Thursday 30 July 2015

லஞ்ச லாவண்யங்களும் மரண தண்டனையும்!!

லஞ்ச லாவன்யமும், ஊழலும் நிறைந்த இந்நாட்டில் காவல்துறை விசாரனைகள் எந்த அளவில் இருக்கும் என்பது உலகறிந்தது! சங்கர்ராமன் கொலை வழக்கு, தா.கிருட்டிணன் கொலை வழக்கு, தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு போன்றவை நகைச்சுவையாகிப் போன கதைகள்! திருச்சியில் நேருவின் தம்பி் ராமஜெயம் கொலை வழக்கில் காவல்துறை இன்னும் குற்றவாளிகளை பல வருடங்களாக நெருங்கிக கொண்டேதான் இருக்கின்றன! லஞ்சமும் பணமும் பாதாளம் வரை பாயும் இந்த தேசத்தில் மரண தண்டனை தீர்ப்புகளில் எந்த அளவு நேர்மையை எதிர்பார்க்க முடியும்?!

///பெரும்பாலான மரண தண்டனை தீர்ப்புகளில் சாட்சிகள் உண்மையாய் இல்லாமல் காவல்துறையால் உண்டாக்கப் பட்டவையாகவே இருக்கின்றன!!\\\
///கொலை நடந்த இடங்களில் திரட்டப்படும் பெரும்பாலான பொருட்கள் கூட காவல்துறையினரால் வேண்டுமென்றே அந்த நேரங்களில் வைக்கப் பட்டவையாகவே இருக்கின்றன!!\\\

மேற்கண்ட இரண்டும் நான் என் கற்பனையால் கூறியவை அல்ல! சென்னை மற்றும் தில்லி உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பனியாற்றிய முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் கூறியது!! ஒரு முன்னால் நீதிபதியே பரிகசிக்கும் இந்த நாடடில் மரண தன்டனை தீர்ப்புகள் பெரும்பாலும் யாரோ ஒருவரால் யாரையோ பழிவாங்கும் நோக்காகவோ அல்லது அப்பாவியை சிக்க வைக்கும் படியாக இருக்கப் போகின்றனவே ஒழிய வேறென்ன?

கேவலம் 5 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் சட்டங்கள் எளிதாக வளைக்கப்படும் இந்த நாட்டில் மரண தண்டனைகளில் என்ன நேர்மையை எதிர்பார்க்க முடியும்??! போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கொலைக்கருவி என்கினறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். போதையில் வண்டி ஓட்டுபவர்களுக்கு என்ன விதமான தண்டனை வழங்கப்படுகின்றன நம் நாட்டில் என்பது உலகறிந்த விசயம்! 50 ரூபாயோ அல்லது அதிக பட்சம் 100 ரூபாயோதான் அந்த சட்டத்திற்கான விலை! இதில் மிகவும் வேதனையான சமாச்சாரம், காசு வாங்கியவுடன் அதே நபரை மீண்டும் அதே நிலையில் வாகணம் ஓட்ட அனுமதிப்பது!!

பல உயிர்களுடன் விளையாடும் இன்னொரு சமாச்சாரம் RTO அலுவலகங்களில் கேவலமாக மிக சொற்ப தொகை லஞ்சத்திற்கு வழங்கப்படும் ஓட்டுனர் உரிமங்கள். கேவலம் 500க்கும் 1000த்திற்கும் எந்த ஒரு சாலை விதிகளும் கற்பிக்கப்படாமல், தகுதி அறியப்படாமல் வழங்கப்படும் ஓட்டுனர் உரிமங்களால் ஒருவருடத்தில் லட்சக்கணக்கில் உயிர்ப்பலிகள் ஏற்படுகின்றன! மிக முக்கியமாக டாஸ்மாக்! இத போல் பகிரங்கமாகவே தனது மக்களின் உயிருடன் விளையாடும் அரசுக்கும், அதன் அதிகார வர்க்கத்திறகும் எங்கே தெரியப் போகிறது உயிரின் மதிப்பு!!

மரண தண்டனைகள் தேவையா நம் நாட்டில்?!

No comments: