Monday 27 April 2015

பெருந்தலைவர் - சட்டம் சனங்களுக்கே

சட்டங்களை இயற்றுவதும், அந்த சட்டங்களைத் தேவைப்பட்டால் நிறைவேற்றுமவதும், மாற்றவதும் அரசாங்கத்தின் அன்றாடச் செயல்கள்தான்.
ஆட்சியாளர்களின் தேவைக்கேற்றவாறு சட்டங்கள் போடுவதும் உத்தரவுகள் பிறப்பிப்பதும் ஜனநாயகத்தைப் படுகுழிக்குள் தள்ளும் முயற்சியாகும்.

சட்டப்படிதான் நாடு செல்லவேண்டும் என்றாலும் சில நேரங்களில் சனங்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கேற்ப சமுதாய மாற்றங்களுக்கேற்ப சட்டங்களை அப்ப்டியே நடைமுறைப்ப்தடுத்துவதும் சரியல்ல.
ஒரு முறை தமிழக அரசு பொட்டலமாகப் பயன்படுத்தும் பொருள்களுக்கு வரி என்று அறிவித்தது. உடனே மிகச் சிறிய வணிகர்கள் காமராஜர் அவர்களைச் சந்தித்து ”சினிமா தியேட்டர்களில் விற்கும் பகோடா, சுண்டலுக்கும் வரி கேட்கிறார்கள்.” என்று முறையிட்டனர்.
அன்றே தலைவர் அத்தகைய தனி வரியை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
ஏழைகளைப் பாதிக்கும்படி ஒரு வரி உருவாகக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால்தான் அவரை ஏழைப்பங்காளன் என்றழைத்தார்கள் மக்கள்.

ஒரு முறை மாணவர் ஒருவர் கோட்டைக்குச் சென்று தலைவரைப் பார்த்து அழுது முறையிட்டார்.
அவன் ஒரு பி.எஸ்.ஸி. பட்டதாரி மூன்றாமாண்டு மாணவன். வாங்கிக் கொண்டிருந்த ஸகாலர்ஷிப் நிறுத்தப்பட்டதால் காமராஜ் அவர்களை நேரில் பார்த்து முறையிடவே வந்துள்ளான்.
தலைவரும் அம்மாணவரை அழைத்து அன்போடும் அனுபவத்தோடும் அவனது குறையைக் கேட்டறிந்தார்.
அவனது குறை இதுதான்!
அவன் பிற்படுத்தப்பட்டவருக்கான அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி இருக்கிறான். இரண்டு ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டவருக்கான ஸ்காளர்ஷிப்பையும் வாங்கியிருக்கிறான்.
திடீரென அரசு, அவன் பிற்படுத்தப்பட்ட மாணவர் இல்லை என்றும் எனவே இதுவரை அரசிடம் பெற்ற ஸகாலர்ஷிப் பணத்தை திரும்ப கட்ட வேண்டும் என்றும் அவ்வாறு கட்டினால் மட்டுமே மூன்றாமாண்டுத் தேர்வுக்கு உரிய நுழைவுச் சீட்டு கொடுக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் உடனே சம்ம்பந்தப்பட்ட துறை அதிகார்களை அழைத்து விசாரணை நடத்தினார்.
”அவன் பிறந்த சாதியில் சில உட்பிரிவுகள் உள்ளன என்றும், அவன் பெற்றிருக்கும் சான்றிதழ்படி அவனுக்கு ஸகாலர்ஷப் கிடையாது’ என்றும் அலுவலர்கள் கூறிவிட்டனர்.
”அது சரி. அப்படியானால் அவனுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கியது அலுவலர்களின் தவறா? வாங்கியவன் தவறா? நாமே கவனமின்றி வழங்கிவிட்டு உடனே கட்டு என்றால் எப்படி முடியும்ண்ணேன். படிப்பு பாழாகக் கூடாதுண்ணேன்!” என்று கூறி அந்த அதிகாரிகளைக் கொண்டு உடனே தொடர்ந்து அம்மாணவனுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க உதவினார் அவர்.
சட்டம் சனங்களுக்கு என்பதில் கவனமாக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தலைவர் அவர்களின் இத்தகைய பாடங்கள் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பாடமாகும்.

No comments: