Monday 3 August 2015

தள்ளுபடியாகிப் போன ஆடி!


``ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி,

. . வாடியம்மா, எங்களுக்கு வழித்துணையாக-எம்மை

. . வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக...

சிறுவயதில் வானொலிகளில் கேட்ட பாடல். என்ன படம் என்றெல்லாம் தெரியாது. ஆடிப் பெருக்கின் சிறப்பை உணர்த்தும் பாடல்.

ஆனால் இப்போதெல்லாம் நகைக்கடை, ஜவுளிக்கடை விளம்பரங்கள் தான் ஆடிப் பெருக்கை நினைவூட்டுகின்றன.

ஆடிமாதம், பதினெட்டாம் தேதியன்று, பதினெட்டாம் பெருக்கு அல்லது ஆடிப்பெருக்கு, காவேரி கரையோர மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப் படுகின்றது. விவசாயிகள் காவேரி அன்னைக்கு வழிபாடு நடுத்துவது, புது மணப்பெண்கள், மஞ்சள் கயிறு அணிந்து சிறப்பு வழிபாடு நடத்துவது இந் நாளின் சிறப்பம்சங்களாகும்.

நமக்கு சிறு வயதில் ஆணந்தத்தையும் குதூகலத்தையும் குடுத்த இத்தகைய திருவிழாக்கள், இன்று வியாபாரிகளால் வியாபார திருவிழாக்களாகிக் கொண்டிருக்கின்றன.

.

.
ஆடிப்பெருக்கு என்றாலே நகை, புடவை வாங்க வேண்டுமென்றாகி விட்டது.

என் சித்தி மகள் நேற்று என்னிடம், ``ஆடிப்பெருக்குக்கு அண்ணிக்கு நீங்க என்ன வாங்க போறீங்க அண்ணா.?’’ என்றாா். 

``நல்லதா ரெண்டு பெருக்குமாறு வாங்க போறேன்’’ என்றேன். என்னை 

ஒரு மாதிரி பார்த்து விட்டு, ``எங்க வீட்டுக்காரர் கிட்டே கேட்டதுக்கு 

அவரும் இதையே தான் சொன்னாரு’’ என்றாள் மகா சோகமாக.

காவேரியிலே தான் தண்ணியே இல்லையே, பின் எங்கிருந்து வெள்ளப் பெருக்கு, ஆடிப்பெருக்கு எல்லாம், என்கிறீர்களா?. அதுவும் சரிதான்.
.
.

No comments: