Thursday, 8 October 2015

பெருந்தலைவரும்-நடிகை பத்மினியும்

தமிழகத்தில் பெருந்தலைவர் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் இயங்கிய வேளையில் பிரசாரக் கூட்டத்தில் பேசுவதற்காக நடிகை நாட்டியப்பேரொளி பத்மினி மேடையில் அமர்ந்திருந்தார்.

அப்பொழுது மேடைக்கு வந்த காமராஜருக்கு யார் அந்தப் பெண் என்பது தெரியாது. காமராஜர் சினிமாப் படம் பார்ப்பதில்லை. சினிமா இதழ்களும் படிப்பதில்லை. அதனால் மேக்கப் அலங்காரங்களுடன் வந்திருந்த பத்மினி அவருக்கு ஆச்சரியமாக இருந்தார்.

அருகில் நின்றவரிடம் யார் அந்த அம்மா? எனக் கேட்டார்.

அவர்தான் பிரபலமான சினிமா நடிகை. காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் பேசுவதற்கு அழைத்துவரப்பட்டுள்ளார் எனச் சொன்னதும் பெருந்தவலைவருக்கு.வந்ததே கோபம். காமராஜர் "அந்த அம்மாவுக்கு இங்கே என்ன வேலை. அவர்களுக்கு ஸ்ரூடியோவில்தானே வேலை அவர்களை போகச் சொல்" என்றார்.

பத்மினியும் இறங்கிப் போய்விட்டார். இப்படி அவர் வளர்த்த கட்சிதான் இன்று குயுபுவிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது!!

No comments: