள்விப் பட்டவை#காங்கேயம்_காளைகள் தான். #மணப்பாறை_மாடு என்றொரு வகை இருக்கிறது என்பதே இந்த பாடலில் தான் நாம் கேள்விப் பட்டிருப்போம். அது போக மணப்பாறையில் #முறுக்குதான்பிரபலம். முறுக்குக்கு பிரபலமான மணப்பாறையில் மாடு எங்கிருந்து வந்தது என்று தேடும் போது தான் உதவினார் முனைவர் ந.குமாரவேலு அவர்கள்.
அவரது ஆராய்ச்சி நூலான #காங்கேயக்_காளைகள்(#தமிழகத்தின்_பெருமை) என்ற நூலில் இருந்து சுட்ட (!) தகவல் தான் இது!
இன்றைய கரூர் மாவட்டத்தின் மணப்பாறை என்ற ஊரில் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய எருதுகளை விற்றும் வாங்கியும் சென்றனர். இச்சந்தையில் காங்கேயக் காளைகளும் விற்பனைக்கு வந்தன. இவ்வாறு விலைக்கு வந்த காங்கேயக் காளைகள் நல்ல விலை கிடைக்காவிட்டால் வியாபாரிகள் தங்கள் ஊரில் சில நாட்கள் வைத்து அடுத்த சந்தையில் விற்பர்… இப்படித் தங்கும் வேளையில் காளைகள் உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் இனச்சேர்க்கை செய்துவிடுவதும் உண்டு. இப்படியாக உருவானதே மணப்பாறை மாடுகள் என்று சுப்பிரமணியம் 1947-ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பதிவில் ஏர்களை ஆராய்வோம்....
No comments:
Post a Comment