Friday, 23 October 2015

இயற்கையா? விதியா?

நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்ததாக நமக்கு நிறைய சான்றுகளும் பண்டிகைகளும் உள்ளன. தமிழர்கள் பிற்போக்குவாதிகள் என்றும் திராவிட இயக்கங்களே தமிழர்கள் வாழ்வில் வெளிச்சம் ஏற்றி வைத்ததாகவும் பீற்றிக் கொண்டிருக்கின்றன! ஆனால் நிதர்சனம் என்ன என்பதை சிறிது ஆராயலாம்... என் ஆய்வுகள் தவறாய் இருக்கலாம், இதுதான் சரி என நான் வாதாட வரவில்லை... ஆனால் எம் முன்னோர் காட்டுமிராண்டிகள் என்றும் தமிழ் மொழி காட்டு மிராண்டிகளின் மொழி என்றும் திராவிடர்கள் கதைத்துக் கொண்டு திரிவதை ஏற்றுக் கொள்ள முடியாது!

இயற்கையை ஏன் வழிபட்டார்கள் நம் முன்னோர்கள்? இயற்கை நமக்கு எல்லா வளங்களையும் வழங்கியதாலா? அப்படியா? இயற்கை மனிதருக்கு நன்மை மட்டுமே செய்து வருகிறதா? அப்படியானால் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் எல்லாம் ஏன் வருகின்றன? மனிதரின் தவறான செயலினால் என சிலர் வாதிடுகிறார்கள்! முதலில் இயற்கை என்ன செய்கிறது என்பதை கொஞ்சம் ஆய்வோம். இயற்கையின் வேலை அது தன்னை நிலைப்படுத்திக் கொள்ளுவதும் (STABILIZE), சமநிலையை (BALANCING) பாதுக்காப்பதும் ஆகும்.

இதற்கு உதாரணம் ஆப்பிரிக்க சிங்கங்கள். ஆப்பிரிக்க காடுகளில் பெண் சிங்கங்கள் மட்டுமே கூட்டமாய் வாழும் (LION PRIDE). பெண் சிங்கங்களின் வேலை குட்டி போடுவது, குட்டிகளை பராமரித்து அவைகளை வளர்ப்பது, அவைகளுக்கு வேட்டையாட கற்றுக் குடுப்பது, பின்னர் முக்கியமாக் வேட்டையாடி கூட்டத்தின் பசி போக்குவது! அப்போ ஆண் சிங்களின் வேலை பெண் சிங்கங்களோடு கூடி இனப்பெருக்கம் செய்வது, ஓட்டகச்சிவிங்கி காட்டெருமை போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாடும் போது மட்டும் உதவுவது, பிற மாமிச பட்சினிகளால் (கழுதைப் புலி போன்ற) தங்கள் குட்டிகளுக்கு ஆபத்து வராமல் பாதுகாப்பது, முக்கியமாக அந்த கூட்டத்தின் எல்லையை பாதுகாப்பது. காட்டில் வாழும் ஆண்சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 -18 வருடங்கள்தான். ஆனால் மிருகக்காட்சி சாலைகள் போன்றவற்றில் வளர்க்கப்படும் சிங்கங்கள் 20-25 வருடங்கள் உயிர் வாழும். ஏன் இவ்வளவு வித்தியாசம்?

அங்கேதான் இருக்கிறது இயற்கையின் சூட்ச்சுமமும் குரூரமும்! ஆண் சிங்கக் குட்டிகள் பொதுவாக பருவத்துக்கு வரும் முன்னரே அந்த கூட்டத்தின் ஆண் சிங்கத்தால் அடித்து விரட்டப்படும்! பின்னர் அவை காட்டில் சில காலங்கள் வேட்டையாட பழகி பிற ஆண் சிங்களாலோ அல்லது கழுதை புலிகள் போன்றவற்றாலோ வேட்டையாடப் படாமலோ உயிர் வாழ  வேண்டும். நல்ல சரியான எடையும், உயரமும் அடைந்த பின்னர் மற்றொரு ஆண் சிங்கத்தின் கூட்டத்தை அபகரிக்கும். எப்படி? போர்!! பெரும்பாலும் சண்டை தவிர்க்கப்பட்டு மிரட்டியே காரியம் சாதிக்க நினைக்கும் இரு சிங்கங்களுமே! வேறு வழி இல்லாமல் சண்டை நடந்தால் கூட முடிந்த வரை சாவு தவிர்க்கப்ப்டும். ஆனால் சண்டை ஏற்பட்டு தோற்ற ஆண் சிங்கம் பெரும்பாலும் உயிர் வாழ்வது கடினமே! படுகாயமடைந்த சிங்கத்தினால் வேட்டையாடவும் முடியாது, வேட்டையாடி குடுக்க சிங்கக் கூட்டமும் இருக்காது! ஆம் தோற்ற சிங்கம் கூட்டத்தை விட்டு விரட்டப்படும்! இந்த நிலையில் சிங்க ராஜாவை பார்க்க நேரக்கூடாது. ஆம் அவ்வளவு பரிதாபகரமாக எலும்பும் தோலுமாக அலையும்!  அது படு காயத்துடன், காட்டில் பரிதாபமாக கடும் பசியுடன் அலைந்து திரிந்து கொடுமையாக சாகும்! இல்லாவிட்டால் கழுதை புலிகளாலோ, காட்டெருமைகளாலோ கொல்லப்படும்! மிக கொடூரமாக இருக்கிறதா? இதை தான் நாம் நாட்டில் விதி என்கிறோம். இது இயற்கை!! இன்னும் முடியவில்லை!

சரி இந்த சிங்கத்தை அடித்து விரட்டிவிட்டு கூட்டத்தை அபகரித்த ஆண் சிங்கம் என்ன செய்கின்றது என்று பார்ப்போம். முதல் வேலையாக அந்த கூட்டத்தின் சிறிது பெரிய ஆண் சிங்கங்கள் விரட்டி அடிக்கப்படும். ஆண் பெண் குட்டிகள் அனைத்துமே அந்த புதிய ஆண் சிங்கத்தினால் கொல்லப்படும். கண் திறக்காத குட்டிகளும் விதிவிலக்கல்ல! ஏன் இது? பெண் சிங்கங்கள் குட்டிகளுக்கு பால் குடுக்கும் வரை அடுத்த இனப்பெருக்கத்திற்கு தயாராகாது, சம்மதிக்கவும் செய்யாது, ஆண் சிங்கங்களை பக்கத்திலேயே விடாது. குட்டிகள் இறந்த உடன் அதன் உடலில் வெப்பம் ஏற்பட்டு மீண்டும் இனபெருக்கத்துக்கு தயாராகும்!! இது பார்க்க மிக குரூரமாக இருந்தாலும் சிங்கங்கள் தங்கள் குலத்தை விருத்தி செய்ய (PASS THEIR GENES) இது ஒன்றுதான் வழி! இதுவே சிஙக்ங்களை அழிய விடாமலும் பாதுகாக்கிறது! அது எப்படிங்க? குட்டிய கொன்று விட்டால் சிங்க இனம் அழியத்தானே செய்யும் எப்படி பாதுகாக்கும்என்று கேட்கிறீர்களா??

அதுதாங்க அடுத்த சூட்சுமம்! ஆம் வேறு ஆண் சிங்கம் வரவில்லையென்றால், அந்த கூட்டத்தில் வளரும் ஆண் சிங்கங்கள் தங்கள் சகோதரிகளுடனே இனப் பெருக்கம் செய்து சத்தில்லாத குட்டிகளை ஈன வழி செய்து விடும்! அதே போல் தலைமை ஆன் சிங்கம் மாற்றப்படா விட்டால். அது சில காலங்களில் தான் ஈன்ற பெண் சிங்க குட்டிகளுடுனேயே இனப்பெருக்கம் செய்து சத்தில்லாத குட்டிகளை ஈன வழிவகை செய்து விடும்! இது தான் இய்ற்கை தன்னை நிலைப்படுத்திக் கொள்வது!! மேலும் அடுத்த படிவில் பார்ப்போம்.....

No comments: