Wednesday 28 January 2015

தமிழரிடம் தமிழ் பெயர்கள் படும் பாடு!!!

இன்று தொலைக்காட்சியில் ஐயா படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பிரகாச்ராஜ் ஒரு துணை நடிகரிடம் பேசும் போது கூறுகிறார்:

பிரகாச்ராஜ்: டேய் என் ஆசை என்னான்னு தெரியுமா...?? எம்.எல்.ஏ ஆகனும், மந்திரி ஆகனும், சி.எம் ஆகனும், பி.எம் ஆகனும் அப்புறமா சனாதிபதி ஆகனும்!!

துணை நடிகர்: அண்ணே கருப்பசாமின்னு பெயர வச்சிகிட்டு எப்படின்னே சனாதிபதி ஆவீங்க??

பிரகாச்ராஜ்: நான் டெல்லிக்கு போனவுடனே கருப்பசாமிங்கிற பேரை கருப்பு சிங் னு மாத்திக்கிடுவேன்!!!






இந்த படத்தின் இயக்குனர் ஒரு பச்சை தமிழர். நாடாரினத்தை சேர்ந்த அரி அவர்கள்!! அட நொன்னைகளா "கருப்பசாமி"ங்கிற தமிழ் பேர்ல என்னையா இழிவை கண்டீங்க!! இந்த படத்தின் இயக்குனரின் குலதெய்வமும் ஒரு கருப்பசாமியோ அல்லது முனியசாமியாகவோதான் இருக்க வேண்டும். ஏன் இவர் தகப்பனார் பெயரே கூட அப்படி இருக்கலாம்!! பச்சை தமிழனான இவரை போன்றவர்களே நம் தமிழ் பெயர்களையும், குலதெய்வங்களையும் இவ்வாறு இழிவு படுத்தினால் எப்படி வடுகனும், ஆரியனும் நம்மை மதிப்பான்.

என் ஏழு தலைமுறை முன்னோரான தோலாண்டி (தொல்லைகாதாண்டி நாடார்) அவர்களின் பெயரை என் முகநூலில் மட்டுமல்ல என் அலுவலக தொடர்பு மின்னஞ்சலிலும் கூட அதே பெயரைதான் பயன் படுத்துகிறேன். வட நாட்டுகாரனுக்கு எங்கேயா கருப்பசாமிக்கும், குப்புசாமிக்கும் அர்த்தம் தெரிய போகிறது. வீரியம் காரியத்துலதான் இருக்கே ஒழிய பேரில் இல்லை நொன்னைகளா!!!

No comments: