விருதுநகர் என்றால் வணிகம் என்று பொருள் கொள்ளும் அளவிற்கு புகழ் பெற்றது.
"Virudhunagar Produces Nothing But Controls Everything" என்று சிறப்புடன் கூறப்படுகிறது.
“பொதியை எந்தி வண்டியிடிலே, பொள்ளாச்சி சந்தையிலே
“பொதியை எந்தி வண்டியிடிலே, பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்குச் செல்லக்கண்ணு – நீயும்
வித்துப் போட்டுப் பணத்தை யெண்ணு செல்லக்கண்ணு”
என்று கவிஞர் மருதகாசி பாடியுள்ளார்.அரசியலில் காமராசரின் பங்கு மகத்தானது. விடுதலைப் போரிலும் பின் தமிழகத்தை உருவாக்குவதிலும் காமராசர் வழிகாட்டியாக இருந்தார். காமராசரின் ஆட்சி “பொற்காலம்” என்று கூறலாம்.
இலவச ஆங்கில வழிக்கல்வி அனைவருக்கும் வேறுபாடின்றி அளித்த முதல் பள்ளி 1889ஆம் ஆண்டு விருதுநகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீருடையை முதலில் விருதுநகர் பள்ளிகள் தான் கடைபிடித்தன.
மகமை, மற்றும் உறவின்முறை மூலம் பள்ளிகள், கல்லூரிகள் இயக்குவதில் விருதுநகர் புகழ்பெற்றது என்று கூறலாம்.
ஆன்மீகத்தில் ஆலயவழிபாடு மட்டும் அல்லாமல் பல சங்கங்கள் வைத்து வேதம், கீதை புராணங்கள், தேவாரம் என அனைத்தையும் மக்கள் படிக்கும் வண்ணம் செய்வதில் பெருமை வாய்ந்தவர்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பங்குகொள்வதைக் காணலாம்.
தமிழகத்தின் “பொற்காலம்” என்று கருதப்பட்ட முன்னால் முதலமைச்சர் காமராசரின் ஆட்சியை யாரும் மறக்க முடியாது. கருப்பு காந்தி, தென்னாட்டு காந்தி என்று போற்றப்படும் கர்ம வீரர் காமராசரை தந்தது விருதுநகர். இன்று விருதுநகர் என்றால் காமராசர் பிறந்த மண் என்று உலகெங்கும் விருதுநகரின் புகழ் பரவியுள்ளது. கல்வி, தொழில், நீர் நிலைகள், மின்சாரம் என்று தமிழகத்தின் அனைத்து துறையிலும் புரட்சி செய்த காமராசர் தன் குடும்பம், தன் மக்கள், தன் ஊர் என்று பாராத தன்னலமற்ற எளிமையான நாடு போற்றும் "KingMaker“ ஆவார்.
விருதுநகரில் உள்ள நாடார் சமுகத்தினரை சாணான் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட காலம். பாண்டியர்களின் வீழ்ச்சியில் இருந்து நாடார்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். அக்காலத்தில் நாடார்கள் “கோவிலுக்குள்” செல்ல அனுமதி இல்லை.
ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயரின் முற்போக்கும்,சிந்தனையும், அப்போது அவர்களுடன் விருதுநகர் நாடார்களுக்கு ஏற்பட்ட வணிக வளர்ச்சியும் படித்த விருதுநகர் நாடார்களிடையே ஆங்கிலேயர் பால் ஈர்ப்பு இருந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சியால் நாம் வளர்ச்சி அடையலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. அப்போது ஆங்கிலேயர் ஆட்சி செய்த பிற நாடுகளில் வணிகம் செய்ய ஆரம்பித்தனர் விருதுநகர் மக்கள். இதனால் விருதுநகரில் ஆங்கிலேயரை ஆதரிக்கும், முற்போக்கு சிந்தனைகளையும் கொண்ட “JusticeParty” சக்தி வாய்ந்ததாக இருந்தது. “JusticeParty” யின் பங்கு விருதுநகர் அரசியலில் முக்கியமானது. “JusticeParty” யினைச் சேர்ந்தோர் விருதுநகர் மக்களின் வளர்ச்சிக்காகவும் நகர் வளர்ச்சிக்காகவும் பெரிதும் பாடுபட்டனர்.
“JusticeParty” யின் தூண் போன்று இருந்த V.V.RamasamyNadar, M.S.P.SenthikumaraNadar மற்றும் M.S.PeriyasamyNadar, M.S.P.Rajah போன்றோரின் சேவை மகத்தானது.
விருதுநகர் மக்களின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்தவர் காமராசர். வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் காந்திஜியின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.காமராசரின் முயற்சியால் விருதுநகரில் விடுதலைப்போராட்டங்கள் நடந்தது. “JusticeParty” யின் கோட்டையாக இருந்த விருதுநகர் காமராசரின், காங்கிரஸ் கீழ் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டது. விருதுநகரில் சில தீவிரவாத விடுதலைப் போராட்டமும் நடந்துள்ளது.
பிரசுரங்களை வெளியிடுதல், சட்டமறுப்பு இயக்கம், கொடி போராட்டம்,சத்தியாகிரகப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் என்று பல விடுதலைப் போராட்டங்களில் கலந்து சிறை சென்றனர் விருதுநகர் மக்கள். K.Kamaraj, A.S.S.S.SankarapandiyaNadar, MurugaDhanuskodi, Gurusamy, MuthusamyAasan போன்றோர்கள் விடுதலை வேட்கையில் மக்களை வழி நடத்திச்சென்றனர். அந்தப் புனிதப் போரில் வெற்றியும் கண்டனர்.
No comments:
Post a Comment