எளிமையான தோற்றம் அவருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தது. அவருடைய ஒவ்வொரு செயலிலும் எளிமையைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. உயர் பதவி வகிப்பவர்களுக்கே உரிய நியாயமான குறைந்தபட்ச பந்தா கூட அவரிடம் இல்லாதிருந்தது.
ஒவ்வொரு நாள் இரவும் உறங்கப் போவதற்கு முன், தன்னைப் பார்க்க வந்த எல்லாரும் போய்விட்டார்களா என்று வைரவனிடம் கேட்பார். போய்விட்டார்கள் என்று சொன்ன பிறகும், இன்னொரு ரவுண்டு போய் பார்த்துவிட்டு வரச் சொல்வார். காரணம் கேட்டதற்கு, சில பேர் வெட்கப்பட்டு, பயப்பட்டு ஒதுங்கி நின்றுவிடுவார்கள். கடைசியில் பார்க்க முடியாமலே ஊர் திரும்பிவிடுவார்கள். ஏழைகளாக இருப்பார்கள்.
மறுபடியும் வரவேண்டுமெனில், செலவு செய்ய வேண்டும். பாவம், அதனால்தான், என்று பதில் சொன்னார். ஏழைகளின் நிலை அறிந்தவர் அல்லவா ஏழை பங்காளர்.
ஒருமுறை வெளியூர் போய்விட்டு திரும்பும் பொழுது, காரிலேயே தூங்கிக் கொண்டு வந்தவர் ஏதோ சப்தம் கேட்டு விழித்துக்கொண்டார். கார் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் அருகே நின்றுகொண்டிருந்தது. போக்குவரத்து நெரிசல்!!
ஒரே ஒரு போக்குவரத்து காவலர் மட்டும்தான் இருந்தார். வாகனங்களை நெறிப்படுத்தி அனுப்ப தனி ஆளாக நின்று அவர் திணறிக்கொண்டிருந்தார்.
உடனே காமராஜர் கீழே இறங்கி அவரும் அந்த காவலரோடு சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவினார். அதோடு நின்று விடாமல் சைதை போலீஸ் நிலையத்துக்கும் போய், அது போன்ற இடங்களில் இன்னொருவரை கூடுதலாகப் போட்டால் என்னன்னேன் என்று கண்டித்துவிட்டும் வந்தார்...
வீண் பந்தாக்களை வெறுத்த உண்மையான மக்களின் முதல்வர்....
No comments:
Post a Comment