Thursday 23 July 2015

நாடார்களின் "அச்சம் அகற்றிய அண்ணல்" ஊ.பு.ஆ.சௌந்திரபாண்டியன் நாடார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை எப்படி முக்குலத்தோர் சமூகம் அவர்களின் சாதி தலைவராக போற்றுகிறதோ அப்படி நாடார்களால் போற்றப் பட வேண்டிய தலைவர் ஒருவர், நாடார் மக்களால் முகநூலில் புறக்கணிக்கப் பட்டு வருகிறார். சான்றோர் குல மக்களே நாடார் குலத்தின் ஆதர்ச தலைவராக நாம் போற்ற வேண்டியவர், நமது சாதிக்காக பாடுபட்டவர், பிராமன எதிர்ப்பு, நாடார் மகாஜன சங்கம், நாடார்கள் எழுச்சி, நாடார்கள் ஒருங்கிணைப்பு என அனுதினமும் சான்றோர் சமூகத்திற்காக பாடுபட்ட ஊ.பு.ஆ.பட்டிவீரன்பட்டி. சௌந்திரபாண்டியன் அண்ணாச்சிதான். 
பட்டிவீரன்பட்டியில் பிறந்து, தான் பிறந்த ஊர் பெயரைத் தனது பெயருடன் இணைத்த வ. பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், நாடார் மகாஜன சங்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தவர். சென்னை சட்ட சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘முதல் நாடார்’ என்ற பெருமைக்குரியவர். பெரியார் அவர்கள், உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தோடு, நாடார் சமூகத்தை இணைக்கப் பெரிதும் பாடுபட்டார். நாடார் சமூகத்தின் முடிச்சூடா மன்னனாகத் திகழ்ந்த பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் நாடார் சமூகத்திற்குப் பெரிதும் பெருமை சேர்த்த அவர்களின் செயல்கள் பற்றி அறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: 15 செப்டம்பர், 1892
பிறப்பிடம்: பட்டிவீரன்பட்டி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: 22 பிப்ரவரி, 1953
பணி: நாடார் மகாஜன சங்க தலைவர், சென்னை சட்ட சபை உறுப்பினர்
வ. பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் அருகிலுள்ள பட்டிவீரன்பட்டியில் சொந்தமான காபி தோட்டங்கள் வைத்திருந்த முக்கிய பண்ணையாள் குடும்பத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, 1892 ஆம் ஆண்டில் பிறந்தார்.
சிறு வயதிலிருந்தே சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், பிராமண ஆதிக்கத்தைப் பார்த்து வளர்ந்தார். நாடார் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டுமென்ற எண்ணம் அவரது இளம் பருவத்திலிருந்தே அவரது மனதில் விதையாய் அரும்பி, வளர்ந்து வந்தது. அப்போது சுதந்திரப் போராட்ட சூழலே நிலவியதால், அதன் தாக்கமும் அவரைப் பெரிதும் பாதித்தது.
நாடார் மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் உறுதியாக செயல்பட்ட அவர், நாடார் மகாஜன சங்கத்தின் முக்கியத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர், அப்பதவியில் 1920 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை செம்மையாக செயல்பட்டு, அவரது மக்களுக்காக பல நலத்திட்டங்களும், உதவிகளும் செய்து வந்தார். 1920 ஆம் ஆண்டில், பி. டி. ராஜன் அவர்கள் சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களை சட்டப் பேரவைக்குப் பரிந்துரைத்ததால், அவ்வாண்டில் சென்னை சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு வரை சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றிய அவர், நாடார் சமூகத்தின் நலன்களை நீதி கட்சி மற்றும் கவுன்சிலில் எடுத்துரைக்கும் நபராக செயல்பட்டார். மேலும் அவர், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகக் குழு தலைவராக 1928 முதல் 1930 வரை பணியாற்றினார். 1943 முதல் 1947 ஆம் ஆண்டு வரை, அவர் மதுரை மாவட்ட சபைத் தலைவராகவும் பணியாற்றினார்.
தான் ஒரு சிறுவனாக இருந்து போதே, சமுதாயத்தில் நடந்த முறைகேடுகளைக் கண்டு வெகுண்டெழுந்த அவர், பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரை தனது மானசீக குருவாகக் கருதி, அவர் சென்ற வழியைப் பின்தொடர்ந்தார். ஆகவே, அவர் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றும் தீவிர பக்தனாக உருவெடுத்தார். இதன் வெளிப்பாடாக அவர், புனித கயிறு புறக்கணிப்பு மற்றும் பிராமண பூசாரிகள் நிராகரிப்பு போன்ற மாறுதல்களை மக்களிடம் கொண்டுவந்தார். மேலும் அவர், சுய மரியாதை திருமணம் மற்றும் சாதிமத வேறுபாடின்றி உணவருந்தும் பழக்கத்தையும் அவரது சமூக மக்களிடம் வலியுறுத்தினார். அவரது இந்தப் புரட்சிகரமான செயல்களைக் கண்ட பெரியார் அவர்கள், 1929ல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக அவரை நியமித்தார்.
சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களது நிதிக் கட்சியின் செல்வாக்கு நாளடைவில் நலிவடைந்தது. மேலும், இந்திய தேசிய காங்கிரஸின் திட்டங்கள் மற்றும் அதில் நாடார் சமூகத்தை சேர்ந்த காமராஜர் போன்ற தலைவர்கள் வளர்ந்து வந்ததால், சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் அரசியல் வாழ்க்கை வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாக, அவரது உடல் நலம் குன்றி, அவர் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.
ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், ஆட்சியில் இருந்த போது, பட்டிவீரன்பட்டியில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளை நிறுவினார். மேலும் பல கல்வி நிறுவனங்கள் அவரது பெயரில் செயல்பட்டு வருகிறது. ‘நாடார் சமூகத்தின் முடிசூடா மன்னனாக’ இருந்த அவர், பட்டிவீரன்பட்டியில் காஃபி கூட்டுறவு பதன்படுதல் பணிகளை அமைக்கும் கருவியாகவும் இருந்தார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள முக்கியக் கடைத்தெருவான பாண்டி பஜாருக்கு, ‘சௌந்தரபாண்டிய  நாடார்’ அவர்களின் பெயரிடப்பட்டது என்று பலரும் கூறுகின்றனர். அண்மையில், அந்தக் கடைத்தெருவின் நுழைவு வாயிலில், தலைவர் சௌந்தரபாண்டிய  நாடார் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, ‘சௌந்தரபாண்டியன் அங்கத்’ என்றும் ஒரு பேர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
சௌந்திரபாண்டியன் தொடர்ந்து 12 ஆண்டுகள் சட்டமன்றத்தில் நீதிக்கட்சி உறுப்பினராகச் செயல்பட்டார். டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையின்போது, இவர் ஆளும்கட்சியின் சட்டமன்றக் கொறடாவாகப் பதவிவகித்து அமைச்சரவை தொடர வழி வகுத்தார்.

1893 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் மதுரை மாவட்டத்தில் (தற்போதைய திண்டுக்கல் மாவட்டம்) பட்டிவீரன் பட்டியில் அய்ய நாடார் – சின்னம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாகச் சௌந்திரபாண்டியன் பிறந்தார். தொடக்கக் கல்வியை தன்னுடைய வீட்டிலும், மேல்நிலைக் கல்வியை மதுரையிலும் கலை இளையர் கல்வியைச் சென்னை கிறித்துவ கல்லூரியிலும் பயின்றார்.

சௌந்திரபாண்டியன் திராவிட இயக்கங்களான சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டார். பல பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். குறிப்பாகத் தந்தை பெரியாரோடு இணைந்து செயல்பட்டார். நாடார் சமூகத்தில் அரசியலில் ஈடுபட்டுத் தலைவராக முதன் முதல் உயர்ந்தவர் சௌந்திரப்பாண்டியனார் அவர்களே.

1921 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 4 ஆம் நாள் சென்னை சட்டமன்றத்தில் “தாழ்த்தப்பட்டவர்கள் பொதுச்சாலைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை செய்வோரைத் தண்டிக்க வேண்டும்'' என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து அரசின் கவனத்தை ஈர்த்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினார். இத்தீர்மானத்தின் மீது பல தலைவர்களைப் பல மணிநேரம் உரையாடும் நிலையை உருவாக்கினார். இறுதியில் அமைச்சர் ராமராய நிங்கார் (பனகல் அரசர்) அவர்கள் தடை செய்வோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கினார்.

1925 ஆம்ஆண்டு மே திங்கள் 2 ஆம் நாள் “குடிஅரசு'' எனும் தமிழ் இதழைத் தந்தை பெரியார் தொடங்கினார். இயக்கத்துக்கு ஆங்கில இதழ் வேண்டும் என உணர்ந்து "ரிவோல்ட்' எனும் இதழ் 1928 நவம்பர் திங்கள் 7 ஆம் நாள் ஈரோட்டில் சௌந்திரபாண்டினார் தலைமையில் வெளியிடப்பட்டது.

1928 முதல் 1930 வரை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவராக இருந்தபோது பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்யத் தடை இருந்ததைக் கண்டித்ததோடு தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்யத் தடைசெய்யும் பேருந்துகளின் உரிமம் பறிக்கப்படும் என ஆணை பிறப்பித்துத் தாழ்த்தப்பட்டோரும் சமமாகப் பேருந்துகளில் பயணம் செய்ய வழிவகுத்தார்.

1929 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 17, 18 நாட்களில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டிற்குச் சௌந்திரபாண்டியனார் தலைமை தாங்கினார்.
1930 மார்ச்சுத் திங்கள் 16 ஆம் நாள் தலைச்சேரியில் (கேரளம்) தீயர், நாடார், பில்லவர் மகாநாடு நடைபெற்றது. சௌந்திரபாண்டியனார் தலைமை தாங்கினார். அங்கே தீண்டாதவர்கள் என்று அழைக்கப்படுபவர்களைத் தனது தலைமையில் அருகிலிருந்த கோயிலுக்குள் எதிர்ப்புகளையும் மீறி அழைத்துச் சென்றார்.

1936 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் “பார்ப்பனரல்லாத சமூக அபிமானிகளுக்கு விண்ணப்பம்'' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையும், பின்னர் “வெளிநாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்களுக்கு வேண்டுகோள்'' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையும் சௌந்திரப்பாணடியன், தந்தை பெரியார் இருவரும் கையொப்பமிட்டு “குடிஅரசு'' இதழில் வெளிவந்தது. இதன் மூலம் பாண்டியன் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் எந்த அளவுக்கு இணைந்து பார்ப்பனரல்லாத மக்களின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டனர் என்பதை நாம் அறிய முடிகிறது.

நீதிக்கட்சியின் 16 ஆவது மாநாடு சேலத்தில், 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 26 ஆம்நாள் கூடியது. தந்தை பெரியாரும் தளபதி சௌந்திரபாண்டியனாரும் பெரிய சாரட் வண்டியில் ஊர்வமாக அழைத்துவரப்பட்டனர். கி.ஆ.ப. விசுவநாதன், அறிஞர் அண்ணா முதலியோர் ஊர்வலத்தில் வந்தனர்.
நாம் அச்சம் அகற்றிய அன்ணலின் புகழ் தினம் பாடுவோம்!

No comments: