Saturday 23 May 2015

பெண்கள் கல்விக்கு விளக்கேற்றிய - மாங்கா மச்சு - சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி

என்னதான் பொருளாதாரத்தில் முன்னேறினாலும், கல்விதான் நமக்கு சமூகத்தில் உயர்வும், மதிப்பும் தரும், கல்விதான் சமூக எழுச்சி தரும் என்பதை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே உணர்ந்து செயல்பட்டவர்கள் சான்றோர்கள். அதிலும் மெத்தப் படித்தவர்கள் என்று கருதிக் கொள்ளும் பிராமணப் பெண்கள் கல்வியில் பின் தங்கியிருந்த காலக் கட்டத்திலேயே பெண்கள் கல்விக்கு வித்திட்டு பாடுபட்டவர்கள் சான்றோர்கள். அதில் ஒரு சிறு எடுத்துக்காட்டு இது! விருதுநகரில் மாங்கா மச்சு என்று அனைவராலும் செல்லமாய் அழைக்கப்படும் சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டை கடந்து பிரிவினை பாராமல் அனைத்து சமூகத்து பெண்டிருக்கும் கல்விப் பணியாற்றி வருகிறது. என் தாயாரும் இதே பள்ளியில் கல்வி பயின்றவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த பள்ளி ஒன்றும் ஒரே நாளில் கட்டடமாய் எழும்பவுமில்லை, பெண்கள் வளர்ச்சியும் ஒரே நாளில் வரவில்லை! அதற்காக உழைத்த நாடார் மாமனிகள் இவர்கள்.




தி.ஆ.திருவாலய நாடார்

பெண்கள் வாழ்வில் கல்வி விளக்கேற்றிய விருதுநகர் கொடைவள்ளல். திரு.தி.அ.திருவாலவாய நாடாரின் கல்வி திருப் பணியும்,கருணை திருவுள்ளமும் கல்விக்காகத் தன் உடல்,பொருள்,ஆவி அத்தனையும் பெண் கல்விக்காக கொடுத்து,கல்விக் கூடம்உருவாகும் அளவிற்கு ஊர் வளர்ந்திட,நல்ல விதை விதைத்து, நல் உரமும் போட்டவர் தான். திருவாலவாய நாடார்.1910 ஆம் ஆண்டு, வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் தான் ஏராளம் சென்ற நூற்றாண்டில். அடுப்பூதும் பெண்ணிற்கு கல்வி எதற்கு ???என்று எகத்தாளம் பேசிய எத்தர்கள் நிரம்பிய காலம் அது.மாட்டு தொழுவத்திலும், காட்டு வேலைகளிலும், களங்கமில்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பெண்டிரின் பெருமைகள் எல்லாம் சிதறடித்து சிறுமையாக்கிய கொடுங் காலமது. இதை கண்டு மனம் பொறுக்காத மனிதருள் மாணிக்கராம் திருவாலவாய நாடார், பெண்களே இன் நாட்டின் கண்கள்,பெண் கல்வி பெற்றால் நாடே வளம் பெறும் என்ற கருத்தை தலை மேற்கொண்டு கல்வி கற்க அனுப்பாத கயவர்களை கண்டித்து வீடு வீடாக சென்று வீணர்களிடம் வாதிட்டு கல்லடியும், சொல்லடியும், பெற்று விளக்கேற்றும் பெண்களின் வாழ்வில் விளக்கேற்றியவர். ஊரில் ஒரு பெண்கள் பள்ளிக்கூடம் கட்ட கடுமையாக உழைத்தவர்.தன் மனைவி மங்கம்மாளின் இருப்பிடத்திலேயே பள்ளியமைக்க விரும்பி,பண்போடு கொடுத்த கொடையாளர். 

மங்காவின் மச்சி வீடு என்ற பெயரே இப்பொழுது மருவி "மாங்கா மச்சி" என்று அழைக்கப் படுகிறது. பாக்கு வியாபாரத்திலே கிடைத்த பங்கை பள்ளி கட்டிட நிதிக்கு தயங்காமல் அளித்தவர்.கட்டிடப் பணிக்கு வீதியில் கிடக்கின்ற கல்லையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்று சிறப்பு செய்தவர். இவ்வளவு சுமைகளின் நடுவே மலை போல எழுந்து,மலர் போல விருதுநகர் எங்கும் மணம் பரப்பி, அழியாப் புகழ் பெற்று,அரும் பெறும் திறமைகள் கொண்ட பெண்களை உலகமெங்கும் அனுப்பி,உன்னத வளர்ச்சியை அடைந்து,நூற்றாண்டுகளையும் தாண்டி, நூதனம் பல பெற்று விளங்குகிறது" சத்திரிய பெண்கள் பள்ளி" திருவாலவாய நாடாரின் கடும் உழைப்பாலும் கடும் முயற்சியாலும் கட்டப்பட்டது 3 குழந்தைகளில் தொடங்கியது சத்திரிய பெண்கள் பள்ளி இப்போது அது பல கிளைகளோடு 10000 குழந்தைகள் படிக்கும் deluxe வசதியுடன் நடக்கிறது விருதுநகரில் பல IAS,JUDGE என்று சாதனை பெண்களை உருவாக்கியுள்ளது பெண்கள் வாழ்வில் விளக்கேற்றியவர் அவருக்கு அந்த பள்ளியில் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. திருவாலவாய நாடார் புகழை போற்றி வணங்குவோம் காமராஜர்,சங்கரலிங்க நாடார் பிறந்த மண் விருதுநகர் இப்படி பட்ட நல்ல மனிதர்கள் வாழ்ந்ததினாலே விருதுநகர் மாவட்டம் இன்றளவும் படிப்பில் முதலிடம் வகிக்கிறது




பி.எஸ். சிதம்பர நாடார் 

பி.எஸ். சிதம்பர நாடார் அவர்கள்" விருதுநகர் பெண்களின் கல்வி தந்தை "என்று அழைக்கப்படுகிறார்.தன் வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை எல்லாம் விருதுநகர் கல்வி நிலையங்களுக்கு கணக்கில்லாமல் அள்ளிக் கொடுத்த வள்ளல் அவர். 1885 ஆம் ஆண்டு திரு. சிவனாண்டி நாடார் -பெரியாயி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். தன் 5 வது வயதில் தந்தையை இழந்து கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தார். மும்பையில் வேலை செய்து அதில் தொழில் தொடங்கி சிறப்பாக முன்னேறி கல்வியின் மேல் தனக்கிருந்த எல்லையில்லா ஆசையினால் கல்வி நிலையங்களில் தன் பெயரை கல்வி சேவையின் மூலம் பொன் எழுத்துக்களால் பதித்தார். 1921 முதல் 1934 வரை விருதுநகர் சத்திரிய பெண்கள் பள்ளியை நிர்வாகம் செய்தார்.மாணவிகளுக்கு கல்வியை ஊக்கத்துடன் கற்க பாடு பட்டார். இவரது காலம் விருதுநகர் கல்விக்கு" பொற்க்காலம்"என்று அழைக்கப் பட்டது.பள்ளி வளர்ச்சி நலனில் அக்கறை கொண்ட அன்னார் தன் சொத்துகள் பெரும் பகுதியை பள்ளிக்கு அளித்தார். பள்ளி குறைவில்லாமல் நன்கு நடை பெற "சென்னையில் உள்ள விருதுநகர் ஹிந்து நாடார் மேன்சன் " என்ற கட்டிடத்தை பள்ளிக்கு வழங்கி அதன் மூலம் கிடக்கும் வருமானத்தைக் கொண்டு பள்ளி சீராக நடை பெறசெய்தார். 

ஆண்கள் மேற்கல்வி பெற ஆண்கள் கல்லூரியை உருவாக்கினார். நம் மக்கள் கல்வி அறிவு மட்டுமல்லாமல் பொது அறிவு பெற பல நூலகங்களை ஏற்படுத்தினார். பெண்களுக்கான பிரசவ விடுதியை எற்ப்படுதினார்"ராவ் சாஹிப் " என்ற பட்டம் பெற்றார். 1975 ஆம் ஆண்டு இவரது கல்வி சேவையின் நினைவாக .விருதுநகரில் இவரது பெயரைக் கொண்டு "பி.எஸ். சிதம்பர நாடார் சீனியர் ஆங்கிலப் பள்ளி என்ற சி.பி.ஸ்.சி.பள்ளி ஆரம்பிக்கப் பட்டது. இன்று அப்பள்ளி தமிழ் நாட்டில் எங்கும் காண முடியாத அளவிற்கு உலக தரத்துடன் சிறப்பாக இயங்கி வருகிறது ! விருதை பெண்கல்விக்கு வித்திட்டு உரமூட்டி உயிரூட்டிய உத்தமரே !!! கல்விபணிக்கு கர்ணனாய் வழங்கியவரே!!! காலந்தவறாமை கடமையென்ற இரண்டையும் கண்ணெனக் கொண்ட காவலரே!!! மண்ணுலகு உள்ளளவும் மங்காது மணம் வீசும் மன்னா உம் புகழ் !!! மகிழ்வோடு பணிகிறோம் உம் பாதம் !!! மணம் மகிழ்ந்து வாழ்த்துகின்றோம் உம் நாமம். கல்விக்கு வித்திடுபவர்கள் நாடார்கள் என்பதை நிருபித்து காட்டியவர்களில் இந்த சிதம்பர நாடாரும் ஒருவர்

No comments: