Sunday 19 July 2015

பெருந்தலைவரும் - காரும்


பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பயன்படுத்தியது கருப்பு நிற செவர்லே கார். தொழிலதிபர் டிவிஎஸ். சுந்தரம் அய்யங்காரால் வழங்கப்பட்டது. இப்போதைய அரசியல்வாதிகள், பதவிக்காலம் முடிந்தும் அரசு வீடு, காரை திருப்பி தராமல் இழுத்தடிக்கும் வேளையில், முதல்வராக பதவி வகித்தபோது அரசு காரை பயன்படுத்தாமல் இந்த காரையே பயன்படுத்தினார்.

1975ம் ஆண்டு பெருந்தலைவர் மறைந்தார். அதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக காமராஜர் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்தனர். அதில், இந்த செவர்லே காரும் அடக்கம். மேலும், காரை விற்பதற்காக ரூ.2,000 முன்பணமாகவும் பெற்றுவிட்டனர். ஆனால், கவியரசு கண்ணதாசன் வெளியிட்ட கவிதையால் அந்த காரை திரும்பவும் பெற்றனர். மேலும், முன்பணத்தை திருப்பி கொடுத்துவிட்டனர் அப்போதைய காங்கிரஸ் நிர்வாகிகள்.

அவ்வாறு பெறப்பட்ட அந்த கார் தற்போது பராமரிப்பு இல்லாமல் இருப்பது காமராஜரை அவமதிப்பது போலாகும்! பெருந்தலைவரின் விசுவாசிகள் ஒருங்கிணைந்தால் எதாவது செய்யலாம்!

No comments: