முகநூல் இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் எனக்கு.....?
தனிப்பட்ட வாழ்வில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது....
ஆனால் என் நட்பு வட்டமும், சொந்தமும் மிகவும் சுருங்கி போயிருக்கும் என்பதில் ஐயமில்லை.....!
அதுமட்டுமல்ல என் தேடலும், பொது அறிவும் கூட விரிவடைந்து இருக்காது....
புத்தகம், கேள்வி ஞானம் என பல விசயங்களில் என் தேடல் விரிந்ததற்கு முகநூல் ஒரு மிகப்பெரிய காரணி....
நேரில் பார்க்கும் மனிதர்களுக்கும் அவர்கள் உள் மனதுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசமும், இடைவெளியும் இருக்கும்....
அவர்களை தள்ளி நின்று பார்க்கும் போது அழகாகவும், அருகில் வந்து பார்க்கும் போது குணம் கேவலமாகவும் இருக்கும்......!
நானும் அப்படித்தான்... எனது தோற்றத்தையும், பேச்சையும், ஏன் கையெழுத்தையும் விட என் நிஜம் கேவலமே....
எனக்கு நடிக்க தெரியாது என எவரும் கூற முடியாது! ஒருவர் மனதில் நினைப்பதை மொழி பெயர்க்கும் கருவி என்று கண்டு பிடிக்கப்படுகிறதோ.... அன்றே நட்பு, காதல், பாசம், நேசம் என்ற எல்லா வார்த்தைகளுமே அர்த்தமற்றவைகளாகிவிடும்!!
முகநூல் மனிதர்களும் அதற்கு விதிவிலக்கல்ல! உன் நன்பர்கள் யாரென்று சொல் நான் உன்னை பற்றி சொல்கிறேன் என ஒரு ஆங்கில பழமொழி உண்டு! அதே போல் ஒருவரின் கெட்ட பக்கத்தை பற்றி தெரிய வேண்டுமென்றால் அவரது குப்பையை கிளறுங்கள் என்பார்கள்! முகநூலில் ஒருவரின் சுயம் தெரிய வேண்டுமா?? அவரது உள்டப்பியை (அதாங்க இன்பாக்ஸ்!) கிளறினால் போதும்! எல்லா குப்பையும் அங்கே இருக்கும்!!
முகநூல் மிக அழகாக தெரிவது போல். மிக மோசமாகவும் இருக்கும்! மிக நெருங்கிய கல்லூரி நன்பனே, நம் வட்டத்துக்குளேயே அசிங்கமாய் நடந்து கொள்ளும் கொடுமையையும் கண்டேன். ஆண் பெண் ஈர்ப்பு என்பது ஆண் பெண்ணுக்குள் சகஜம் தான். எனக்கும் உண்டு! அது இல்லையெனில் ஒருவர் ஆணாகவோ இல்லை பெண்ணாகவோ இருக்க முடியாது. அழகு என்பது இரு பாலரையும் ஈர்க்கும் விசயம் தான். அழகான எதிர்பாலரை பார்க்கும் திருமணமான ஆணோ அல்லது பெண்ணோ டக்கென ஒரு நிமிடம் சஞ்சலப்படுவது இயற்கை! பெண்கள் மிகவும் கட்டுப்பாடோடு நடந்து கொள்வர், ஆண்கள் மனைவி அருகில் இல்லாத பொழுது ஒருமுறை திரும்ப பார்ப்பதும் உண்டு!
ஆனால் வரைமுறை என்ற ஒன்று இல்லை என்றால் நாமும், குஷ்பு கமல்ஹாசன் போல் ஆகிவிடுவோம் அல்லவா?? வரைமுறை இல்லாத வாழ்க்கை கூத்தாடிகளுக்கு வேண்டுமானால் சரியாய் இருக்கலாம் ஆனால் நமக்கு?! எவ்வளவு அழகான பெண்களை கண்டிருந்தாலும் நம் பொறுப்புக்கள் அவற்றை அடுத்த நிமிடமே மறக்கடித்து விடும். மனைவியின் பாசம் நமக்குள் குற்ற உணர்ச்சியை கிளறிவிட்டு விடும். பிள்ளைகளை கண்ட பின் பெரும்பாலும் உலகமே மறந்து விடும். அதையும் மீறி சிலர் முகநூலில் நடந்து கொண்ட முறை என்னை பல முறை முகநூலை விட்டு போய்விடும் எண்ணத்தையும் தூண்டியிருக்கிறது! ஆனால் இது போன்றவர்களுக்கு மேல் தொடர்பில் உள்ள நல்லவர்களால் தான் இன்னும் முகநூல் வாசம்!
தெரிவிக்க வேண்டும் என நினைக்கும் வில்லங்கமான விசயங்களை நாம் நேரில் தெரிவிக்க தைரியம் பத்தாது ஆனால் அதையே கடிதம் மூலமாக தெரிவிக்க தயக்கம் இருக்காது. அதேதான் முகநூலும். நல்ல வாய்ப்புகளை தேடி அலையும் பல்ருக்கு எப்படி முகநூல் வரப்பிரசாதமோ... அதே போல் சில மோசமான வாய்ப்புகள் தேடி அலைபவர்களுக்கு முகநூல் நல்ல குப்பைக்கிடங்கே!! இவர்களில் சிலர் இழவு வீட்டிலும் வாய்ப்புக்கு அலைபவர்கள்! ஆக மொத்தம் பெண்களுக்கு முகநூல் மிகவும் ரிஸ்க்கான சமாச்சாரம்தான்! மிகுந்த கவணம் தேவை என்பதை என் அனுபவத்தில் பல முறை கண்டிருக்கிறேன்!
முகநூலில் இது மட்டுமா என் மோசமான அனுபவங்கள்.... அடுத்த பதிவில் இன்னும் தொடரும்...
தனிப்பட்ட வாழ்வில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது....
ஆனால் என் நட்பு வட்டமும், சொந்தமும் மிகவும் சுருங்கி போயிருக்கும் என்பதில் ஐயமில்லை.....!
அதுமட்டுமல்ல என் தேடலும், பொது அறிவும் கூட விரிவடைந்து இருக்காது....
புத்தகம், கேள்வி ஞானம் என பல விசயங்களில் என் தேடல் விரிந்ததற்கு முகநூல் ஒரு மிகப்பெரிய காரணி....
நேரில் பார்க்கும் மனிதர்களுக்கும் அவர்கள் உள் மனதுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசமும், இடைவெளியும் இருக்கும்....
அவர்களை தள்ளி நின்று பார்க்கும் போது அழகாகவும், அருகில் வந்து பார்க்கும் போது குணம் கேவலமாகவும் இருக்கும்......!
நானும் அப்படித்தான்... எனது தோற்றத்தையும், பேச்சையும், ஏன் கையெழுத்தையும் விட என் நிஜம் கேவலமே....
எனக்கு நடிக்க தெரியாது என எவரும் கூற முடியாது! ஒருவர் மனதில் நினைப்பதை மொழி பெயர்க்கும் கருவி என்று கண்டு பிடிக்கப்படுகிறதோ.... அன்றே நட்பு, காதல், பாசம், நேசம் என்ற எல்லா வார்த்தைகளுமே அர்த்தமற்றவைகளாகிவிடும்!!
முகநூல் மனிதர்களும் அதற்கு விதிவிலக்கல்ல! உன் நன்பர்கள் யாரென்று சொல் நான் உன்னை பற்றி சொல்கிறேன் என ஒரு ஆங்கில பழமொழி உண்டு! அதே போல் ஒருவரின் கெட்ட பக்கத்தை பற்றி தெரிய வேண்டுமென்றால் அவரது குப்பையை கிளறுங்கள் என்பார்கள்! முகநூலில் ஒருவரின் சுயம் தெரிய வேண்டுமா?? அவரது உள்டப்பியை (அதாங்க இன்பாக்ஸ்!) கிளறினால் போதும்! எல்லா குப்பையும் அங்கே இருக்கும்!!
முகநூல் மிக அழகாக தெரிவது போல். மிக மோசமாகவும் இருக்கும்! மிக நெருங்கிய கல்லூரி நன்பனே, நம் வட்டத்துக்குளேயே அசிங்கமாய் நடந்து கொள்ளும் கொடுமையையும் கண்டேன். ஆண் பெண் ஈர்ப்பு என்பது ஆண் பெண்ணுக்குள் சகஜம் தான். எனக்கும் உண்டு! அது இல்லையெனில் ஒருவர் ஆணாகவோ இல்லை பெண்ணாகவோ இருக்க முடியாது. அழகு என்பது இரு பாலரையும் ஈர்க்கும் விசயம் தான். அழகான எதிர்பாலரை பார்க்கும் திருமணமான ஆணோ அல்லது பெண்ணோ டக்கென ஒரு நிமிடம் சஞ்சலப்படுவது இயற்கை! பெண்கள் மிகவும் கட்டுப்பாடோடு நடந்து கொள்வர், ஆண்கள் மனைவி அருகில் இல்லாத பொழுது ஒருமுறை திரும்ப பார்ப்பதும் உண்டு!
ஆனால் வரைமுறை என்ற ஒன்று இல்லை என்றால் நாமும், குஷ்பு கமல்ஹாசன் போல் ஆகிவிடுவோம் அல்லவா?? வரைமுறை இல்லாத வாழ்க்கை கூத்தாடிகளுக்கு வேண்டுமானால் சரியாய் இருக்கலாம் ஆனால் நமக்கு?! எவ்வளவு அழகான பெண்களை கண்டிருந்தாலும் நம் பொறுப்புக்கள் அவற்றை அடுத்த நிமிடமே மறக்கடித்து விடும். மனைவியின் பாசம் நமக்குள் குற்ற உணர்ச்சியை கிளறிவிட்டு விடும். பிள்ளைகளை கண்ட பின் பெரும்பாலும் உலகமே மறந்து விடும். அதையும் மீறி சிலர் முகநூலில் நடந்து கொண்ட முறை என்னை பல முறை முகநூலை விட்டு போய்விடும் எண்ணத்தையும் தூண்டியிருக்கிறது! ஆனால் இது போன்றவர்களுக்கு மேல் தொடர்பில் உள்ள நல்லவர்களால் தான் இன்னும் முகநூல் வாசம்!
தெரிவிக்க வேண்டும் என நினைக்கும் வில்லங்கமான விசயங்களை நாம் நேரில் தெரிவிக்க தைரியம் பத்தாது ஆனால் அதையே கடிதம் மூலமாக தெரிவிக்க தயக்கம் இருக்காது. அதேதான் முகநூலும். நல்ல வாய்ப்புகளை தேடி அலையும் பல்ருக்கு எப்படி முகநூல் வரப்பிரசாதமோ... அதே போல் சில மோசமான வாய்ப்புகள் தேடி அலைபவர்களுக்கு முகநூல் நல்ல குப்பைக்கிடங்கே!! இவர்களில் சிலர் இழவு வீட்டிலும் வாய்ப்புக்கு அலைபவர்கள்! ஆக மொத்தம் பெண்களுக்கு முகநூல் மிகவும் ரிஸ்க்கான சமாச்சாரம்தான்! மிகுந்த கவணம் தேவை என்பதை என் அனுபவத்தில் பல முறை கண்டிருக்கிறேன்!
முகநூலில் இது மட்டுமா என் மோசமான அனுபவங்கள்.... அடுத்த பதிவில் இன்னும் தொடரும்...
No comments:
Post a Comment