Saturday, 24 October 2015

பெருந்தலைவரும் சீமைக்கருவேலும்!!

சீமைக்கருவேல் மரங்கள் பெருந்தலைவர ஆட்சி் காலத்தில் ஏதோ தவறான நோக்கோடு கொண்டு வரப்பட்டதாக பதிவுகளில் சிலர் பின்னூட்டமிடுவது வேதனை அளிக்கிறது! நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எத்தனையோ தியாகங்களையும், நன்மைகளையும் செய்த பச்சை தமிழரா இந்த விசயத்தில் தீமை நினைத்திருக்க போகிறார்...?? பின்னூட்டமிடுபவர்களின் அறியாமையாய் இருக்கலாம்!!

காமராஜர் காலத்தில், உணவு பஞ்சம் போல், விறகு பஞ்சம் ஏற்பட்டது. உணவு சமைப்பதறகாக வெளி நாட்டில் இருந்து கருவேல மரத்தை இறக்குமதி செய்ததால், இந்த கருவேல மரத்திற்கு "சீமை கருவேலம்' என்ற பெயர் உண்டு. மெக்சிகோ, கரீபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இவை, பயிர்களுக்கு வேலியாகவும், விறகாகவும் பயன்படும் எனக் கருதி, 1950ல் ஆஸ்திரேலியாவிலிருந்து, இந்தியாவுக்கு விதையாக கொண்டுவரப்பட்டது. நலம் பயக்கும் என கருதி, விதைக்கப்பட்டவை இவை!

15 வருடங்களுக்கு முன் வரை இவை கிராமப்புறங்களிலும், நாட்டுப்புறங்களிலும் இவை பெருவரியாக பயன்படுத்தப் பட்டு வந்தன என்பது மறுக்க முடியாத உண்மை! தற்பொழுது விறகுகளின் பயன்பாடு மிகவும் அரிதாகி விட்ட சூழலில், இவை மிகவும் நச்சுத் தனமை வாயந்தவை என்றும் மிக சமீப காலத்தில் கண்டு கொண்ட நிலையில், பெருந்தலைவர் மீது பழி சுமத்துவது முறையல்ல!! நன்றி மறவாதீர் மக்களே....

No comments: