Thursday 6 August 2015

பெருந்தலைவர் பதவியாலா முன்னுக்கு வந்தனர் சான்றோர்கள்?!

நாடார் சமுதாயம் முன்னுக்கு வந்தது காமராசர் பதவிக்கு வந்த பின்னர் தான் என்று சில சிறு பிள்ளைகள் வரலாறு தெரியாமலும், சிலர் தீராத வயித்தெரிச்சலாலும் முகநூலிலும் பிளாக்கிலும் புலம்பி தீர்க்கின்றனர் பாவம்! பொய்யை எத்தனை தடவை கூறினாலும் உண்மையாகப் போவதில்லை! பெருந்தலைவர் கல்வி கொடுத்துதான் நாடார் சமுதாயம் கற்க வேண்டும் என்ற நிலையில் நாடார் சமுதாயம் அன்று இல்லை. ஏனென்றால் காமராசர் கல்வி பயின்றதே விருதுநகர் இந்து நாடார் மகமைக்கு பாத்தியப்பட்ட விருதுநகர் சத்திரிய வித்தியா சாலையில் தான்! பெருந்தலைவர் உண்மையில் பாடுபட்டதே ஆடு மேயத்துக் கொண்டும், ஆடுகளை களவாடிக் கொண்டும், அரிவாள், வேல் கம்பு என வெட்டியாக சுற்றிக் கொண்டு திரிந்த மாற்று சமுதாய கல்வியறியாத பாவப்பட்ட மக்களுக்காகத்தான்!

ஆணடிப்பட்டி கணவாய் பகுதிகளில் திருட்டுக்களும், கொள்ளைகளும் அதிகம் நடக்கின்றன என கேள்விப் பட்டபோது அந்தப் பகுதியில் ஒரு அணையும் பள்ளியும் இருந்தால் போதும் என செயல் படுத்தியவர் பெருந்தலைவர். ஆண்டிப்பட்டியில் நாடார்களா பெரும்பான்மை? வரலாறு தெரியாதவர்கள் "கருவாச்சி காவியம்" படைத்த திரு,வைரமுத்து அவர்களிடமும், இயக்குனர் பாரதிராசாவிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!! தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களையும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவர்களையும் என்ன செய்வது? இருப்பினும் மேலும் சில ஆதாரங்களை கீழே கொடுக்கிறேன்! (ஏற்கனவே பல முறை சொல்லி ஓய்ந்து போயாகிவிட்டது!)

பெருந்தலைவர் அவனியிலே அவதரித்த நாள் 15-07-1903 இல். அவர் ஆட்சிக் கட்டிலில் அமரந்தது 1954 சித்திரை 1 இல்!

1885ல் விருதுநகரில் முதன் முதலாக விருதுநகர் நாடார் உறவின் முறையால் சத்திரிய வித்தியாசாலை பள்ளி உருவாக்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட போதே ஆங்கில வழிக் கல்வி பயிலும் பள்ளியாக தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே தொடங்கப் பட்ட முதல் ஆங்கில வழி கல்வி பயிலும் பள்ளி இதுவே ஆகும்.  இது நாடார் சங்கங்களின் முதல் பள்ளியுமாகும். இதில் கல்வி பயின்றவர்களே காமராசர், சௌந்திரபாண்டியன் நாடார் போன்றோர்.

ஆக காமராசர் பிறப்பதற்கு 18 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பள்ளி தொடங்கப்பட்டு காமராசருக்கே கல்வி வழங்கிய பள்ளி இது!

1889ல் கமுதியில் சத்திரிய வித்தியாசாலை உருவாக்கப் பட்டது.

இதுவும் காமராசர் பிறப்பதற்கு முன்னரே தொடங்கப்பட்ட பள்ளியாகும்.

1909ல் திருமங்கலத்தில் சத்திரிய வித்தியாசாலை தொடங்கப்பட்டது.

இது பெருந்தலைவருக்கு 6 வயது இருக்கும் போது தொடங்கப்பட்டது!

1921ல் நாடார் வங்கி உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் "தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி"யானது!

அப்போது பெருந்தலைவருக்கு வயது 18! 51 வயதில்தான் அவர் முதல்வரானார்! 

நாடார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வாழும் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த அன்று பெருந்தலைவர் அங்கு ஆற்றிய உரை இதோ:

நீங்கள் கேரளத்தில் இருந்து வந்துள்ளீர்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளீர்கள். ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல காலம் வேண்டும். அதுவரை உங்களுக்கு எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. செய்யவும் மாட்டோம். பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு மட்டும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் இன்றே உங்களை மீண்டும் கேரளத்துடன் இனைவதற்கு நான் ஒழுங்கு செய்யலாம் என்றார்.

அவர் நினைத்தால் தன் சமுதாய மக்கள் நிரம்ப வாழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்படி ஓர் உரை ஆற்றாமல், அங்கு பிரத்யேகமாக முன்னேற்றப் பனிகளை முடுக்கி விட்டிருக்கலாம்! இப்படிப்பட்ட நேர்மையான மனிதரா நாடார்களுக்கென்று பிரத்தியேகமாக உதவினார் என புலம்பித் தீர்க்கிறீர்கள்! இதற்கு மேலும் நீங்கள் புலம்பினால், முட்டாள்களுக்கு பாடம் எடுக்க என்னால் முடியாது. நேரமும் கிடையாது!!

No comments: