Monday 27 October 2014

பெருந்தலைவர் காமராஜரைப்பற்றி… அறிஞர் பெருமக்கள்


பெருந்தலைவர் காமராஜரைப்பற்றி… அறிஞர் பெருமக்கள்


திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். நேரு.
“மீண்டும் நான் பாரத நாட்டுக்கு வரும்போது சென்னைக்கு விஜயம் செய்யும்போது தாங்களே முதலமைச்சராக இருப்பீர்கள்.”
-இங்கிலாந்து நாட்டு ராணியின் கணவர் எடின்பரோ


“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராஜ், காமராஜ் மகாபுருஷர்.”
காஞ்சி சங்கராச்சாரியார்
“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?”
_பெரியார்.


“காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.”
_
இந்திரா காந்தி

சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்.
_ சுப்பிரமணிய அய்யர்

காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி
_ எம்.ஜி.ஆர்.


தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்.
_ கருணாநிதி


பள்ளிக் குழந்தைகளுக்குப பகல் உணவு அளிக்கும் திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத புதுமை. அதை இங்கேதான் (சென்னையில்) காணுகின்றேன். இதன் மூலம் ஏழைக்குழந்தைகளின் தற்குறித்தனம் அற்றுப்போகும் என்பது என்னுடைய நம்பிக்கை.
_ பிரதமர் ஜவஹர்லால் நேரு


தமிழ்நாட்டின் கிராமங்கள் முன்பு பார்த்ததுபோல் இல்லை. அவர்கள் இல்லங்களில் மின்சார ஒளியும், முகத்தில் அறிவு ஒளியும் வீசுகின்றன. குறிப்பாக பெண்கள் கல்வியில் சென்னை அதி உன்னதமாக வளர்ந்திருக்கிறது.
_பிரதமர் ஜவஹர்லால் நேரு


கல்வி, மின்சாரம் போன்ற துறைகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றம் மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டியவைகளாகும்.
_குடியரசுத் தலைவர் திரு. ராஜேந்திரபிரசாத்


சமுதாய நலத்திட்டத்திற்கான மத்திய அரசின் மானியத்தப் பூரணமாகப் பயன்படுத்திக்கொண்ட ஒரே மாநிலம் இந்தியாவிலேயே (காமராஜர் அப்போது முதல்வர்) சென்னைதான்.
_குல்சாரிலால் நந்தா


பிற எல்லா மாநிலங்களையும் விட மின்சாரத் திட்டங்களை அதிக அளவில் (உற்பத்தி செய்து) உபயோகித்திருப்பது சென்னை மாநிலம் (காமராஜர் அப்போது முதல்வர்) ஒன்றே
_எஸ்.கே.பட்டீல்


அன்றாட அரசாங்க நிர்வாகத்திலும், திட்டங்கள் போன்ற பெரும்பணியிலும் ஊழல்கள் குறைந்து, திறமை அதிகம் காணப்படும் ஒரே மாநிலம் சென்னை (காமராஜர் அப்போது முதல்வர்).
_பிரதமர் ஜவஹர்லால் நேருஜி


உணவு உற்பத்தி துறையில் சென்னை (காமராஜர் அப்போது முதல்வர்) தன் நிறைவு பெற்று விட்டது “இது என்றுமில்லாத இமாலயச் சாதனை'’
_ எம்.வி.கிருஷ்ணப்பா


விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதிலும், கூட்டுறவு இயக்க வளர்ச்சியிலும் முன்னணியில் நிற்பது சென்னை (காமராஜர் அப்போது முதல்வர்).
_மொரார்ஜி தேசாய்
காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.
_மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமஸ்
காமராஜ் அரசு மக்களைப் புரிந்து கொண்டு ஆட்சி நடத்துகிறது. இங்குள்ள மக்கள் அரசாங்கத்தின் மீது நல்ல நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மந்திரி சபையில் தகராறு கிடையாது. அரசியல் குமுறலுக்கு இடமில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அமைதியாகவும், திறமையாகவும் ஆட்சி நடக்கிறது.
_மத்திய அமைச்சர் ஏ.எம்.தாமஸ் சாத்தூரில் பேசியது)

No comments: