Thursday, 15 October 2015

பெரியார் வழியா பெருந்தலைவர் வழி?!

ஐயா காமராஜரைப் பற்றிப் புகழ்ந்து பேசும்போது ஈ.வே.ரா வையும் ஏதோ நாட்டிற்கும் தமிழகத்துக்கும் தமிழ் மொழிக்கும் தொண்டு செய்தவரைப் போல ஆங்காங்கே பதிவிடுகிறார்கள். இந்த தமிழ்நாடு ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் அடிமையாகி போனதர்க்குக் காரணமே இவரது திராவிட இயக்கமே. இதன் வாரிசு தி மு க தான் வெற்றுக் கோசத்தை மக்களிடம் பேசி அவர்களைக் கவர்ந்து பெருந்தலைவரை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்து உலக மகா ஊழல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஈ.வே.ரா வுக்கு எப்போதுமே தமிழர்கள் மீது நல்ல மரியாதை இருந்ததில்லை. பிராமனீயத்தை எதிர்ப்பதாகக் கதை அளந்துகொண்டு ராஜகோபால ஆச்சாரியுடன் கொஞ்சிக்குலவிக்கொண்டு காமராஜரை பதவியில் இருந்து இறக்க அடித்தலமிட்டவரே இந்த ஈ.வே.ரா தான். தயவு செய்து காமராஜரைப் புகழும்போது அவருடன் சேர்ந்து ஈ.வே.ராவையும் சேர்த்துப் புகழுவதை நிறுத்துங்கள்.

அதுமட்டுமல்ல இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி காமராஜரின் காங்கிரசல்ல. இது காமராஜரைக் கழட்டிவிட்ட இந்திரா கட்சி. இந்தக் கட்சிதான் காமராஜரை இழிவு படுத்திய தி மு க வோடு ஓரிரு சீட்டுக் ஒத்தூதும் கட்சி.

காமராஜர் அன்றைய சூழ்நிலையில் எவ்வளவு முன்னேற்றங்களைத் தமிழ் நாட்டில் ஏற்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்தவர். "அரசியல் தொண்டால் தனது வாழ் நாளில் வெற்றி காண்பது அரிது, சிறைச் சாலையே பரிசு" என்று காங்கிரஸ் இருந்த நாட்களில் காங்கிரசில் சேர்ந்தவருள் ஒருவர் அவர். அது போன்றவரை இன்று எதிர்பார்க்க முடியாது. கருத்து, கொள்கை ரீதியாக உங்களுக்குப் பிடித்தவர்களுக்குள், லஞ்சம் வாங்காமல், குடும்பம்-சாதி நலன்களுக்காகப் பாடுபடாமல் அனைத்து மக்களுக்காகவும் உழைப்பவர்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். சிலைகள் எழுப்புவது, மாலைகள் போடுவதால் பலனில்லை.

No comments: