Friday 30 January 2015

சூர்ய வம்சம் (பாகம்-2)

வேலையில்லா இளைஞன் ஒருவன் "ஆபீஸ் பாய்" வேலைக்காக ஒரு நிறுவனத்திற்க்கு நேர்முகத் தேர்வுக்கு செல்கிறான். அங்கு எல்லா தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற பின் தரையை சுத்தம் பண்ண சொல்கின்றனர். அதிலும் சிறப்பாக செய்து தேர்ச்சி பெறுகிறான்.  நிறுவன அதிகாரி "தம்பி நீங்கள் தேர்ச்சி பெற்று விட்டீர்கள், உங்கள் இ-மெயில் ஐடியை குடுங்கள், விண்ண்ப்பம் அனுப்புகிறேன், பூர்த்தி செய்து வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள்" என்கிறார். அந்த இளைஞன் "ஐயா, என்னிடம் இ-மெயில் ஐடியெல்லாம் இல்லை" என்கிறான். அதற்கு அதிகாரி இ-மெயில் ஐடி இல்லையென்றால் வேலை கிடைக்காது என்கிறார்.

தன்னை தானே நொந்து கொண்டே செல்கிறான் அந்த ஏழை இளைஞன்.  பையில் 20 ரூபாய் மட்டுமே இருந்தது.

போகிற வழியில் ஒரு பெரிய காய்கறி மொத்தவிலைக் கடையை பார்த்தவன் 20 ரூபாய்க்கு ஒரு கூடை தக்காளி பழம் வாங்குகிறான். அதை கொண்டு போய் தெருவில் விற்கிறான். அவனால் அதை இரண்டு மணி நேரத்தில் அன்று 40 ரூபாய்க்கு விற்க முடிகிறது! அன்றே மீண்டும் மீண்டும் மேலும் இரண்டு முறை விற்பனை செய்கிறான். வீட்டுக்கு போகும் பொழுது அவனிட்ம் ஏற்கனவே இருந்த 20 ரூபாயுடன் 60 ரூபாய் சேர்த்து 80 ரூபாய் கொன்டு செல்கிறான். தன்னால் இப்படி பிழைக்க முடியும் என்று தெரிந்து கொண்ட அவன், தினமும் இது போல் விற்பனை செய்து விட்டு தன் வீட்டுக்கு தாமதமாக செல்கிறான். இப்படியே அவன் பணம் தினமும் இரண்டு மடங்கு, மூன்று மடங்காகிறது!! சிறிது காலம் கழித்து ஒரு டிவிஎஸ் ஹெவி டியூட்டி ஒன்று வாங்கி சப்ளை செய்கிறான். காலம் செல்ல செல்ல ஹெவி டியூட்டி, குட்டி யானை ஆகிறது, குட்டி யானை டிரக் ஆகிறது. பின்னர் சீக்கிரமே "சூர்ய வம்சம் சரத்குமார்" போல் நிறைய வண்டிகளுடன் பெரிய வியாபாரி ஆகிறான்.




ஐந்து வருடத்தில் அந்த ஊரின் மிகப் பெரிய பணக்கார மொத்த வியாபாரி ஆகிவிடுகிறான். குடும்பம் குட்டி என கல்யாணம் செய்து கொண்டு வாழ்கிறான். தனக்கு பின்னர் தன் குடும்பத்தின் பாதுகாப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கருதுகிறான். தன் குடும்பத்து ஆயுள் காப்பீடு செய்ய முடிவு செய்கிறான். ஆயுள் காப்பீடு முகவர் ஒருவரை தொலைபேசியில் அழைக்கிறான். அவரை நேரில் அழைத்து நல்ல காப்பிடு திட்டம் ஒன்றை தேர்ந்து எடுத்துவிட்டு அவரை செயல் படுத்த கூறுகிறான். கடைசியில் முகவர் அவனது இ-மெயில் ஐடியை கேட்கிறார். அவன் தன்னிடம் இ-மெயில் ஐடி இல்லை என்கிறான்! 

அந்த முகவர் அவனை ஆச்சர்யமாக பார்த்துவிட்டு, ஒரு இ-மெயில் ஐடி இல்லாமல் இவ்வளவு பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி இருக்கிறீர்கள் என்கிறார்! மேலும் அவர்  "கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் ஒரு இ-மெயில் ஐடி மட்டும் வைத்து இருந்தால் என்னவாகி இருப்பீர்கள்??! என்கிறார். 

அந்த இளைஞன் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு "ஆபீஸ் பாயாகி இருப்பேன்" என்கிறான்.

இன்று நடக்காத ஒரு விசயத்துக்காக வருந்தாதீர்கள். நாளை அதை விட பெரிய வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கலாம்!!!

கருமூலம்: Laughing Colours 
மொழிபெயர்ப்பு: குமரன் ந.பா தோலாண்டி.

No comments: