காமராஜா் பின்னாளில் அரசியலில் மிகவும் புகழும் செல்வாக்கும் பெற்ற காலத்திலும் முண்டியடித்துக்கொண்டு தனக்காகப் பதவிகளைத் தேடியலைந்ததில்லை இந்த இயல்பு சின்ன வயதிலேயே அவரிடம் பொருந்தியிருந்தது என்பதற்கு பள்ளிப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சியொன்று சான்று பகர்கின்றது.
காமராஜா் கல்வி பயின்ற க்ஷத்திரய வித்தியாசாலையில் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியை விமர்சையாக்க் கொண்டாடுவார்கள்.
விநாய சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு மாணவரிடம்மு ஐந்து காசு வசூலிக்கப்படும்.
பூஜை முடிந்து பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தைக் கைநிறையப் பெற்றுக்கொள்வார்கள்.
பிரசாதத்துக்காக அந்த மாதிரிப் போராட்டம் நடத்துவது காமராஜருக்குப் பிடிக்கவில்லை. அதுமிகவும் கேவலமாகப்பட்டது.
அவசரப்படாமல் ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார். கடைசியாக மிச்சமிருந்த பிரசாதத்தில் மிகவும் குறைந்து அளவே அவருக்குக் கிடைத்தது.
மற்ற மாணவர்கள் கை நிறையப் பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்திருக்கும்போது அவர் மட்டும் மிகவும் குறைவாகப் பிரசாதம் வாங்கி வந்திருப்பது பற்றி வீட்டில் கேட்டார்கள்.
மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க் எனக்கு விருப்பமில்லை. பள்ளியில் எல்லா மாணவர்களிடம் ஐந்து காசு வசூலித்தவர்கள் ஒரே மாதிரியாகப் பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறுதான் என்றார் காமராஜர்.
No comments:
Post a Comment