Saturday 15 August 2015

சாதிகள் தூக்கிப் பிடிக்கும் தலைவர்கள்!!

மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, அழகுமுத்து கோன் ,வ.ஊ.சிதம்பரம் பிள்ளை, காமராஜர் போன்றோரெல்லாம் அந்தந்த சாதி மக்களால் தூக்கிப் பிடிக்கபட்டதைக்  கண்டு இவர்கள் இப்படி சாதித் தலைவர்கள் ஆக்கப் பட்டு விட்டனரே என்று பலமுறை மனம் வெம்பி இருக்கிறேன்....

ஆனால் காங்கிரசின் மார்க்கெட்டிங் திறமையினால் முன் நிறுத்தப்பட்ட ஆரியர்களான காந்தி, நேரு இருவரைத் தவிர பலரும் கால வெள்ளத்தில் அழித்து ஒழிக்கப் பட்டு விட்டனர்! காந்தி என்ற பெயரையே "பிராண்ட் நேம்" ஆக்கிய பெருமை நேரு குடும்பத்தையே சாரும்! (இன்னிக்கு வரைக்கும் அதை வைத்துதான் அவங்க கஞ்சி குடிக்கிறதே!!)

 திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா, காயிதே மில்லத் என்ற முகம்மது இசுமாயில், திரு.வி.க, கக்கன் போன்றோர் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை காணும்பொழுது இந்த சாதி சமுதாயமும் அந்தந்த தலைவர்களை முன்னெடுத்து செல்லவில்லை என்றால் அவர்களும் சரித்திரம், பாடப்புத்தகம், வருங்கால சந்ததிகள் என அனைத்திலிருந்தும் அரசியல் ஆதாயம் பார்க்கும் ஆட்சியாளர்களால் துடைத்தெடுக்கப் பட்டிருப்பார்கள்!!

சுதந்திர வரலாற்றில் கூடவா அசிங்கம் பிடித்த அரசியல்!!

எங்க இருந்து "வந்தது மாதரம்"??!!

No comments: