Tuesday 23 December 2014

இயற்கை விஞ்ஞானி-நம்மாழ்வார் (இன்று விசாயிகள் தினம்)

விவசாயிகள் தின வாழ்த்துக்கள்

மண்ணோடும், மண்ணுக்கு போகாத அரசியல்வாதிகளோடும், மண்ணுக்கும் உதவாத அதிகாரிகளோடும் போராடும் எம் விவசாய சகோதர சகோதரிகளுக்கு விவசாயிகள் தின வாழ்த்துக்கள். எத்தனை சோதனைகள்தான் நம் விஞ்ஞானிகளுக்கு! ரியல் எஸ்டேட், மீன் பண்ணை, ஆலைகழிவு, சாய நீர் கழிவு, மீத்தேன், ஒட்டு விதைகள், பி.டி கத்திரிக்காய்.... போதும்யா சாமி!! இப்போவெல்லாம் விவசாயம் பார்ப்பவருக்கு கையும் காலும் கூட மிச்சமில்லை!! இதற்கெல்லாம் விவசாயிகளுக்கு தோள் குடுத்து போராடியவர் ஐயா நம்மாழ்வார் அவர்கள். இந்நாளில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் பற்றி சிறு குறிப்பு.

வரலாறு

நம்மாழ்வார் , தஞ்சை மாவட்டத்தில் 1938 ல் பிறந்தார். தந்தை பெயர் ச கோவிந்தசாமி. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 2007ல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் கௌரவ முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்கா(Masanabu Fukuoka) ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.



எதிர்த்துப் போராடியவை

  • பூச்சி கொல்லிகள்
  • மீத்தேன் வாயு திட்டம், இந்தியா
  • மரபணு சோதனைகள்
  • பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி
  • வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
  • விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்

களப்பணிகள்

  • சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு
  • இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல்
  • 60 க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு மாவட்டத்தில் நிறுவியுள்ளார்.
  • மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.
  • "தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருபவர். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிடுகிறார்.
  • இயற்கை உழவாண்மைகாக 2002-இல் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.

நடைப் பயணங்கள்

  • 1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக
  • 2002 - 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் - அங்கக வேளாண்மைப் பிரச்சாரம்.
  • 2003 - பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்

உருவாக்கிய அமைப்புகள்

  • 1979ல் குடும்பம்
  • 1990 லிசா (1990 – LEISA Network)
  • 1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
  • இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
  • நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
  • வானகம் (பண்ணை)
  • தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்

படைப்புகள்

  • தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
  • உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடு
  • தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
  • நெல்லைக் காப்போம்
  • வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
  • இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
  • நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
  • எந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடு
  • பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
  • நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
  • மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
  • களை எடு கிழக்கு பதிப்பகம்

விருதுகள்




தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது.

No comments: