தமிழ்த் தாயார் ஈன்றெடுத்த காமராஜர்
தாய் நாட்டைக் காக்க வந்த பீமராஜர்
அமிழ்தான தமிழ் மொழிக்கு உண்மை ராஜர்
அகிலமெல்லாம் தமிழ் கொணடு சென்ற ராஜர்
வட புலத்தில் காங்கிரஸின் தலைவராகி
வாயாடி நின்ற தன்புத் தமிழிலேதான்
கடல் கடந்து ரஷ்ய நாட்டில் நின்ற போதும்
கனித் தமிழே பேசி நின்ற தனித் தமிழர்
தான் பெறவே இயலாமல் போன கல்வி
தமிழ் ஏழை அனைவருக்கும் தந்த தெய்வம்
ஊன் உடம்பு உயிர் தந்த தாய்க்குக் கூட்
உண்மைக்குப் புறம்பாக உதவாத் தேவன்
ஏன் என்று எதனையுமே கேட்டுக் கேட்டு
ஏழைகட்காய்ச் செய்து நின்ற மாமனிதன்
வான் சென்றான் என்கின்றார் இல்லையில்லை
வாழ்கின்றான் எம்மோடு இன்றும் இங்கே
ஏழையெனப் பிறந்தான் தான் உயர்ந்த போதும்
ஏழையென்றே வாழ்ந்தான் காண் தோல்வி தந்தார்
கோழையென அழுதானா இல்லை என்னைக்
கூப்பிடுங்கள் என்றெல்லாம் குமுறினானா
வாழையடி வாழையென காந்தி பேரை
வாழ்விக்க வந்தவன் காண் செல்வனான்
கூழையென நின்றார்க்கு கல்வி யெனும்
கொடை அளித்தான் அதனாலே செல்வனான்
ஏழையென்று சொல்லாதீர் அவனை எங்கும்
ஏற்றங்கள் அவனாலே பெற்ற நீவிர்
வாழையடி வாழையென கல்வி இன்று
வந்ததுங்கள் வீட்டிற்குள் அவனால்ன்றோ
பேழையென நெய்வேலி திருச்சியிலே
பேர் சொல்லும் மிகுமின் நிறுவனம் தான்
வாழ்வதற்கு அனைவருக்கும் உணவளிக்கும்
வயற்காட்டுத் தோழருக்காய் அணைகள் தந்தான்
ஊழை வெல்ல முடியாராய் ஒடுக்கப் பட்டோர்
ஒய்ந்திருந்த நேரத்தில் எழுந்து வந்தான்
கோழை மனம் விட்டவரும் கொடிகள் ஏந்தி
கொள்கை கண்டு வெற்றி பெற வழிகள் செய்தான்
ஏழையல்ல செல்வன் அவன் என்றே சொல்வேன்
ஏனென்றால் செழுங் கிளையைத் தாங்கி நின்றான்
நாளை வரும் இளைஞ்ருக்கு இந்தச் செய்தி
நல்கி நிற்பீர் ந்ன்றி கொல்லா நற்றமிழீர்
-கவிஞர் நெல்லை கண்ணன்
No comments:
Post a Comment