Wednesday 20 May 2015

நாடார்கள் சுயம்புகள்...

காமராஜர் முதல்வரானதால் தான் நாடார் சமுதாயம் தொழிலிலும் கல்வியிலும் முன்னுக்கு வந்தது என்று வரலாறு தெரியாமல் இணையத்தில் புலம்பித் திரியும் வரலாறு தெரியாத சிறு பிள்ளைகளுக்கான பதிவு இது. பெருந்தலைவரால் கல்வியில் வளர்ந்தது பிற சமூகங்களே அன்றி நாடார்கள் அல்ல. நாடார்கள் சுயம்பாக வளர்ந்தார்கள் என்பதை புரிய வைப்பதற்கான சிறு பதிவு இது. நேரமின்மை காரணமாக சிறு பதிவாகவே தரப்படுகிறது.

காமராஜர்  பிறந்தது 1903ஆம் ஆண்டு சூலை 15, அவர் முதல்வர் ஆனது 1954ஆம் ஆண்டு சித்திரை முதல் நாள் முதல்வரானார்.

1831ஆம் ஆண்டு விருதுநகர் அருப்புக்கோட்டை பாலையம்பட்டி நாடார்கள் உறவின்முறையால்  மதுரை கீழ மாசி வீதியில் நாடார்களுக்காக இடம் வாங்கப் பட்டது. இதுவே இப்பொழுது விருதுநகர் அருப்புக்கோட்டை பாலையம்பட்டி நாடார்கள் உறவின்முறை சங்கமாகவும், மொட்டை பிள்ளையார் கோவில் எனவும் அழைக்கப் படுகிறது.

1850களிலேயே விருதுநகர் நாடார்கள் ஏற்காடு, பட்டிவீரன்பட்டி போன்ற பகுதிகளில் எஸ்டேட்டுகளை நிறுவி காபி, ஏலக்காய் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தனர். காபி, சிக்கரி, ஏலக்காய் ஏற்றுமதியில் 19ஆம் நூற்றாண்டிலேயே விருதுநகர் நாடார்கள் முதலிடம் வகித்தனர்.

1885ல் விருதுநகரில் முதன் முதலாக விருதுநகர் நாடார் உறவின் முறையால் சத்திரிய வித்தியாசாலை பள்ளி உருவாக்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட போதே ஆங்கில வழிக் கல்வி பயிலும் பள்ளியாக தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே தொடங்கப் பட்ட முதல் ஆங்கில வழி கல்வி பயிலும் பள்ளி இதுவே ஆகும்.  இது நாடார் சங்கங்களின் முதல் பள்ளியுமாகும். இதில் கல்வி பயின்றவர்களே காமராசர், சௌந்திரபாண்டியன் நாடார் போன்றோர்.

1889ல் கமுதியில் சத்திரிய வித்தியாசாலை உருவாக்கப் பட்டது

1895ல் நாடார்களுக்காக சத்திரிய மகாசன சங்கம் தொடங்கப்பட்டது.

1910ல் அதுவே பின்னர் நாடார் மகாசன சங்கம் என பொறையார் இரத்தினசாமி நாடார் அவர்களால் தொடங்கப்பட்டது

1865 முதல் 1912 வரை வாழ்ந்து இராவ் பகதூர் இரத்தினசாமி நாடார் அவர்கள் அப்பொழுதே மிகப்பெரிய சாராய ஆலையின் சொந்தக்காரராக இருந்தார். இவரது முயற்சியேலேயே மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில் சேவைக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு அவரது இறப்புக்கு பிறகு 1926ல் சேவை தொடங்கியது.

1909ல் திருமங்கலத்தில் சத்திரிய வித்தியாசாலை துவக்கம்.

1912லேயே சிங்கப்பூரில் மிகப்பெரிய குத்தகைக்காரராகவும், பலசரக்கு வணிகராகவும், பெரும் தொழிலதிபராகவும் இருந்தவர் உ.ராமசாமி நாடார்.

1893ல் இருந்து 1953 வரை வாழ்ந்தவர் W.A.P சௌந்திரபாண்டியன் நாடார் அவர்கள். பட்டிவீரன்பட்டியைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலத்தில் நன்செய், புன்செய், தோட்ட, பணப்பயிர் வேளாண்மைகளை செளந்திரபாண்டியன் மேற்கொண்டிருந்தார். மேலும் மைசூர் மாநிலத்தில் இருந்த “அசோகா பண்ணை” என்னும் பண்ணையில் 1943ஆம் ஆண்டு தொடங்கி சில ஆண்டுகாலம் வேளாண்மை செய்தார். இப்பண்ணைகளில் புதிய புதிய வேளாண்மை உத்திகளைப் பயன்படுத்தி வேளாண்மை ஆய்விலும் பண்ணை மேலாண்மையிலும் ஈடுபட்டிருந்தார். அதன் காரணமாக
  1. மதுரை மாவட்ட கரும்பு விவசாயப் போட்டியில் ஐநூறு ரூபாய் பரிசை வென்றார்.
  2. கறம்பு நிலத்தில் கரும்பைப் பயிரிட்டதற்காக அரசின் பாராட்டுப் பதக்கம் பெற்றார்.
  3. 1951ஆம் ஆண்டில் சிறந்த நெல் வேளாண்மைக்கான பரிசு.
  4. 1953ஆம் ஆண்டில் சிறந்த நிலக்கடலை வேளாண்மைக்கான பரிசு.
வேளாண்மையின் நன்மைக்காக 1943ஆம் ஆண்டில் தென்னிந்திய ஏல விவசாயிகள் சங்கத்தை நிறுவி, அதன் தலைவராக 1943ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டில் தனது மரணம் வரை பதவி வகித்தார். 1941ஆம் ஆண்டில் காஃபி வாரியத்தின் (Coffee Board) உறுப்பினராக இருந்தார்.

1917ல் உசிலம்பட்டியில் பழனிக்குமார் நாடார் முயற்சியில் கே.கே.பி.டி என்ற பிஸ்கெட் கம்பெணி தொடங்கப்பட்டது. இதுவே சில ஆன்டுகளில் பெர்ரீஸ் பிஸ்கெட ஆனது. 1930லேயே சிறந்த குழந்தை உணவுக்கான பஞ்சாயத்து போர்டு விருதையும், ராணுவ ஆர்டரையும் பெற்றனர் இவர்கள்.

1919ஆம் ஆண்டு சூ.ஆ.முத்து நாடார் அவர்களால் நாடார் குலமித்திரன் மாதாந்திர பத்திரிக்கை தொடங்கப்பட்டது.

1920களிலேயே மார்ஷல் நேசமணி அய்யா போன்றோர் வக்கீலாக பதிவு செய்திருந்து வக்கீல் தொழில் பார்த்து வந்தனர்.

1921ல் நாடார் வங்கி தொடங்கப்பட்டது. இதுவே பின்னாளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது.

1923ல் சிவகாசி அய்யநாடார் அவர்களின் தீப்பெட்டி தொழிற்சாலை துவக்கம்.

1930லேயே மதுரையில் நாடாரான டாக்டர் வடமலையான் அவர்கள் மருத்துவமனை தொடங்கிவிட்டார்.

1942ல் விருதுநகர் V.V. வண்ணிய பெருமாள் அவர்களின் எண்ணை மில் துவக்கம். இதிலிருந்தே பின்னர் ஆனந்தம் நல்லென்ணை, இதயம் நல்லெண்ணை போன்ற நிறுவனங்கள் தொடங்கின.

1942ல் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் "தமிழன்" என்ற வார இதழை தொடங்கினார்.

1800களிலேயே சங்க கட்டிடங்கள்,

1800களிலேயே சொந்த முயற்சியில் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள்,

1900களேலே ஏற்றுமதி,

1919லேயே பத்திரிக்கைகள்,


1920களிலேயே சொந்த முயற்சியில் வங்கி,

1920களிலேயே வக்கீல்,

1930களிலேயே மருத்துவமனைகள்,

1940களில் தொழிற் புரட்சி

என வாழ்ந்து கொன்டிருந்த நாடார் சமுதாயமா காமராஜரால் உயர்வு பெற்றது? வரலாறு தெரியாதவர்கள் பதிவுகள் போடாமல் இருப்பது நன்று.

1 comment:

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் பாணர்
____________________________________

பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

வில்லவர் குலங்கள்

1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்

வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

4. மீனவர்

பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

வில்லவர் பட்டங்கள்
______________________________________

வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

1. சேர வம்சம்.
2. சோழ வம்சம்
3. பாண்டியன் வம்சம்

அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

முக்கியத்துவத்தின் ஒழுங்கு

1. சேர இராச்சியம்

வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்

2. பாண்டியன் பேரரசு

வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்

3. சோழப் பேரரசு

வானவர்
வில்லவர்
மலையர்

பாணா மற்றும் மீனா
_____________________________________

வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

அசாம்

சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

மஹாபலி

பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

ஹிரண்யகர்பா சடங்கு

வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.