Saturday 25 October 2014

காமராஜர் காலைமுதல் மாலை வரை…


காமராஜர் காலைமுதல் மாலை வரை…

சின்னஞ்சிறு வயதில் பெருந்தலைவருடன் வாழ்ந்த அந்த நினைவுகளுடன் ஜவகர், மோகன் ஆகியோர் கூறியதாவது:_
காலையில் தன்னை எத்தனை மணிக்கு எழுப்ப வேண்டும் என்று உதவியாளரிடம் சொல்லி விட்டுதான் காமராஜர் படுக்கைக்குச் செல்வார். படுக்கை அறையை உட்புறமாகப் பூட்டிக் கொள்வதில்லை. அவரது உதவியாளர் அந்த அறையை வெளிப்புறமாகப் பூட்டி விட்டுச் சென்று விடுவார்.
படுக்கையில் படுத்துக் கொண்டே புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு மிகவும் விருப்பம். இரவு 12 மணிக்கும் படுக்கச் சென்றாலும் புத்தகம் படித்து விட்டுத் தான் தூங்குவது அவர் வழக்கம். (ரயில் பிரயாணத்தின் போதும் இரவு நெடு நேரம் படுத்துக் கொண்டே புத்தகம் படிப்பது அவர் வழக்க மாம்.)
தூங்கும் போது குறட்டைச் சத்தம் பலமாக இருக்குமாம்.
காமராஜர் எழுப்பச் சொன்ன நேர த்தில் உதவியாளர் தாழ்ப் பாளைத் திறந்து கொண்டு அவர் அருகே சென்று அவரைத் தொட்டுத்தான் எழுப்ப வேண்டும்.
உடனே எழுந்து படுக்கையில் சம்மனமிட்டு அமர்ந்து கொள்வார். உதவியாளர் கொண்டு வரும் பில்டர் காபியைக் குடிப்பார். காலைச் செய்தித் தாள்கள் முழுவதையும் படுக்கையில் அமர்ந்தபடி படித்து முடித்து விடுவார்.
அதன்பின் கண்ணாடி முன் அமர்ந்து தானே முகச்சவரம் செய்து கொள்வார். இன்னொரு காபி அருந்தி விட்டு எதையாவது கொஞ்ச நேரம் படிப்பார். அப்போது அவரது நேர்முக உதவியாளர் அவர் அறைக்குச் சென்று அவரது அன்றைய அலுவல்கள் என்னென்ன என்பதை
நினைவூட்டுவார்.காலை 8.30க்கு மேல் 9 மணிக்குள் மாடியிலிருந்து இறங்கி கீழ்த்தளத்துக்கு வருவார். முன் அனுமதி பெற்று அவரைச் சந்திக்க வந்திருப்பவர்களை ஒவ் வொரு வராக அழைத்துப் பேசு வார். அதன் பின் முதலமைச்சரைக் காண்பதற் கென்றே (முன் அனுமதி மெறாமல்) வந்திருப்பவர்களையும் ஒவ்வொருவராக அழைத் துப் பேசுவார்.
அதன்பின் அவரது “கடித உதவி யாளர்” வந்து முதலமைச் சருக்கு வந்துள்ள கடிதங்களை ஒன்றொன்றாக எடுத்துப் படிப்பார். பதில் எழுத வேண்டிய கடிதங்களுக்கு என்ன பதில் எழுத வேண்டும் என்று காமராசர் சுருக்கமாகச் சொல்லுவார்.
வரவேற்பு அறையை விட்டு எழும் முன், தனது உதவியாளரை அழைத்து வெளியே மேலும் யாராவது காத்திருக்கிறார்களா என்று பார்க்கும்படி சொல்வார். பொது மக்கள் யாராவது வந்திருந்தால் அவர் களை ஒவ்வொரு வராகச் சந்திப்பார்.
அதன்பின் மாடிக்குச் சென்று விடுவார். குளித்து சலவை செய்த உடைகளை அணிந்து கொண்டு தயாராகி விடுவார். அவர் கையெழுத்து போட வேண்டிய கடிதங்கள் டைப் செய்யப்பட்டு தயாராக இருக்கும். அவற்றைப் படித்துப் பார்த்து, திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் திருத்தி மீண்டும் டைப் செய்து கையெழுத்து போடுவார்.
காலை 11 மணிக்கெல்லாம் கைக்குத்தல் அரிசிச் சாதம் சாப்பிடுவார்.
காலை 11.30க்கு கோட்டைக்குப் புறப் படுவார். கோட்டையிலும் பார்வை யாளர்கள் காத்திருந்தால் அவர்களை முதலில் சந்தித்து விடுவார்.
அதன்பின் அரசு அதிகாரிகள் அவரைச் சந்தித்து உரையாடுவார்கள். பகல் 1.30 வரை கோட்டையில் இருப்பார். அதன்பின் வீடு திரும்பி சற்றே ஓய்வு எடுப்பது உண்டு.
கோட்டையிலேயே பகல் 2 மணிக்கும் மேல் அலுவல் இருந்தால் 3 மணிக்கு 1 தோசை ஒரு காபி சாப்பிடுவார்.
மாலையிலும் காமராசரைப் பார்வை யாளர்கள் சந்திக்க முடியும். அதன்பின் மாலை நேர அலுவல்களில் கலந்து கொள்வார். அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே கலந்து கொள்வார். காலம் தவறு வது அவருக்குப் பிடிக்காது.
மாலையில் வீட்டிலிருந்து புறப்படும் முன் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டுதான் புறப்படுவார். இரவில் திரும்பி வந்த பிறகும் ஒரு குளியல் உண்டு. இரவில் 2 அல்லது 3 இட்லிகளும் தேங்காய் சட்னியுமே அவரது உணவு. அதன்பின் ஒரு டம்ளர் பால். அதில் ஈஸ்ட் பவுடரும் தேனும் கலந்திருக்கும். அவருக்கு “சுகர்” வந்த பின் பாலுக்குப் பதில் “காம்பிளான் “அருந்துவார்.
அதன்பின் தனது படுக்கை அறைக்குச் சென்று படிக்க ஆரம்பித்து விடுவார்.
காமராசரிடம் பென்சிலோ பேனாவோ கிடையாது. ஏதாவது கையெழுத்து போடும் போது உதவியாளரிடம் பேனா வாங்கி கையெழுத்து போடுவார். கைக் கடிகாரமோ பாக்கட் கடி காரமோ அவர் வைத்திருந்த தில்லை. தனது சட்டைப் பையில் பணமும் வைத்திருப்பதில்லை.
மாலையிலோ காலையிலோ வேறு அலுவல்கள் இல்லை என்றால் ராட்டையை எடுத்து நூல் நுற்பதும் உண்டு.
ஒரு நாளில் 3 அல்லது 4 முறை உடைகளை மாற்றுவார். பளிச் சென்று சலவை செய்யப்பட்ட கதர் வேஷ்டி சட்டை துண்டு அணிவார். பனியனோ அண்டர் வேரோ அணிவதில்லை.
தினசரி 3 அல்லது 4 முறை குளிப்பார். அப்போது களையும் ஆடைகளை அவரே மடித்து உரிய இடத்தில் வைத்து விடுவார். பின் அவை சலவைக்கும் போகும். வேஷ்டியோ சட்டையோ கிழியும் வரை அவற்றை உபயோகிப்பார். பெரும்பாலும் குளிர்ந்த நீரில் தான் குளியல். குளிர் காலத்தில் மட்டுமே வெதுவெதுப் பான இளம் வென்னீர்.
தலைக்கு எண்ணை தேய்த்துக் கொண்ட வழக்கமே இல்லை யாம்.
பலதரப்பட்ட புத்தகங்களை காமராசர் படிப்பதுண்டு. சில புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவதிலும் அவர் வல்லவர். அவரிடம் நிறைய புத்தகங்கள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது .

No comments: