Monday 20 July 2015

பெருந்தலைவர்-நடிக்க தெரியாத அரசியல்வாதி

ஊரையே அடித்து உலையில் போட்டு விட்டு நல்லகுடி நாணயமாக நடிக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் இப்படியும் வாழ்ந்திருக்கிறார் ஒரு அப்பாவி! நிஜவாழ்க்கையில் என்றுமே நடிக்க தெரியாத அவருக்கு நாடகத்தில் கூட நடிக்க தெரியாமல் போய் விட்டது. இப்படி ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையில் நடந்தும் விட்டது.

காமராஜர் சிறுவயதில் ‘மார்கண்டேயன்’ நாடகத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருக்கு மார்க்கண்டேயனை காப்பாற்றும் சிவபெருமான் வேடம். பதினாறு வயது ஆனதும் மார்க்கண்டேயனுக்கு ஆயுள் முடிந்து விடும் என்பது அவனது பெற்றோருக்கு ஆண்டவன் விதித்திருந்த கட்டளை. மார்க்கண்டேயன் உயிரை பறிக்க எமன் வந்தான். மார்க்கண்டேயன் சிவபெருமான் கால்களை பிடித்து கொண்டு இறைவா.. என்னை காப்பாற்று என்று மன்றாடுகிறான்... அப்போது எமனுக்கும், சிவபெருமானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிவபெருமான் எவ்வளவோ சொல்லியும் எமன் கேட்கவில்லை. இது நாடகம் என்பதையும், தான் சிவபெருமான் வேடம் போட்டிருப்பதையும் காமராஜர் மெய் மறந்து விட்டார்.

‘‘இந்த பையனை ஒண்ணும் செய்யாதேன்னு சொல்றேன், கேட்க மாட்டேங்கிறயே’’ என்றபடி எமனாக நடித்தவரை மேடையிலேயே அடித்து நொறுக்கி விட்டார். கூட்டம் இந்த காட்சியை கண்டு ஆரவாரம் செய்தது. கொடுமையை கண்டு கொதித்து எழும் காமராஜரின் உள்ளத்தை, அப்போதே அனைவரும் பாராட்டினர். உயிர் மூச்சு இருக்கும் வரை, இது தான் அவரது போராட்ட குணமாக அமைந்து விட்டது.

No comments: