நெல்லை மாவட்டத்தில் காமராஜர் சுற்றுப்பயணம் செய்யும்போது ஒரு கிராமத்து மக்கள் ஒன்றுகூடி காமராஜரின் காரை வழிமறித்திருக்கின்றனர். காமராஜர் கீழே இறங்கி என்ன விஷயம் எனக் கேட்டிருக்கிறார்.
"பக்கத்து ஊருக்கெல்லாம் மின்சாரம் வந்துவிட்டது. ஆனால், எங்கள் ஊருக்கு மட்டும் இன்னும் மின்சாரவசதி கிடைக்கவில்லை" என்று கூறியிருக்கின்றனர்.
காமராஜர் தன் அருகிலிருந்த மாவட்ட கலெக்டரைப் பார்த்து விபரம் கேட்டிருக்கிறார்.
"அதைப் பொருத்தும் போஸ்ட்டுக்குத் தேவையான சிமெண்ட் தூண்கள் இல்லை. அதனால் உடனே லைன் தர இயலவில்லை என்றிருக்கிறார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர், "பனங்கட்டையை ஊன்றி ஒயரை இழுங்கள். சிமிண்ட் போஸ்ட் வந்ததும் அதை மாத்திக்கிடலாம்" என்றிருக்கிறார்.
உடனே காமராஜர் அந்த மனிதரை அழைத்து தட்டிக்கொடுத்து "இவர் யோசனை சரியாக இருக்கிறது. இதை உடனே செய்யுங்கள்" என்று கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தாராம்.
No comments:
Post a Comment