1954ல் முதல் முதலில் பெருந்தலைவர் இதே நாளில்தான் (13-04-1954) முதலமைச்சராக பதவியேற்றார். சிலருடைய பிறப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் ,சிலருடைய பிறப்பு மற்றயவர்களுக்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்கும் .இதில் இரண்டுக்கும் சொந்தக்காரார் காமராஜர் எனும் பெருந்தலைவர் .இன்னொருவர் சொல்லிக்கொடுத்து வந்த அறிவுக்கும் சுயமான அறிவுக்கும் உழல வித்தியாசத்தை காமராஜரை பார்க்கும் போது உணர முடியும் .
காமராஜர் பற்றி படிக்க படிக்க சுவையாக இருக்கும் .அவரை பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறேன் .
சினிமா என்றால் காமராஜருக்கு பிடிக்காதாம் .அதனால் தான் நிஜமாகவே நாம் சினிமாவில் பார்த்து மட்டுமே வியக்கும் போலி நாயகர்கள் போல அல்லாது நிஜத்தில் நாயகனாக வாழ்ந்திருக்கிறார் .
காமராஜர் பற்றி படிக்க படிக்க சுவையாக இருக்கும் .அவரை பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறேன் .
சினிமா என்றால் காமராஜருக்கு பிடிக்காதாம் .அதனால் தான் நிஜமாகவே நாம் சினிமாவில் பார்த்து மட்டுமே வியக்கும் போலி நாயகர்கள் போல அல்லாது நிஜத்தில் நாயகனாக வாழ்ந்திருக்கிறார் .
- படிப்பு ஏறாததன் காரணமாக 6 ஆம் வகுப்பிலேயே தனது படிப்பை நிறுத்தி விட்டார் .
- ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதல் அமைச்சர் பதவியேற்ற அவர் தான் தலை சிறந்த தலைமைத்துவத்தை 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு வழங்கினார் .
- பலரிடம் ஆலோசனை கேட்கும் நேரு ,இறுதியில் காமராஜர் சொல்வதையே கேட்பார் .
- காமராஜர் பட்டபடிப்பு படிக்காதவராக இருக்கலாம் .ஆனால் அவரை சுற்றி எப்போதும் படித்த மேதைகள் மொயத்திருப்பார்கள் .
- அவரது காலகட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை தமிழ் நாடு பெற்றது .
- தான் முதல் அமைச்சராக இருந்த போது வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்பு சலுகைகள் தராதவர் .
- ஏழை குழந்தைகளும் கல்வி கற்க வரவேண்டுமென்று மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார் .
- எழுத்தறிவு இன்மையை போக்க 11 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தினார் .
- எல்லா பள்ளி குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்கினார் .
- தமிழுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று கொடுத்தார் .
- தமிழின் அனைத்து விதமான புத்தகங்களையும் வெளியிட்டார் .
- நீதி மன்றம் அரச அலுவலகம் அனைத்திலும் தமிழை கொண்டுவந்தார் .
- மூத்த தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்ககூடாது,பதவி விலகி கட்சி நலனுக்காக செயல்ப்பட வேண்டும் என்று கூறியதோடு நிற்காமல் தானும் பதவி விலகி முன் உதாரணமாக இருந்தார் .
இரண்டு முறை பிரதமராகும் வாய்ப்பிருந்தும் இந்திரா காந்தி ,சாச்திரியையே பிரதமராக்கினார் . நேரு இறந்த பின்னர் இந்திராகாந்தியை பிரதமராக்கும் வேலையை மிக திறமையாக செய்து முடித்தார் .
அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!!!!
No comments:
Post a Comment