Friday 27 March 2015

என்னை கவர்ந்த பாடல் வரிகள் - ஒவ்வொரு பூக்களுமே

கடுமையான தோல்விகளை கண்டு மனம் துவண்டு, விளிம்பில் நின்ற காலக்கட்டங்களில் கூட நம்பிக்கை ஏற்படுத்திய பாடல் வரிகள் இவை. இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என முடிவு செய்து மூடி விடலாம் என முடிவு செய்த பொழுதெல்லாம் என மனதை திறந்துவிட்ட பா.விஜய்யின் வைர வரிகள். இந்த பாடலின் சிறப்பு என பல உண்டு. இந்த பாடலை கேட்க மட்டுமல்ல பார்த்தாலும் நம்மை நெகிழச் செய்துவிடும்! இந்த பாடலை கேட்கும் போதும் சரி, பார்க்கும் போதும் சரி என்னை அறியாமல் புல்லரித்துவிடும்! முக்கியமாக இந்த பாடல் வரிகள் தெளிவாக காதில் விழும்படி அருமையாக இசையமைத்த பரத்வாஜ் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்! மனம் வெதும்பி இருந்தாலும் சரி, வாழ்வின் விளிம்பில் இருந்தாலும் சரி நம் தோல்விகளை புரட்டிப் போடும் வல்லமை படைத்த பாடல்களில் இதுவும் ஒன்று!! ஆர்ப்பாட்டமில்லாமல் மனதை வருடி, என் தாயோ, என் மனைவியோ எனக்கு ஆறுதலும் தெம்பும் கூறுவது போன்ற சூழலை தந்த பாடல் என்றால் மிகையாகாது! பா.விஜய்க்கு விருது வாங்கித் தந்த பாடல் மட்டுமல்ல, இது அவருக்கு ஒரு மணி மகுடமே!!



ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயின்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சை போல சுவாசிப்போம்
லச்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோட போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வி இன்றி வரலாறா.
துக்கம் இல்லை என்ன தோழா
ஒரு முடிவிருந்தால்.. அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

No comments: