Thursday 25 June 2015

பெருந்தலைவர் - சமூக சீர்திருத்தப் போராளி

  9 ஆண்டுகளே தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக இருந்த காமராஜரின் புகழை எவராவது மறைத்து விட முடியுமா?   அவர்  ஒரு முதலமைச்சரைப் போல செயல்படவில்லை. சமூக சீர்சிருத்தப் பேராளியாகத்தான் செயல்பட்டார். சாதி ரீதியாக அடிமைப் பட்டவர்களை கல்வி மூலம் மேலே கொண்டு வந்தார். அப்படித்தான் பெரியார் காமராஜரை பாராட்டினார்.

பசியினால் பள்ளி வர முடியாதவர்களை, விரும்பாதவர்களை பல திட்டங்கள் மூலம் வரவழைத்தார்.

ஊழல் என்பதை அண்டவிடவில்லை என்பது ஆச்சரியமல்ல. அவரே அதற்கு முன் உதாரணமாக இருந்து அவர் இறந்த பிறகு அவரின் இரண்டு வேஷ்டி இரண்டு சட்டைகளைத்தான் தமிழ்நாட்டிற்கு சொத்தாக விட்டுச் சென்றார்.

இன்று வரையிலும்  தமிழ்நாட்டில் அவர்  உருவாக்கிய மாற்றங்களைப் போல செய்ய வாய்ப்புள்ளதா? இல்லை எவருக்கேனும் செய்யத்தான் மனம் வருமா?

ஆரம்ப பள்ளிக்கூடங்களை  இனி எந்த கிராமத்திலும் திறக்க தேவையதில்லை.  வேண்டிய அளவுக்கு திறந்தாகி விட்டது. அந்த எண்ணிக்கை முடிவுக்கு வந்து விட்டது.  இனி அடுத்த கட்ட கல்விக்கூடங்களை திறக்க நாம் பாடுபட வேண்டும் என்றாரே? 

சாதிகளை ஒழிக்க பெரியார் பேசிக்கொண்டிருந்த போது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சமூகத்தில் ஒடுக்கி வைக்கப்பட்ட அத்தனை மனிதர்களையும் கல்வி மூலம் மேலே கொண்டு வந்து நிறுத்தினாரே பெருந்தலைவர். 

தமிழ்நாட்டில் திமுக முதல் முதலாக ஆட்சியைப் பிடித்தது.

"நாம் வெற்றிவிழா கொண்டாடக்கூடாது. மாபெரும் தலைவர் காமராஜர். அவர் தோற்ற நேரத்தில் நான் விழா கொண்டாடுவது முறையல்ல" என்று அண்ணா விழா கொண்டாட்டங்களை  நிறுத்தினார்.

இதற்கு மேலும் காமராஜர் குறித்து அண்ணா தன் தம்பிமார்களுக்கு சொன்ன வார்த்தை  "நான் உங்களைத் தான் வளர்த்தேன். ஆனால் காமராஜர் தான் தமிழ்நாட்டை வளர்த்தார்" என்றார்.

நேரு இறந்த போது "அவர் சவ ஊர்வலம் முடியும் வரைக்கும் எவரும் அடுத்த பிரதமர் குறித்து பேசக்கூடாது" என்று அனைவரையும் அடக்கி வைத்தவர் காமராஜர். இந்திரா காந்தி இது குறித்து பேசிய போது கூட "உனக்கு ஒன்னும் தெரியாது. நீ பேசாமல் வீட்டில் போய் இரு" என்றார்.

இந்திராவை பிரதமராக கொண்டு வந்ததும் காமராஜர் தான்.

எமர்ஜென்சி காலத்தில் கூட இந்திரா காந்தி கைது செய்ய ரொம்பவே பயந்து யோசிக்க வைத்த ஆளுமை கொண்டவர் காமராஜர்.

No comments: