Sunday 2 August 2015

பெருந்தலைவரும் - சினமும்!

பெருந்தலைவர் பொறுமையானவர்தான் ஆனால் கையாலாகாதவர்களை அவர் என்றும் ஊக்குவித்ததில்லை. தங்கள் கடமை அறியாது பணிபுரியும் அரசியல்வாதிகளிடமோ அல்லது அதிகாரிகளிடமோஆவர் காட்டம் காட்ட சிறிதும் தயங்கியதில்லை. படிக்காத மேதை என்கிறோம் ஆனால் அவர் பேச்சுக்கள் எதிலும் அவர் படிக்காதவர் என்பதை உணர முடியாது! அவர் கூறியது போல் புத்தகத்தில் படித்தது தான் கல்வியென்றால் அவர் கல்லாதவரே, ஆனால் உலக அனுபவமே கல்வியென்றால் அவர் மேதையே!
 காமராஜருடைய ஆட்சியில் விருதுநகர் பகுதியில் ஒரு பாலம் கட்டத் திட்டமிடப்பட்டது. திட்ட விளக்கம் மற்றும் மதிப்பீடுகளைச் செய்யும் பொறுப்பு பொ ப து பொறியாளாரான தேவநாதன் உட்பட மூன்று பேரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாலம் கட்டப்பட வேண்டிய இடத்தை பார்வையிட்டு அந்த இடத்தின் மண் தன்மை மற்றும் பாலத்தின் மேல் செல்லக் கூடிய வாகனங்களின் நிறை மற்றும்
எண்ணிக்கைய கணக்கில் எடுத்து அந்த இடத்தில் பாலங்கட்டினால் அது தாக்குப்பிடிக்காது என்றும் வெள்ளம் அதிகரிக்கும் போது பாலச்சுவர்கள் அரிக்கப்பட்டு பாலம் இடிந்துவிடும் என்றும் காமராஜரிடம் சொன்னார்கள்.
அதுக்கு காமராஜர், “பாலங்கட்ட முடியாதுன்னு சொல்ல எதுக்கு எஞ்சினியர்ன்னேன். மணல் பகுதியில பாலங்கட்டினா வெள்ளம் வந்தா அரிக்கும் இடிஞ்சு விழும்னு படிக்காத எனக்கே தெரியும்ன்னேன். இதை சொல்லுறதுக்கா எஞ்சினியர் படிப்பு படிச்சிங்கன்னேன்? என்னைப் போல படிக்காதவங்க முடியாதுன்னு நினைக்கிறத உங்க படிப்பை பயன்படுத்தி முடிச்சுக்காட்டணும்னேன். ”
“இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அந்த இடத்தில் பாலங்கட்டுவதற்கான திட்டத்தை தயாரிக்கலன்னா வேலையை விட்டு அனுப்பிவிடுவேன்னேன்” என்று காலக் கெடு வைத்தார்.
பின்னர் தேவநாதன் அவர்களால் ஒரு திட்டம் வகுக்கப்பட்டு பாலம் கட்டி முடிக்கப் பட்டது! எகிப்து நைல் நைதியின் கிளையின் குறுக்கே கட்டிய பாலத்தின் அடிப்படையில் இந்தப் பாலம் கட்ட திட்டம் தீட்டப் பட்டது.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்.

No comments: