Monday 1 February 2016

கண்ணியம் காத்த அரசியல் கனவான்...

1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை. அதானல் ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வற்றி பெற்றாக வேண்டும். போட்டியிட வேண்டியதில்லை. எம்.எல்.சி.யாக பொறுப்பேற்றுக்கொள்ளலாம் என்று பலரும் கூறினார்கள். அதை ஏற்கவில்லை. மக்களிடம் வாக்குகளை பெற்றே முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்கிறார். பட்டென்று என் தொகுதியில் போட்டியிடுங்கள், நான் பதவி விலகுகிறேன் என்கிறார் அருணாச்சலம். இடைத்தேர்தல் நடந்தது.

அதன்படி அவருக்கு தொடர்பே இல்லாதா குடியாத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோதண்டராமன் என்ற தோழர் போட்டியிடுகிறார். கடுமையான பிரச்சாரம் நடக்கிறது. அப்போது ஒரு இடத்தில் ‘மேம்பாலம்’ கட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வைக்கிறார்கள். காமராஜர் முதல்வர். பதவியில் இருக்கிறார். சரி என்று கூறியிருந்தால் மொத்த வாக்காளர்களும் ஓட்டு போட்டிருப்பார்கள்.. ஆனால் அப்படி செய்யவில்லை. அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டு வருகிறார்.

உடனிருந்தவர்கள் ‘என்ன ஐயா. கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று ஒரு வார்த்தை கூறியிருக்க கூடாதா. கோரிக்கை நியாயமானதும்கூட. எல்லோரும் ஓட்டு போட்டிருப்பார்களே’ என்று குறைபட்டுக்கொண்ட போது,....“ அது தப்பு. மக்கள் வைத்த கோரிக்கை நியாயமானதுதான். அதை தேர்தலுக்கு பிறகு செய்துகொடுத்துட வேண்டியதுதான். ஆனால் அதை சொல்லி ஓட்டு கேட்ககூடாது. நான் அப்படி கேட்டால் எதிர்கட்சி வேட்பாளர் கோதண்டம் என்ன சொல்லி ஓட்டு கேட்பார். அவரிடம் அதிகாரமில்லையே. நான் அதிகாரத்தை துஷபிரயோகம் செய்வதாகதானே அமையும். இது எப்படி ஜனநாயகமாகும்.” என்று கூறி மறுத்தே விட்டார்.

அதிகாரத்தின் உச்சியில் இருந்த பொழுதும் எக்காலத்திலும் அதை துஷ்பிரயோகம் செய்யாமல் கண்ணியம் காத்தவர் பெருந்தலைவர்.

No comments: