Thursday 4 February 2016

அன்பால் பகை வென்ற ஏழைப்பங்காளர்...

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு 1963 ம் ஆண்டு இடைத்தேர்தல் வந்தது. அந்த இடைத்தேர்தலில் உவரி துரைப் பாண்டியன் என்பவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்க அன்றைய முதல் அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவரகள் நாங்குநேரி தொகுதிக்கு வந்தார். 

குக்கிராமங்களில் நடந்தே சென்று ஓட்டு கேட்டார்.

ஊரில் உள்ளவர்களின் பெயரை சொல்லி அழைத்து நம்ம ஆள் நிற்கிறார், பார்த்துக்குங்க என்றுதான் சொல்வார். ஓட்டுப்போடுங்கள் என்று சொல்வதில்லை. அப்படி தான் ஒருமுறை மிகவும் குக்கிராமமான சங்கனாங்குளத்தில், காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து 1952, 1957, 1962 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்ட வாலிபால் மாடசாமி என்பவரை காங்கிரஸ் கட்சியில் பெருந்தலைவர் சேரச் சொல்லி அழைத்தார். மாடசாமி அவர்களோ பெருந்தலைவரை தனது வீட்டுக்கு வந்து சாப்பிட சொல்ல, காமராஜரும் தட்டாமல் அவரது வீட்டுக்கு சென்று சாப்பிட்டார்.

யாரையும் பகைவர் என்று எண்ணாதவர்தான் காமராஜர். யாரிடமும் அன்பாக பேசுவார். போட்டி வேட்பாளரின் வேண்டுகோளை ஏற்று அவர் வீட்டில் சாப்பிட அந்த கிராமத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் பெருந்தலைவர் நடந்தே வந்தார். அன்பால் பகை வென்ற ஏழைப்பங்காளர் பெருந்தலைவர்.

No comments: