Thursday 14 May 2015

பெருந்தலைவரும் புகையும்!!

சென்னையில் காமராஜருக்கு திரைப்பட கலைஞர்களும், அதிபர்களும் விழா நடத்தினர். விழா முடிவில் விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். விருந்து முடிந்ததும் காமராஜரும், ஜெமினிஅதிபர் வாசனும் பேசிக்கொண்டிருந்திருக்கின்
றனர். அப்போது வாசன் ஒரு சிகரெட்டை எடுத்து "இது உயர்தர சிகரெட். சாப்பிடுங்கள்" என்றிருக்கிறார்.

காமராஜர் அதை பார்க்க வாங்கியபோது ஒரு பத்திரிகையின் புகைப்படக்காரர் அதை புகைப்படம் எடுக்க வந்திருக்கிறார்.

உடனே காமராஜர் அவரைப் பார்த்து, "நான் சிகரெட் பிடிக்கறதைப் படம் எடுத்துப் பத்திரிகையில் போட்டால் பரபரப்பாக இருக்குமென்று படம் எடுக்க வர்றியா? இந்தப் படத்தைப் பத்திரிகையில் போட்டால் ஒருநாள் பரபரப்பாக இருக்கலாம். ஆனால், அதனுடைய விளைவு எப்படி இருக்கும் தெரியுமா?

ஒரு தந்தை தனது மகனிடம் சிகரெட் சாப்பிடாதே என்று கண்டித்தால், மகன் காமராஜரே சாப்பிடறாரென்று சொல்வான். அதுற்குதான் இந்தப் புகைப்படம் பயன்படும். பத்திரிகையில் ஒரு செய்தியோ படமோ வரும்போது ஒருநாள் பரபரப்போடு அது முடிந்துவிடப் போவதில்லை. அதற்குப் பிறகு ஏற்படும் விளைவை எண்ணிப் பார்க்க வேண்டும்" என்றாராம்.

No comments: