Thursday 23 April 2015

ஆலயப் பிரவேசமும் அறநிலையத்துறை அமைச்சராக தாழ்த்தப்பட்டவரும்



தாழ்த்தப்பட்டவர்களைத் தீண்டாதவர்ளாக்க் கருதி, ஆலயங்களில் நுழைவதையே அனுமதிக்காத காலத்தில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டவர்களும் நாடார்களும் நுழையக் கூடாதென்று சட்டம் இருந்தது. சட்டம் மட்டுமல்ல, சமுதாயத்தின் மேல்தட்டு மக்களிடத்திலும், தாழ்த்தப்பட்டவர்களையும், நாடார்களையும் கோயிலில் அனுமதிப்பை விரும்பாத எண்ணம்தான் தழைத்தோங்கி இருந்தது. இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கும், மக்களின் மனங்களை தூய்மைப்படுத்தவும் மதுரை ஏ. வைத்தியநாத அய்யர் தலைமையில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள், நாடார்கள் என அனைவரும் கோயிலில் நுழைவதற்கு வழிவகை காணும் சட்டம் இயற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இச்சட்டம் வருவது காலதாமதமாகிக் கொண்டே இருந்த நிலையில், 1939-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் நாள் தாழ்த்தப்பட்டவர்களும், நாடார்களும் கோயிலில் நுழையும் போராட்டம் செய்வார்கள் என்று மதுரை வைத்திய நாத அய்யர் அறிவித்தார்.

ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு எதிர்ப்பான சிலர், மதுரை மீனாட்சி கோயிலுக்கு நுழைந்தால் மிரட்டினர். மதுரையில் இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஒரு பதில் அறிக்கை வெளியிட்டு நாங்கள் அரிசன ஆலயப் பிரவேசத்தை ஆதரிக்கிறோம். நாங்களும் உடன் வருவோம் வேண்டுமானால் தடுத்துப் பாருங்கள் என்று ஆதரவுக்கரம் நீட்டினார். கூறியபடியே, குறிப்பிட்ட நாளில் அம்மன் சன்னதி வாசல் முற் தன் ஆட்களையும் ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு ஆதரவாக அனுப்பியும் வைத்தார். வைத்திய நாதர் தலைமையில் ஆலய நுழைவுப் போராட்டக்குழு வந்தபோது, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஆட்கள்மட்டுமே அங்கிருந்தனர். எதிர்ப்பாளர்கள் யாரும் இல்லை. அந்த ஆலய நுழைவுப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த பல தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவராக சமுதாயப் பணியிலும், தேசப்பணியலும் தீவிரமாக ஈடுபட்ட, 1951-ல் காமராஜர் அமைச்சரவையில் இருந்த கக்கனும் கலந்து கொண்டார். ஆலய நுழைவுப் போராட்டமும் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன் பின்னர், தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களில் நுழைவதற்கு வழி செய்திடும்சட்டத்தை அன்றைய ராஜாஜி அரசு வெளியிட்டது. கோயில் நுழைவுச்சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னரும், தாழ்த்தப்பட்டவர்கள் முழுமையாக்க்கோயிலில் அனுமதிக்கப்படாத்து சில ஆலயங்களில் தொடர்ந்து நடைபெற்றுத்தான் வந்தது.

இந்நிலையில், 1954-ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப்பொறுப்பேற்ற காமராஜர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை பரமேஸ்வரனை நியமித்தார். ஆலயங்களின் நுழைவிற்கே அல்ல்ல்பட்டு அஞ்சிய மக்களின் தாழ்வு நிலைக்கு விடை கொடுக்கவும், மக்கள் அனைவரும் சம்ம் என்பதை உறுதிப் படுத்தும் வகையிலும் பரமேஸ்வரனுக்கு அளிக்கப்பட்ட இந்து அறநிலையத்துறையின் பொறுப்பின் மூலம் எடுத்துரைத்தார்.

இதன் வழியாக சமூக நீதிக்கான தனது உணர்வுகளைத் தேவையான நேரத்தில் செயலில் வெளிக்காட்டிய உத்தமர் தான் காமராஜர்.

மேடையில் சமூக நீதியை முழங்கிவிட்டு திரைமறைவில் தமது சாதியை வளர்த்துக்கொள்ள விரும்புவோரையே இன்று காண முடிகிறது. “கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ளாரடி -கிளியே” நாளில் மறப்பாரடி” என்று பாரதியார் பழித்துரைத்த வாய்ச்சொல் வீர்ர்கள் பேசும் சமூக நீதி போலியானது. காமராஜர் சமூக நீதியைத் தமது உயிர் மூச்சான கொள்கையாகவே கருதிக் கடையனுக்கும் கடைத்தேற்றம் கிடைத்திட உழைத்தார். இதனை வரலாறு என்றென்றும் எடுத்துரைக்கும்.

No comments: